search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
    X

    நெல்லையில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

    • தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி வள்ளியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ஸ்டீபன் ஜோஸ் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை டவுன் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்து வரும் சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நெல்லை மாநகரத்திற்கும், நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×