search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Inspectors"

    • தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி வள்ளியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ஸ்டீபன் ஜோஸ் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை டவுன் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்து வரும் சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நெல்லை மாநகரத்திற்கும், நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர்:

    காவல்துறையில் மேற்கு மண்டல அளவில் 48 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகர வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த தெய்வமணி கோவை மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த செந்தில்பிரபு திருப்பூர் மாநகருக்கும், திண்டுக்கல்லில் இருந்த ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த உதயகுமார் திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சிவகாமி–ராணி திருப்பூர் மாநகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருப்பாச்சேத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கவிதா திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த காமராஜ் கோவை சரகத்துக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த முரளிதரன் கோவை சரகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #PoliceInspectors
    சென்னை:

    கானாத்தூர் சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆனந்த ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். சிட்லபாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் அதே காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகியுள்ளார்.

    நொளம்பூரில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். ராயலா நகரில் பணியாற்றிய சுப்பிரமணியன், வளசர வாக்கத்துக்கும், வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பசுபதி அண்ணா சதுக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    அண்ணா சாலை இன்ஸ்பெக்டராக தங்கராஜ், மாம்பலம் இன்ஸ்பெக்டராக மோகன்ராஜ், வியாசர்பாடி இன்ஸ்பெக்டராக பிரபு, நொளம்பூருக்கு சத்தியலிங்கம் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார். #PoliceInspectors

    ×