என் மலர்
நீங்கள் தேடியது "காவல் ஆய்வாளர்"
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கவின் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் கடந்த 27-ந்தேதி கவினை பாளையங்கோட்டையில் வைத்து வெட்டிக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக்கொள்வதாக கவின் தந்தை சந்திரசேகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
- காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
- கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். காசி பாண்டியன் காவல் ஆய்வாளர் இல்லை, கூலிப்படை தலைவன். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை மிரட்டியது போல் 2023-ல் பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் கொலையிலும் காசிபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப்படுகிறது.
- போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
- முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்
நாமக்கல் மாவட்டம் பேவல்குறிச்சி காவல் நிலையத்தின் பெண் எஸ்எஸ்ஐ காமாட்சி காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காமாட்சியின் இறப்புக்கு பணிச்சுமையே காரணம் என அவரது சகோதரி, ஆய்வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அதன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்," எனது சகோதரிக்கு விடுப்பு கொடுக்காமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டீர்கள். போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
வயிற்றில் கட்டி இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், விடுப்பு கொடுக்காமல் வேண்டும் என்றே இரவு பணிக்கு வர வெச்சிருக்காங்க.
காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருக்காங்க. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் மருத்துவர்கள் சோதித்திருப்பார்கள். ஆனால், இங்கு முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
- நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
- காவல் ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெபபோலியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியுள்ளார்.
இதனால், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டிய நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் புகாரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
- கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
- கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள்.
மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு.
சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சென்னை முழுவதும் காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 24 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை முழுவதும் 24 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் 24 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, காவல் ஆய்வாளர் எஸ்.புவனேஸ்வரி என்2 காசிமேட்டு காவல் நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காவல் ஆய்வாளர் ஆர்.ரஞ்ஜித் குமார்- மாம்பலம், எஸ், விவேகானந்தன் - தண்டையார்பேட்டை, முகமது புஹாரி- திருவான்மியூர், மணிவண்ணன்- மெரினா, அரோக்கிய மேரி- குற்றப் பதிவுப் பணியகம், ஆனந்தன்- அயனாவரம், அம்பேத்கர்- புலியந்தோப்பு, ஆனந்தபாபு- திருவொற்றியூர், வீரம்மால்- சவுந்தரபாண்டியனார் அங்காரி ஆகிய இடத்திற்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் அருள் ராஜ்- மதுரவாயல், வசந்த ராஜா- காசிமேடு, ஞான சித்ரா- சிசிபி, ஸ்ரீநிவாசன்- கீழ்பாக்கம், கண்ணன்- கொருக்குபேட், கருணாகரன்- நுங்கம்பாக்கம், கே.எஸ்.ராஜா ஜேஜே நகர், ஜெயபிரகாஷ்- ஓட்டேரி, ஹரிஹரன்- பூக்கடை, ஜானி செல்லப்பா- மாதாவரம், ரெஜினா- விருகம்பாக்கம், பிரசித் தீபா- புழல், செல்வகுமாரி- வளசரவாக்கம், ஸ்ரீ ஜெயலாலி- எம்கேபி நகர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

- குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
- தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஆயில் சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). அவரது தம்பி ஸ்டாலின் (24). ரெட்டைமலை சீனிவாசன் மீது பூந்தமல்லி, ஆவடி. பட்டாபிராம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஸ்டாலின் மீது பல அடிதடி வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோருக்கும், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். 7 பேர் கொண்ட அந்த கும்பல், அண்ணன் - தம்பி இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினார்கள்.
முதலில் ரெட்டைமலை சீனிவாசனை வெட்டிய கும்பல், தொடர்ந்து ஸ்டாலினையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் - தம்பி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆவடி துணை போலீஸ் கமிஷனர் ஐமன் ஜமால் தலைமையில், பட்டாபிராம் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் தகராறு செய்ததால் தான் அண்ணன் - தம்பி இருவரையும் தீர்த்து கட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா என்று தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். தப்பி சென்ற குற்றவாளிகள் 7 பேரையும் பிடிக்க போலீசார் பல இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சீமான் வீடு காவலாளியை இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் நேற்று கைது செய்தார்.
- சீமானின் மனைவி கயல்விழி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து, சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
இதனையடுத்து, சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளர் மற்றும் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட சீமான் வீடு காவலாளியை இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் நேற்று கைது செய்தார்.
அப்போது சீமானின் மனைவி கயல்விழி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து இன்ஸ்பெக்டர் கோபத்துடன் காவலாளியை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.
இந்நிலையில், சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷூக்கு எதிராக வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது; இதில் வரும் 3 தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.






