search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Economy"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது.
    • இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது.

    சென்னை :

    சென்னை எழும்பூரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எப்.ஐ.சி.சி.ஐ. அமைப்பு சார்பில் தொழிலதிபர்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:-

    2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் உயர வாய்ப்புள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் நிலை 9.1 சதவீதமாக இருந்தது.

    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மற்ற நாடுகள்போல நமது நாடும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருந்தது என்றால், அந்த நிலையை சமாளிக்க அரசின் செலவையோ, மத்திய வங்கியின் வட்டி விகிதத்தையோ, பணப் புழக்கத்தையோ கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கவில்லை.

    முன்னெச்சரிக்கையுடன், எந்த மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டும் உதவிகளை அளிப்பதற்காக இலக்கை நிர்ணயித்து, நிதானத்துடன் செயல்பட்டோம். இன்றுள்ள விலைவாசி உயர்வு, அரசின் நிதிநிலை ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது. இந்த ஆரோக்கியமான நிலைதான் வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையாக இருக்கும்.

    இந்தியாவில் உள்ள வங்கிகள், பெரு நிறுவனங்கள் போன்றவை 2011-2020-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் மிக அதிகமாக முதலீடு செய்தன. வங்கிகள் அதிகமாக கடன்களை வழங்கின. இதனால் எழுந்த பிரச்சினைகளை சமாளிக்க கடந்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் கடன் நிலவரமும் முன்பு இருந்ததைவிட குறைந்துள்ளது.

    எனவே அவர்கள் மேற்கொண்டு கடன்களை வாங்கி முதலீடு செய்யும் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டுள்ளது. இனி வரும் 10 ஆண்டுகளில் வங்கிகளின் கடன் அளிக்கும் மனப்பான்மையும், பெரு நிறுவனங்கள் கடன் பெறும் நிலையும் சாதகமாக அமைந்து, எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்.

    அடுத்ததாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றொரு அம்சம் என்னவென்றால், மென்பொருள் முதலீடுகளில் சிறிய தொழில் நிறுவனங்கள் கூட உலகளாவிய சந்தையில் பங்கேற்க முடியும் என்பதுதான். இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு ஏதுவாக அமைகிறது.

    எந்தவொரு நிறுவனமும் அயல் நாடுகளுக்கு சென்றுதான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது. எனவே இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நமது நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு 0.5 சதவீதம் பங்களிக்க வாய்ப்புள்ளது

    இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பொருளியல் சீர்திருத்தங்கள், கொரோனா காலகட்டத்தில் செய்த மிதமான செலவுகள், மத்திய வங்கிகளின் நிதி நிலைமை மற்றும் செயல்பாடுகள், பெரு நிறுவனங்களின் நிதி நிலைமை, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை மொத்தமாக கணக்கிட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை உதவிகரமாக இருக்கும்.

    இதனால் இனிவரும் 8 ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 6.5 சதவீதம் வளர வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அளவில் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டால் இந்த 6.5 சதவீதம் என்பது 7.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
    • நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன.

    மும்பை :

    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி நடந்தது. அதில், கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசிய உரை, நேற்று வெளியிடப்பட்டது. அதில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-

    கலவையான அறிகுறிகள் தென்பட்டாலும், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.

    அதையும் மீறி, நடப்பு நிதிஆண்டில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030-ம் ஆண்டுக்குள், இதை 2 டிரில்லியன் டாலராக (ரூ.160 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம்.

    உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக (ரூ.2,400 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர் வரை (ரூ.3 ஆயிரத்து 600 லட்சம் கோடி) உயரக்கூடும்.

    கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது.
    • இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான் காரணம் என கூறப்படுகிறது.

    வாஷிங்டன்:

    கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அலை அலையாக தாக்கும் கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பிறகு தடுப்பூசியின் பயன்பாடு அமலுக்கு வந்தபின் பொருளாதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றன.

    இந்நிலையில் 3 கொரோனா அலைகளை சந்தித்து இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டும் வருவதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது. அதன்பின் 2021-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி சென்றது. தற்போது 2021-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவிதமாக உயர்ந்துள்ளது.

    இதற்கு காரணம் 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான்.

    தடுப்பூசி பயன்பாடு பின்னடைவில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது. 2022-ம் ஆண்டு தொடங்கியது முதல் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையான ஒமைக்ரான் பரவத்தொடங்கியது.

    ஆனால், ஒமைக்ரானால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. அதேபோல், ஒமைக்ரான் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தைவில்லை.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜி.எஸ்.டி. அமல் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. #WorldBank #IndianEconomy
    வாஷிங்டன்:

    தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்களில் இருந்து இந்திய பொருளாதாரம் விடுபட்டு இருப்பது தெரிவதாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.



    2017-18-ம் நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டி இருந்ததாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் இன்னும் வேகமெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ள இந்த அறிக்கை, நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை எட்டும் எனவும் கூறியுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு வலுவான தனியார் செலவினம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவை முக்கியமான காரணிகளாக இருக்கும் என கருதப்படுகிறது. #WorldBank #IndianEconomy

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலகின் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #pmmodi #Indianeconomy
    புதுடெல்லி:

    ‘முன்னேறு’ (MOVE) என்னும் தலைப்பில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் உலகளாவிய முதல் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    ‘இந்தியா முன்னேறுகிறது. நமது பொருளாதாரம் முன்னேறுகிறது. உலகின் வேகமாக வளர்ந்துவரும்  மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறுகிறது. நமது பெருநகரங்களும், நகரங்களும் முன்னேறுகின்றன.

    நாம் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கி வருகிறோம். நமது உள்கட்டமைப்பு வசதிகள் முன்னேறுகின்றன. துறைமுகங்கள், ரெயில் பாதைகள், விமான நிலையங்கள், சாலைகள் போன்றவற்றை நாம் அதிவேகமாக அமைத்து வருகிறோம்.

    பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து வசதிகள் அதிமுக்கியமானது. போக்குவரத்துக்கான வசதிகள் மூலமாக பயணம் செய்யும் சிரமங்களும், சரக்கு போக்குவரத்தில் உள்ள இடையூறுகளும் குறைந்து, பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது.

    ஜி.எஸ்.டி. மூலம் நமது சரக்கு போக்குவரத்து மற்றும் பண்டகச்சாலைகளை முறைப்படுத்த முடிகிறது. நமது சரக்குகளும் முன்னேறி கொண்டிருக்கின்றன. நமது சீர்திருத்தங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. தொழில் செய்வதற்கு உகந்த இடமாக இந்தியாவை மாற்றியுள்ளோம். நமது வாழ்க்கை முன்னேறுகிறது.

    வீடுகள், கழிப்பறைகள், சமையல் எரிவாயு, வங்கி கணக்குகள் மற்றும் வங்கிக்கடன்கள் மக்களுக்கு கிடைத்து வருகின்றன' என தனது உரையின்போது மோடி குறிப்பிட்டார்.  #pmmodi #Indianeconomy 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைவதாக கூறப்பட்டாலும், 2014-ம் ஆண்டிலிருந்து அது தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேசியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  பொருளாதார நிபுணர்  அமர்த்தியா சென் கூறியதாவது:-

    இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்ட போதிலும், 2014 ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

    20 ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதாரத்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது. 

    மக்களிடையே நிலவும் பொருளாதார சமத்துவமின்மையைக் கண்டுகொள்ளாமல் அரசு விலகியிருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்கிறார்கள் என கூறினார். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    2017-18ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Indianeconomy #GDP
    புதுடெல்லி :

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் குறைவான ஜிடிபி வளர்ச்சி இதுவாகும். 

    ஆனால், கடந்த 7 காலண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டான (ஜனவரி- முதல் மார்ச் வரை) ஜிடிபி 7.7 சதவிகிதமாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ப்ளூம்பர்க் நிதி நிறுவனம் கணித்த 7.4 என்ற ஆளவை விட 0.3 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் ஜிடிபி முறையே 5.6 %, 6.3 %, 7.0% என இருந்தது.

    கடந்த நிதியாண்டில் நாட்டின், விவசாயம் 4.5 %, உற்பத்தி 9.1 % மற்றும் கட்டுமான துறைகள் 11.5 % என சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதர வளர்ச்சியில் இந்த மூன்று துறைகளும் முக்கிய பங்காற்றியுள்ளதாக  புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றம், அலுமினியம் மற்றும் எக்கு பொருட்களுக்கு அமெரிக்க அதிகளவு வரி விதிப்பு, மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு 5 % குறைந்துள்ளது. #Indianeconomy #GDP
    ×