என் மலர்
நீங்கள் தேடியது "தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்"
- உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்திய பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், "தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த நிதியாண்டில் (2025-26) நம் நாட்டின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.357 லட்சம் கோடி) கடக்கும்" என்று தெரிவித்தார்.
- வேலையில்லாமைப் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்
- பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்
வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனந்த நாகேஸ்வரன் நேற்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"வேலையில்லாமைப் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்
இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பா ஜ க அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்
வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.






