என் மலர்
நீங்கள் தேடியது "உள்நாட்டு உற்பத்தி"
- உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்திய பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், "தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த நிதியாண்டில் (2025-26) நம் நாட்டின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.357 லட்சம் கோடி) கடக்கும்" என்று தெரிவித்தார்.
- சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
- முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
* இயற்கை பேரிடர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு 5 ஆண்டு காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத சூழலிலும் பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் மத்திய அரசின் நிதி இல்லாமலேயே தி.மு.க. அரசு தமிழகத்தை மீட்டுள்ளது.
* கொரோனா கால நெருக்கடிகள், நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
* 3.49% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 1.17%, 4.91% ஆக இருந்த நிதி பற்றாக்குறை 3% ஆக குறைந்துள்ளது.
* சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 0.07% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.19% ஆக உயர்த்தி உள்ளோம்.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம். இது 10 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்சமாகும்.
* தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது.
* 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 10.2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 3.28 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
* தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட்கள், 14 நியூ டைடல் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.
* மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்.
* மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம்.
- வளர்ச்சி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் 6.4 சதவீத வளர்ச்சி மற்றும் பொருளாதார ஆய்வின் கணிப்பை விட குறைவாக உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2023-24-ம் நிதியாண்டிற்கான ஆய்வு அறிக்கையை கிரெடிட் ரேட்டிங் இன்பர்மேசன் சர்வீஸ் ஆய்வு மையம் மேற்கொண்டது. அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையில் 2023-24-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் 6.4 சதவீத வளர்ச்சி மற்றும் பொருளாதார ஆய்வின் கணிப்பை விட குறைவாக உள்ளது.
இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறும்போது, 2023-ம் நிதியாண்டில் தேசிய புள்ளியியல் அமைப்பு மதிப்பிட்டுள்ள 7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்தை எட்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளனர்.
உலக பொருளாதாரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். அதோடு கச்சா எண்ணை மற்றும் பொருட்களின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது
- மொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் வேளாண்துறை வளர்ச்சி சரிந்ததே காரணமாக உள்ளது.
நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [ஜிடிபி] வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த 5 காலாண்டுகளில் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சியாகும். மேலும் கடந்த நிதியாண்டில் 8.2 ஆக இருந்த ஜிடிபி வளர்ச்சி தற்போதைய காலாண்டில் குறைந்துள்ளது.
மொத்த ஜிடிபி வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 3.7 சதவீதமாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி நடப்பு காலாண்டில் 2.0 சதவீதமாகக் குறைந்துள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் உற்பத்தித் துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் இடையேயான காலாண்டிலிருந்த 6.2 சதவீத வளர்ச்சி 0.8 சதவீதம் அதிகரித்து நடப்பு காலாண்டில் 7.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் வரும் திங்கள்கிழமை பங்குச்சந்தை சரிவை சந்திக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.






