என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police commissioner"

    • பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.
    • விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    சென்னை பெரம்பூரில் நேற்று லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    * பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.

    * பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் இருக்க வேண்டும்.

    * விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    * காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-

    லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.

    லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.

    அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.

    தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை

    லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.

    • மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
    • பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை :

    சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.

    பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

    இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிசயங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும்.
    • போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல.

    கோவை

    போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிச யங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும். அது தான் இயற்கை.

    அதில் போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல. ஒரு குழந்தையிடம் இருக்கும் எதிர்மறையான விஷயங்களையே மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டி சொல்லி கொண்டிருந்தால் அந்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்படும். செயல் திறனும் நிச்சயம் பாதிக்கும்.

    நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ஒரு விஷயம் எனக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தது. அந்த சம்பவம், 1980-களில் நடந்தது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த சம்பவம், எந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை குறிக்கும் வரலாற்று கண்ணோட்டத்துடன் படம் எடுத்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவது, மக்களை நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் உணர வேண்டும்.

    இவ்வளவு கொடுமையானதா போலீஸ் துறை என்றும் இன்னும் மாறவே இல்லையா என்றும் பலருக்கு தோன்றுகிறது. இத்தகையாக தவறான எண்ணம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19-ந் தேதி முதல் கவாத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
    • ஊர்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது.

    நெல்லை,

    நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19-ந் தேதி முதல் கவாத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.

    ஊர்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது.

    ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பயிற்சி முடித்து களப்பணிக்கு செல்லும் ஊர்காவல் படையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனபன போன்ற அறிவுரைகளை வழங்கி கவாத்து பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கும், கவாத்து போதகர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா , உதவி கமிஷனர்கள் சரவணன், மாநகர ஆயுதப்படை இன்ஸ் பெக்டர் டேனியல் கிருபாகரன் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.
    • சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.

    இதில் மாநகர பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்தில் 3-வது புதன்கிழமையான இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராமானோர்கள் கமிஷனர் அவினாஷ்குமாரிடம் நேரடியாக மனு கொடுத்தனர். ஏற்கனவே மனு கொடுத்து 15 நாட்களில் தீர்வு காணாத மனுக்களுக்கு மீண்டும் நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டனர்.

    இன்று இடப்பிரச்சினை, அடி தடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார் மனுகொடுத்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. அவற்றை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அறிவுறுத்தினார்.

    முகாமில் மேற்குமண்டல துணை கமிஷனர் சரவணகுமார், கிழக்கு மண்டல துணைகமிஷனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விதிமுறைகளை மீறிய 563 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன் அந்த வாகன ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உரிமம் ரத்து

    கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், அதிக அளவில் சரக்குகள் ஏற்றிச்செல்லுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தேன். அதன்பேரில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் காவல் துறையினருக்கு நீர்மோர் வழங்கினார்.
    • சாலை விதிகளை பின்பற்றாத 1,600 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் கோடையை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு நீர், மோர் மற்றும் வெட்டி வேரினால் ஆன தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணார் பேட்டையில் இன்று நடைபெற்றது.

    இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல் துறையினருக்கு நீர்மோர் வழங்கினார். வெட்டிவேரிலான தொப்பிகளையும் அவர்க ளுக்கு வழங்கிய பின் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோடையை சமாளிக்க தொப்பியும், நீர் மோரும் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். மாநகரத்தில் சி.சி.டி.வி. காமிராக்கள் உதவியோடு இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபடு பவர்களை கைது செய்து வருகிறோம். நேற்று இருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 22 வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து அந்த இருசக்கர வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    23 ஆயிரம் வழக்குகள்

    சாலை விதிகளை பின்பற்றாத 1,600 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சுமார் ரூ. 2 கோடியே 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 60 லட்சம் ரூபாய் நேரடியாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் நீதிமன்றம் மூலம் பெறு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ் நிலையம்

    மாநகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 6 மணி முதலே போக்குவரத்து காவலர்கள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் நிலையத்தை புதிய பஸ் நிலையம் அருகே கொண்டு செல்வதன் மூலம் மாநகர மையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர்கள் சரவணன், சதீஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, பேச்சிமுத்து மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க நெல்லை மாநகரம் தனிப்பிரிவு 9498101729 மற்றும் மாநகர காவல் கட்டுப்பாடு அறை எண் 0462-2562651, 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
    • சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    திருநின்றவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 45 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு செல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை வழக்கமான உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர் களை பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் வரவேற்றனர்.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் திறப்பையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:-

    ஆவடி பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகள் மற்றும் இதர உட்புற சாலைகளில் 478 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

    பள்ளிகளில் இயங்கி வரும் வாகனங்களின் தற்போதைய இயக்கநிலை குறித்தும் வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், வேகக்கட்டுபாடு, அவசர வழி கதவுகள் ஆகியவைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.

    இதர உள் சாலைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு அப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.பி. மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் மூலம் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர போக்குவரத்தினை சீர்செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்களின் ஓட்டுநர்களுக்கு பள்ளி மாணவ-மாணவி களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று வரவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தும், சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டும் சாலையை கடந்தும் பாதுகாப்பாக பள்ளி சென்று வர வேண்டும். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகர போலீஸ் கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள சரவணனிடம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • 2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.

    சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சைலேந்திர பாபு பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறும் நிலையில், தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதிய டிஜிபி சங்கர் ஜிவால் 1990-ல் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். 1993-ல் மன்னார்குடி ஏஎஸ்பி, 1995ல் சேலம் மாவட்ட எஸ்பியாக சங்கர் ஜிவால் பணியாற்றினார்.

    மத்திய போதைப்பொருள் தடுப்படுப்பிரிவு எஸ்.பி மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் போன்ற பதவிகளை சங்கர் ஜிவால் வகித்துள்ளார்.

    2008- 2011ம் ஆண்டு வரை உளவுத்துறையில் டிஜஜி மற்றும் ஜஜி-ஆக இருந்தார்.

    2011- 2021ம் ஆண்டு வரை அதிரடிப்படை, ஆயுதப்படைகளிலும், 2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.

    ×