என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்திருப்போர் பட்டியல்"

    • நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசலில் அண்மையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    அப்போது தன்னுடைய அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்ற இடத்தில் தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதியவரின் கடையை எட்டி உதைத்து கீழே தள்ளிய காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    • அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு.

    சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×