search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lodge"

    • சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன.
    • விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    புயல் மழை காரணமாக சென்னையில் தரை தளங்களில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் உடனடியாக வடிந்து விடும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழை ஓய்ந்து 4 நாட்களாகியும் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.

    வீடுகளில் இருந்து வெள்ளம் வடிந்த இடங்களில் கூட வீடுகளுக்கும் அனைத்து பொருட்களும் சேதமாகி குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. ஓரிரு நாட்கள் மாடிகளில் இருந்த வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் உணவு, குடிநீர் பிரச்சினை காரணமாக மின்சாரம் இருக்கும் உறவினர்களில் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல இயலாதவர்கள் லாட்ஜுகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து ஓட்டல்களுக்கு செல்கிறார்கள். முன்பதிவு செய்து சென்றாலும் பல லாட்ஜுகளில் அவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். சிலர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

    சென்னையில் லாட்ஜுகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் பல லாட்ஜுகளில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் ஆக உயர்ந்தது. மேலும் ஓட்டல்களில் அறை கிடைத்தாலும் பால் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களின் உணவுத் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    • விபசார தடுப்பு போலீசார் பெரியமேடு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விபசார தடுப்பு போலீசார் பெரியமேடு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் மேற்கொண்ட இந்த வேட்டையில் கோவா, அந்தமான், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் இருந்து வந்து விபசார தொழிலில் ஈடுபட்ட அழகிகள் பிடிபட்டனர்.

    விமானத்தில் வந்து இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ராஜஸ்தான் மாநில தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-

    லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.

    லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.

    அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.

    தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை

    லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.

    • மதுரையில் உள்ள தனியார் விடுதியில் லாட்ஜ் மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அவருக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.

    மதுரை

    மதுரை டவுன்ஹால் ரோடு, பெருமாள் தெப்பம் வடக்கு தெருவில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தை சேர்ந்த தர்மராஜ் (வயது 55) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு தலை மற்றும் மூக்கில் ரத்தக்காயங்களுடன் லாட்ஜ் மேலாளர் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    திடீர்நகர் போலீசாரின் விசாரணையில், 'மதுரை தங்கும் விடுதி மேலாளர் தர்மராஜுக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.

    அவருக்கு நள்ளிரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூரில் உள்ள லாட்ஜ் அறையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. கடந்த 18-ந் தேதி 40 வயது வாலிபர் ஒருவர் தொழில்ரீதியாக தங்குவதற்கு அறை கேட்டுள்ளார். அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் அறையில் தங்கியுள்ளார். ஆனால் 18 -ந்தேதி அறைக்கு சென்றவர் 2 நாட்களான நிலையில் அறையிலிருந்து வெளியில் வராததால் லாட்ஜில் பணிபுரிந்த ஊழியர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது அங்கிருந்த பாத்ரூமில் இறந்த நிலையில் கிடந்தார். இதனை தொடர்ந்து இறந்த நபரின் உடலை போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆண்டிமடம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெபஸ்டின் வயது 41 என்பது தெரியவந்தது.

    கடந்த 18-ந் தேதி கடலூருக்கு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லாததால் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபஸ்டினை தேடி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பதனை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    வேளாங்கண்ணி லாட்ஜில் வாலிபருடன் தங்கிய இளம்பெண் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது மகள் வலங்கை தேவி (வயது 28) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சித்தமல்லி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் செந்தமிழ். இவர்கள் இருவரும் கடந்த 3-ம் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தேதி அவர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்ய சொல்வதாக உதவி மேலாளர் சென்று பார்த்தபோது கதவை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வழங்கை தேவி மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவருடன் வந்த செந்தமிழை காணவில்லை.

    இதுகுறித்து உதவி மேலாளர் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வலங்கை தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பெண் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அங்கு வலங்கை தேவி கொண்டு வந்த பையில் அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் அவர் ஆம்புலன்சில் உதவியாளராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வலங்கை தேவி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? வலங்கை தேவியுடன் வந்த செந்தமிழ் எங்கே சென்றார்? இருவரும் காதலர்களா? என்று விசாரணை செய்து வருகிறார்கள்.

    வேளாங்கண்ணி லாட்ஜில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைகுப்பம் கள்ளிடைமேடு பகுதியை சேர்ந்தவர் களியபெருமாள். இவருடைய மகன் சுதாகர் (வயது 30). இவர் சென்னையில் கொத்தனராக வேலை பார்த்து வந்தார்.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 11-ந் தேதி நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் அறை எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு 7.30 மணியளவில் சுதாகருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இதனால் அறையில் இருந்து வெளியே சென்ற சுதாகர் செல்போனில் பேசிவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த அவரது காதலி செல்போனில் பேசியது யார்? என கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுதாகர் குளியல் அறைக்கு சென்றார். இதன்பின் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது காதலி குளியல் அறை கதவை திறந்த போது குளியல் அறைக்குள் சுதாகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி சத்தம் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த விடுதி பணியாளர்கள் சுதாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுதாகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் லாட்ஜில் வைத்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் தூணேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் கூக்கல் துறை அரசு உயர் நிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    அவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி இறுதியாண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக சந்திர சேகர் தனது மனைவியிடம் கூறி சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. அவர் பள்ளியில் தங்கி இருக்கலாம் என மனைவி நினைத்து கொண்டார்.நேற்று காலையும் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது.

    இந்த நிலையில் மேட்டுப் பாளையம் வந்த சந்திர சேகர் அங்குள்ள ஒரு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு அறை கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் சதிஷ் குமார் மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு பாலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சந்திரசேகர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

    படுக்கையில் சாணி பவுடர் சிதறி கிடந்தது. எனவே சந்திரசேகர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    தற்கொலை செய்து கொண்ட சந்திர சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி சரோஜினிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உறவினர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தார்.

    கடன் பிரச்சினை காரணமாக சந்திர சேகர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் கோத்தகிரியில் சொந்தமாக வீடு கட்டி உள்ளார். இதற்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    அதனை கட்ட முடியாததால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சந்திரசேகர் மனைவியும் தனது கணவர் தற்கொலைக்கு கடன் பிரச்சினை தான் காரணம் என தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×