என் மலர்

    நீங்கள் தேடியது "teacher suicide"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிணற்றில் குதித்து மகளுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசர்கோடு பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவல் அறிந்த மேல்பரம்பா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கல்நாடு அரமங்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தாஜுதீன். இவரது மனைவி ரூபினா (வயது 30). இவர்களது மகள் நயனா மரியம் (5). இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூபினா மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் திடீரென மாயமாகினர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் தேடினார்கள். அப்போது அவர்களது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தாய், மகள் ஆகிய இருவரும் பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பரம்பா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டனர். ரூபினா தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ரூபினா அந்த பகுதியில் உள்ள விளையாட்டு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவருக்கு குடும்பத்தில் நிதி நெருக்கடி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ரூபினா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். அவர் தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது மகனை கவனித்துக் கொள்ளுமாறு குடும்பத்தினரை கேட்டு கொண்டுள்ளார்.

    கிணற்றில் குதித்து மகளுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசர்கோடு பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாய்குமார் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார்.
    • தற்கொலை குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கேட்டு தோட்டம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சாய்குமார் (வயது 32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    அவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பண தேவை உள்ளது. அனுப்பி வைக்குமாறும் இல்லையென்றால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாக செல்போனில் பேசி உள்ளார்.

    இந்தநிலையில் அவர் திருப்பூர் வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தில்லை நாயகம் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
    • மனமுடைந்து காணப்பட்ட தில்லை நாயகம் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் தில்லை நாயகம் (வயது44). இவர் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும், இவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட தில்லை நாயகம் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்கொலை செய்துக்கொண்ட சுடலை முத்துவின் வீடு, கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே உள்ளது.
    • குடும்ப பிரச்சினை காரணமாக சுடலை முத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதிகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை செந்தமிழ்நகரை சேர்ந்தவர் கொம்பன். இவரது மகன் சுடலைமுத்து (வயது 30). இவர் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை பேட்டையில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்து கல்லூரிக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சுடலைமுத்து மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுடலை முத்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்துக்கொண்ட சுடலை முத்துவின் வீடு, கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. அவர் அதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் ஆவார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதிகிறார்கள். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
    • தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி கோனப்பெண்ட் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சித்தேஸ்வரன் என்ற 4 வயதில் மகன் உள்ளான்.

    இந்த நிலையில் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியை தேவி தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடி 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை தேவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீலாங்கரையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை, கிழக்கு கடற் கடை சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு கன்னியா குமரியை சேர்ந்த அந்தோணி (வயது27) என்பவர் விடுதியில் தங்கி ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் அந்தோணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பள்ளி நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட மோதலில் அந்தோணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை நடக்கிறது. ஆசிரியர் தற்கொலையை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மனைவி பிரிந்து சென்றதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஆசிரியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வம்பா கீரப்பாளையம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் பிணம் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் உப்பளம் தமிழ்த்தாய் நகரை சேர்ந்த ஜாய் ஜூலியா (வயது 33) என்பதும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சு நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்சில் இருந்து புதுவை திரும்பிய ஜாய் ஜூலியாவுக்கும், நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களில் அந்த பெண் ஜாய் ஜூலியாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் ஜாய் ஜூலியா விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜாய் ஜூலியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் லாட்ஜில் வைத்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் தூணேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் கூக்கல் துறை அரசு உயர் நிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    அவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி இறுதியாண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக சந்திர சேகர் தனது மனைவியிடம் கூறி சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. அவர் பள்ளியில் தங்கி இருக்கலாம் என மனைவி நினைத்து கொண்டார்.நேற்று காலையும் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது.

    இந்த நிலையில் மேட்டுப் பாளையம் வந்த சந்திர சேகர் அங்குள்ள ஒரு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு அறை கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் சதிஷ் குமார் மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு பாலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சந்திரசேகர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

    படுக்கையில் சாணி பவுடர் சிதறி கிடந்தது. எனவே சந்திரசேகர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    தற்கொலை செய்து கொண்ட சந்திர சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி சரோஜினிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உறவினர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தார்.

    கடன் பிரச்சினை காரணமாக சந்திர சேகர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் கோத்தகிரியில் சொந்தமாக வீடு கட்டி உள்ளார். இதற்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    அதனை கட்ட முடியாததால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சந்திரசேகர் மனைவியும் தனது கணவர் தற்கொலைக்கு கடன் பிரச்சினை தான் காரணம் என தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தற்கொலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆர்.எஸ்மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெருமாண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகன்கள் தமிழ்அரசன் (வயது32), தமிழ்செல்வன் (27). இந்த நிலையில் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக வசந்தா என்பவரை சிற்றரசு திருமணம் செய்தார்.

    தமிழ்செல்வன் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தமிழ்அரசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்அரசனுக்கு திருமணம் நடைபெற்றது. அண்ணன் திருமணத்திற்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் தமிழ்செல்வன் சிலரிடம்  கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வசந்தா, திருமணத்திற்கு வந்த நகைகளில் தனக்கு தாலி செயின் ஒன்று வாங்கி கொடுக்குமாறு வலியுறுத்தினாராம். இதனால் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தமிழ்செல்வன் நேற்று அங்குள்ள தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த தமிழ்அரசன், வசந்தாவிடம் சென்று எனது தம்பி சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உறவினர் வினோத் என்பவர் தடுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் தமிழ்அரசன், வினோத்தை கத்தியால் குத்தினார். காயமடைந்த அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தமிழ்செல்வன் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெள்ளகோவில் அருகே குடும்ப தகராறில் தூக்கு போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase
    முத்தூர்:

    வெள்ளகோவில் கச்சேரி வீதியை சேர்ந்தவர் கோபி (வயது 31). கர்நாடக மாநிலத்தில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (22). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும் இதனால் சிவரஞ்சனி வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    15 நாட்களாக வேலைக்கும் போகவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிவரஞ்சனி தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி சிவரஞ்சனியின் உடல் மீட்கப்பட்டது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo