என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transfer"

    • ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்.
    • சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    பெருநகர சென்னை காவல்துறையில் நிர்வாக நலன் கருதி, ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

     

    • இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம்
    • தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக மாற்றம்

    தமிழ்நாட்டில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராகவும்,

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனராக இருந்த கிறிஸ்துராஜ், தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராகவும், சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் செயலாளர் உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



     


    • சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
    • மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு கூறி வந்ததாக தெரிகிறது. சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இது சம்பந்தமாக தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்.
    • சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம்.

    ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. ஆக லட்சுமி, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆக அனிஷா ஹுசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜவஹர், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா, பதவி உயர்வு பெற்ற சஜிதா சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சிபிசிஐடி-யில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு அதன் எஸ்.பி.யாக சஜிதா ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




     


    • திருச்சி டிஐஜி வருண்குமார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

    இதுகுறித்த உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டார். 

    அதன்படி, திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

    டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி  ஆயுஷ்மான் திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக  நியமிக்கப்பட்டுள்ளார். 

      

    • சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, சிவகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கொளத்தூர் துணை ஆணையராக இருந்து தற்காலிக விடுப்பில் உள்ள பாண்டியராஜன் டிபிஎஸ் பட்டாலியன் எஸ்.பி.ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமலா பால் மேலாளர் மரண விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளானவர் பாண்டியராஜன்.

    சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல் எஸ்பியாக விமலா மற்றும் வேலூர் மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த தர்மராஜன் வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    மகேந்திர குமார் ரத்தோட் காவல்துறை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஸ், ராணிப்பேட்டை எஸ்பியாக அய்மன் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம் காவல் ஆணையராக இருந்த பிரவீன் குமார் அபிநபு தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வேலூர் சரக டிஐஜியாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக ருஇந்த சாமுண்டீஸ்வரி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராமில் உள்ள ஒரு நில ஒப்பந்தத்தை அசோக் கெம்கா ரத்து செய்தார்.
    • பிரதமர் மோடி தேர்தல் பேரணிகளில் இந்த நில ஒப்பந்தம் குறித்து விமர்சித்தார்.

    தனது 34 ஆண்டுகால சேவையில் 57 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 1991 பேட்ச் ஐஏஎஸ் ஆன அசோக் தற்போது அரியானா, போக்குவரத்துத்துறை கூடுதல் துணை செயலாளராக உள்ளார். கடந்த டிசம்பர் 2024 இல் அவர் இந்த பதவிக்கு மாற்றப்பட்டார்.

    அசோக் கெம்கா நேர்மைக்கும் துணிச்சலான முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர். 2012 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராமில் உள்ள ஒரு நில ஒப்பந்தத்தை அசோக் கெம்கா ரத்து செய்தார்.

    இந்த ஒப்பந்தம் ராபர்ட் வதேராவிற்கும் DLF நிறுவனத்திற்கும் இடையே 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதை ரத்து செய்ததன் மூலம் அசோக் கெம்கா கவனம் பெற்றார்.

    நில ஒப்பந்தத்தை ரத்து செய்ய கெம்கா உத்தரவு பிறப்பித்தபோது, அந்த நேரத்தில் அரியானாவில் காங்கிரஸ் அரசு இருந்தது. பூபேந்திர சிங் ஹூடா முதலமைச்சராக இருந்தார்.

    இதற்குப் பிறகு, பாஜக இந்த நில ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு கையில் எடுத்தது. பிரதமர் மோடி தேர்தல் பேரணிகளில் இந்த நில ஒப்பந்தம் குறித்து விமர்சித்தார்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலாக செயல்பட்ட அசோக் கெம்கா முந்தைய ஆட்சிலும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாறிய பிறகும் மொத்தமாக இதுவரை 57 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில், அவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்துத் துறைக்குத் திரும்பினார். முன்னதாக 2014 ஆம் ஆண்டு, போக்குவரத்து ஆணையராக இருந்தபோது, பெரிய வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்க அவர் மறுத்துவிட்டார். இதன் பின்னர் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    2024 ஆம் ஆண்டு, கெம்கா முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி, தன்னை விஜிலென்ஸ் துறையில் பணியமர்த்தக் கோரினார்.அந்த கடிதத்தில், "எனது சேவையின் முடிவில், ஊழலுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்துவதாக நான் உறுதியளிக்கிறேன்" என்று அவர் எழுதியிருந்தார்.

    இந்நிலையில் நாளை பணி ஓய்வு பெற உள்ள அசோக் கெம்காவுக்கு அரியானா ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்று மாலை சண்டிகரில் பிரியாவிடை விழா ஏற்பாடு செய்துள்ளது.  

    • மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம்.
    • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 10 காவல் அதிகாரிகள் பணியிட் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஹரிகிரணம் பிரசாத் மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    • பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தர விட்டுள்ளார்.

    இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு தனி தாசில்தார் பார்த்த சாரதி பரமக்குடி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தமீம் ராசா, ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தாராக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தார் தமிழ்செல்வி, திருவா டானை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்வேல் முருகன் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளர் சுரேஷ் குமார், ராமநாதபுரம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முரு கேசன், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஞானசிரோன் மணி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய சேகர், பரமக்குடி நகர நிலவரி திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சேதுராமன், ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி, கடலாடி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முருகவேல் உப்பூர் அனல் மின் திட்ட அலகு 2 நில எடுப்பு தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய உமா மகேஸ்வரி, ராமேசுவரம் தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராகவும், இங்கு பணியாற்றிய சுகுமாறன், பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோயில் நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார்.
    • சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த விஜய்பாபு சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சேலம் ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அரசா ணையில் கூறப்ப ட்டுள்ளது.

    • புதிய பணியிடத்தில் சேர தவறினாலோ தமிழ்நாடு குடிமை பணிகள் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    நிர்வாக வசதிகளுக்காக வருவாய் ஆய்வாளர்கள் இடம் மாறுதல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், உள்வட்ட வருவாய் ஆய்வாளர் 21 பேரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டுள்ளார்.

    நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் பணி நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும், மேல் முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    இடம் மாறுதலை தவிர்ப்பதற்காக முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் விடுப்பில் சென்றாலோ அல்லது புதிய பணியிடத்தில் சேர தவறினாலோ தமிழ்நாடு குடிமை பணிகள் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள உள் வட்ட வருவாய் ஆய்வாளர்கள், புதிய பணியிடத்தில் இணையும் வகையில் அவர்களை உடனடியாக விடுவித்து, அவ்விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×