search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waiting list"

    • 2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன
    • 2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது

    2021 ஜனவரி மாதம் முதல், 2024 ஜனவரி மதம் வரை ரத்து செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளின் மூலம், ரெயில்வே துறைக்கு ₹1229.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த தகவலை ரெயில்வே துறை வெளியிட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலமாக இந்திய ரெயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்தது. 2022-ம் ஆண்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 4.6 கோடியாக அதிகரித்தது. இதன் மூலமாக வருவாய் ரூ.439.16 கோடியை எட்டியது. 2023-ம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 5.26 கொடியாகவும், இதன் மூலம் ரூ.505 கோடி வருவாய் கிடைத்தது.

    2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    மொத்தத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமான காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் உறுதிசெய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரத்துசெய்வதற்கு 60 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும். அதேசமயம், ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் ரூ.120 முதல் ரூ.240 வரை வசூலிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் மட்டும் தான் முழு தொகையும் திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    • அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு.

    சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காத்திருப்போர் நிலையில் உள்ள ரெயில் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

    இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும் நிலை டிக்கெட்டுகளாகவும், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளாகவும் அமைகின்றன. அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது.

    இந்நிலையில், அத்தகைய டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே தகவல் சேவை மையம் உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தின்படி, முன்பதிவு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து, காத்திருக்கும் நிலையில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை இணையதளம் யூகித்து சொல்லி விடும். இந்த புதிய முறை, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
    ×