என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு"
- படிவங்களை நிரப்பி கொடுக்க கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை போன்ற காரணங்கள் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கம்
தமிழ்நாடு உட்பட அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் பல மாநிலங்களில், எஸ்ஐஆர் நடைமுறையை கையிலெடுத்தது தேர்தல் ஆணையம். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் வாக்களர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.
இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க இன்றுதான் (டிச.4) கடைசிநாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 77.52 லட்சம் பேர் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாக்களர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை மற்றும் பிற காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்கங்களைக் காண்கின்றன. சென்னை மற்றும் பிற நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்க விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தங்கள் பெயர் தவறான காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது என எண்ணும் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
- மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.1ம் தேதி) தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து எம்.பி. நீரஜ் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
அதில் அவர்," நாடு முழுவதும் 2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ம் ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
- சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் இன்று மோதினர்.
- இந்த ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 72 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.'
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவரில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணி விளையாடியது.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ஹிம்மாட் சிங் வேகமாக சுற்றினார். அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற ஷாருக்கானிடம் சென்றது. அதனை பார்த்த அவர் உடனே முன்னாடி வந்தார். ஆனால் பந்து பின் நோக்கி செல்வதை அறிந்து மீண்டும் பின்னாடி போய் பந்தை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு சிக்சர் ஆனது.
இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
- கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும்.
- தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்.
தஞ்சாவூர்:
2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலக கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளது.
இதற்கான உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சி இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதன் முறையாக ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பெருமுயற்சி மேற்கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி.
உலகக்கோப்பை நடத்துவதன் மூலம் உலக நாடுகளின் பார்வை தமிழகம் மீது திரும்பி உள்ளது. இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழகம் மாறி உள்ளது.
பொதுவாகவே மழைக்காலம் என்று சொன்னால் எந்தெந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பள்ளிகளில் தண்ணீர் தேங்க கூடாது, அப்படி தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும், கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்துகள் , கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும் பொது எதிரியாக இருக்கக்கூடிய கொள்கை எதிரியாக இருக்கக் கூடியது யார் என்பது நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு உள்ளது. ராகுல்காந்தி விஜயிடம் பேசியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
- கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
- தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை:
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.
பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.
இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.
அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.
அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.
அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
- 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- தமிழ்நாட்டில் 5,90,13,184 SIR படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 92.04% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மொத்தத்தில் 6,41,14,582 கணக்கீட்டு படிவங்கள் அச்சிடப்பட்டது. இன்றுவரை, 5,90,13,184 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 92.04% படிவங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களில் தேவையான தொடர்புடைய விவரங்களை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை சேகரிக்க வீடு தோறும் வருகை தரும் பொழுது வாக்காளர்கள் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவையான விவரங்களை படிவங்களில் நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்வார்கள். இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு வாக்காளர்கள் தங்கள் ஒத்துழைப்பை அதிகாரிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தவேண்டும்.
- வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
SIR படிவத்தில் நிரப்ப 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது.
இவ்வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் (www.voters.eci.gov.in) "Search your name in the last SIR" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் "தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் "பெயர் மூலம் தேடுதல்" அல்லது "EPIC எண் மூலம் தேடுதல்" என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம். " பெயர் மூலம் தேடுதல்" என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர், சட்டமன்ற தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்.
இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் (online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 5 கோடி SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
- பாஜக கூட பீகாரில் நடந்த வழக்கில் SIR-க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்லத் தயங்கியது.
- அதிமுக மட்டும் தான் SIR-க்கு ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்தியாவிலேயே SIRக்கு ஆதரவாக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஒரே கட்சி என குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்து கொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய திருநாட்டில், நமது மக்களின் மிக முக்கிய உரிமையான வாக்குரிமை யை உறுதி செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) எதிர்க்கும் நிலையில், ஒரே ஒரு கருப்பு ஆடு இந்த மக்கள் விரோத கொடூர செயலை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது !
அது வேறு யாரும் அல்ல, ஒன்றியத்தை ஆளும் பாசிச கூட்டத்தின் பிரதான அடிமை கட்சி அதிமுக தான் !
இதன் மூலம் "இந்தியாவிலேயே SIR-க்கு ஆதரவாக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஒரே கட்சி" என்று குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்துகொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால் பாஜக கூட பீகாரில் நடந்த வழக்கில் SIR-க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்லத் தயங்கியது !
ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒன்றிய அரசின் கூட்டணி கட்சியாக இருந்தும், SIR குறித்து தங்களது கவலைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளது !
தெலுங்கு தேசம் கட்சியும் (TDP) இந்த சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை சந்தேகிக்கப் பயன்படுத்தப்படக் கூடாது எனத் தெளிவாக கருத்து தெரிவித்து ஒரு "க்" வைத்துள்ளது.
ஆனால் இத்தகைய சூழ்நிலையில் கூட பாஜக வின் கைப்பாவையாக திகழும் அதிமுக மட்டும் தான் நாட்டிலேயே SIR-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் அவர்கள் குறைந்தது மௌனமாகக்கூட இருந்திடாமல், முன்பு 2016-2021 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்ததுபோல முழுமையான அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளனர் !
தமிழ்நாடு மக்களுக்கு அதிமுக செய்திருக்கும் மிக நீண்ட துரோகப் பட்டியலில் இது இனி முதல் 3 இடங்களை பிடிக்கும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது அதிமுக.
ஆனால் நமக்கு கவலை வேண்டாம் ! எது வந்தாலும் தமிழ்நாட்டின் நலனையும் இங்கு வாழும் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து நிற்கும் மகத்தான தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்தின் கொடூர உள்நோக்கத்தை முறியடித்து, தமிழ் மக்களின், குறிப்பாக நமது சிறுபான்மை மக்களின், ஜனநாயக உரிமைகளை நிச்சயம் பாதுகாப்பார் !
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணையோடு, அனைத்து மக்களின் வாக்குரிமைகளை பாதுகாப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.
- நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, முசாபர்பூரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அதில் அவர் ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை பேசினார்.
அப்போது, 'கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த மக்களை திட்டுகிறார்கள். அவர்களின் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த மக்களை துன்புறுத்துகிறார்கள்' என்று பேசியிருந்தார்.
பிரதமரின் இந்த பேச்சு தமிழக கட்சித்தலைவர்களை கொதிப்படைய செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி சொன்னது போல, தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்க்கும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:-
சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தன்வீர் கூறியதாவது:-
நான் 5 ஆண்டுகளாக கட்டிட வேலை பார்க்கிறேன். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்தேன். வாரத்துக்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் போதும். ஒரு நாள் விடுமுறை. அந்த நாளில் எங்களை வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டார்கள். விருப்பம் இருந்தால் வேலை பார்க்கலாம்.
ஒரு நாள் சம்பளம் ரூ.1,000. எங்களுடன் சேர்ந்து தமிழ் ஆட்களும் வேலை செய்கிறார்கள். என்னை போல, பலர் இங்கு தங்கி பணி செய்கிறார்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த மாநிலத்தில் எங்கள் வீட்டில் எப்படி இருந்து வேலை பார்ப்போமோ? அதேபோல்தான் இங்கு இருந்து வேலை பார்க்கிறேன்.
சென்னையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் பப்பு குமார்:-
சென்னைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஓட்டலில் முதலில் 'சப்ளையராக' பணியை தொடங்கி, இப்போது பரோட்டா மாஸ்டராக இருக்கிறேன். கடை உரிமையாளர் தங்குவதற்கு வசதியும் செய்து கொடுத்து இருக்கிறார். சொந்த ஊரில் இருப்பது போலவே உணருகிறேன்.
கடைக்கு சாப்பிட வருபவர்களும், கடை உரிமையாளர்களும் கடுமையாக நடந்தது கிடையாது. எங்களை யாரும் துன்புறுத்தவில்லை. எப்போது லீவு கேட்டாலும் உரிமையாளர் முகம் சுழிக்காமல் கொடுப்பார். தமிழ் ஆட்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்களோ? அதே சம்பளத்தைதான் எங்களுக்கு கொடுக்கிறார். இங்கு வந்து அழகாய் தமிழ் பேசக்கற்றுக்கொண்டுவிட்டேன்.
சென்னையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ஷரீப், சபீர், காசிம் ஆகியோர் கூறியதாவது:-
சென்னை எங்கள் ஊரை விட அருமையாக இருக்கிறது. பருப்பு சாதம், சப்பாத்தி என இருமாநிலங்களுக்கும் பொதுவான உணவுகள் நிறைய இருக்கின்றன. தமிழக மக்களும் எங்கள் மீது அன்பு செலுத்தி, வேலை தந்து அழகு பார்க்கிறார்கள். கொடுக்கும் வேலையை நாங்களும் சலிக்காமல் திறம்பட செய்துகொடுக்கிறோம். அதனால் எங்கள் மீது அவர்களுக்கு நன்மதிப்பு உருவாகியிருக்கிறது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார்:-
நான் 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கி ஓட்டலில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் சாதாரண ஆளாகவே வந்தேன். இப்போது மாஸ்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். வேலையை நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இங்கு சூழல் இருக்கிறது. எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,100 சம்பளம் கிடைக்கிறது. கடை விடுமுறையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தவறாமல் வேலைக்கு செல்வேன். கடைக்காரரும் என்னை கனிவோடு பார்த்து கொள்கிறார். நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.
சென்னையில் உள்ள பீகார்வாசிகள் நலச்சங்கத்தை சேர்ந்த ஆசிஷ்குமார் கூறியதாவது:-
பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே வசித்து வருகிறார்கள். கட்டுமான தொழிலில் தொழிலாளியில் இருந்து, மத்திய அரசு பணியில் அதிகாரி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஏராளமானோர் இருக்கிறார்கள். நாங்கள் 3-வது தலைமுறையாக சென்னையில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை எந்த பிரச்சனையும் நாங்கள் சந்தித்தது இல்லை. யாரும் பீகாரை சேர்ந்தவர்களை துன்புறுத்தி ஒடுக்கவும் இல்லை. தமிழக மக்கள் ஒருதாய் பிள்ளைகளாகவே எங்களை பாவித்து, சகோதரத்துவத்துடன் மிகவும் அன்பாக பழகுகிறார்கள்.
அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ராமபிரபு:-
பீகார் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கட்டுமான வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்துதான் வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலோ அல்லது தனியாக ஓரிடத்திலோ தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். தங்குவதற்கு மட்டும் ஏற்பாடு செய்வது இல்லை. உணவுக்கும் தேவையான வசதிகளை நேர்த்தியாக செய்து கொடுக்கிறோம். இதுவரை எந்த புகாரும் அவர்கள் தெரிவித்தது இல்லை. கட்டுமானப் பணிகளுக்காக வரும் இத்தகைய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சவுகரியமாகவே இருக்கிறார்கள்.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் குஷ்புகுமாரி:-
எனது கணவர் சந்தோஷ்குமார், கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நான் திருப்பூர் காட்டுவளவு பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்துள்ளேன்.
எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை செல்கிறது. நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர். பக்கத்து வீட்டில் உள்ள பெண்களும் அக்காள், தங்கை, அம்மா போன்று பழகி வருகின்றனர். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். சொந்த மாநிலத்தை விட இங்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம்.
திருச்சியில் வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி அகிலேஷ்:-
பீகாரில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடையாது. சாதிய பிரச்சனைகளும், ரவுடியிசமும் அங்கு நிறைய உண்டு. அங்கே ஏதாவது வேலை பார்த்தாலும் வருமானம் மிகவும் குறைவு. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்ற எந்த பிரச்சனையையும் நான் கண்டதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. உணவு, தங்குமிடம் என அனைத்தும் செய்து கொடுக்கிறார்கள். இங்கு மனநிறைவான வேலை. கைநிறைய சம்பளம் கிடைக்கிறது. எங்களுக்கு அதுவே போதும்.
மதுரையில் சாலையோரம் ஹெல்மெட் விற்கும் பகராஸ் என்ற வாலிபர் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. எங்களுக்கு பிரச்சனை என்றால் சக வியாபாரிகள் ஆதரவாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். அனைவரும் எங்களுடன் உறவினர் போல் பழகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் கோபால் குமார் சிங் கூறியதாவது:-
நான் ராஜபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் 2 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இங்கு எந்த பயமும் இல்லாமல் வேலை பார்த்து வருகிறேன். வேலை பார்க்கும் இடத்திலும் எந்த இடையூறும் கிடையாது. எனது உடன் பணி புரியும் தமிழக தொழிலாளர்கள் என்னை சகோதரரை போல் நடத்துகின்றனர். பீகாரைவிட ராஜபாளையத்தில் வேலை செய்து வருவதை மகிழ்ச்சியாக உணருகிறேன்.
நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தினேஷ்:-
நாங்கள் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்திற்கு வந்து இங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் பணியாற்றும் நிறுவனம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. நாங்கள் நலமாக உள்ளோம்.
நெல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வித்யாசாகர்:-
நாங்கள் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் நடந்து வரும் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் எங்களுக்கு முன்பாகவே பல மாதங்களுக்கு முன்பு இருந்தே இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
இவ்வாறு தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கேரளாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
- முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அடுத்தாண்டு கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள 31.34 லட்சம் மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புகளை முடித்த பிறகு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அல்லது போட்டித் தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் இந்த திட்டத்தில் பலன்பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் ஐந்து லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாக பதிவு செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.
இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டி மீட்டர் மழை பெய்த நிலையில் இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்துள்ளது.






