search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    X

    சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    • சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    • அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு.

    சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×