என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம்- அமைச்சர் தங்கம் தென்னரசு
- சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
- முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
* இயற்கை பேரிடர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு 5 ஆண்டு காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத சூழலிலும் பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் மத்திய அரசின் நிதி இல்லாமலேயே தி.மு.க. அரசு தமிழகத்தை மீட்டுள்ளது.
* கொரோனா கால நெருக்கடிகள், நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
* 3.49% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 1.17%, 4.91% ஆக இருந்த நிதி பற்றாக்குறை 3% ஆக குறைந்துள்ளது.
* சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 0.07% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.19% ஆக உயர்த்தி உள்ளோம்.
* உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம். இது 10 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்சமாகும்.
* தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது.
* 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 10.2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 3.28 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
* தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட்கள், 14 நியூ டைடல் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.
* மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்.
* மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






