என் மலர்
நீங்கள் தேடியது "police inquiry"
- காப்பர் கம்பி அனுப்புவதாக கூறி ரூ.2.55 லட்சம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனியார் நிறுவன அதிகாரி யாக உள்ளார். தனது தொழில் தேவைக்காக காப்பர் கம்பிகள் விற்கும் இடம் குறித்து இணைய தளத்தில் தேடினார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த ஒரு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.
தனக்கு 5 டன் காப்பர் கம்பி தேவைப்படுவதாக கணேஷ் தெரிவித்தார். இதற்கு ரூ.8.50 லட்சம் ஆகும் என்றும், முன்தொகையாக ரூ.2.55 லட்சம் செலுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி திரிபுராவைச் சேர்ந்த கோஷாமோகன் என்பவரது வங்கிக் கணக்கிற்கு கடந்த 11-ம் தேதி ரூ.2.55 லட்சம் அனுப்பினார்.
அதன் பிறகு தனக்கு காப்பர் கம்பி வராதது குறித்து கேட்டபோது உங்களது சரக்கு ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்றால் மேலும் ரூ.4.40 லட்சம் கட்டவேண்டும். மொத்தம் 15 டன் காப்பர் கம்பி அதில் உள்ளது. உங்களுக்கு தேவையானதை எடுத்து க்கொண்டு மீதி கம்பிகளை விற்ற பிறகு பணம் கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளனர்.
2வதாக பெங்களூரை சேர்ந்த சாமுவேல் என்ப வருக்கு பணம் அனுப்பி வைக்குமாறு எதிர்முனை யில் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கணேஷ் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை இருகூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவருக்கும் லிஷி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் ராஜேஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால் வெளியில் கூட செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
நேற்றும் கடுமையான வெயில் வாட்டியது. 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. கலசபாக்கம் அருகே உள்ள கீழ்பாலூரை சேர்ந்தவர் மண்ணு இவரது மனைவி சின்னபாப்பா (வயது 45). இவர் நேற்று கீழ்பாலூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடுமையான வெயிலால் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சின்னபாப்பா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரம்:
அவனியாபுரம் ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44). டெய்லரான இவர் கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பால கிருஷ்ணன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்த ராஜன் (58). கூலித்தொழிலாளியான இவருக்கு சில மாதங்களாக உடல்நலக்குறைவு இருந்தது. டாக்டரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த ராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் தாகுல்சிங்(வயது59). இவர் டி.வி.கே.கே.நகர் பகுதியில் பஞ்சு கமிசன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவு சமயத்தில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். கல்லாவில் இருந்த ரூ.50,000த்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
மறுநாள் காலை தாகுல்சிங் கடைக்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பது, கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராயபுரம்:
வியாசர்பாடியை சேர்ந்தவர் சேர்மகனி (40). தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று மாலை 5.30 மணிக்கு சேர்மகனி அவரது மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டைக்கு புறப்பட்டார். அங்குள்ள வைத்தியநாதர் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் சேர்மகனியின் கழுத்தை சுற்றியது. இதில் நிலை தடுமாறிய சேர்மகனி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தூக்கிச் சென்று அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கு மாஞ்சா நூலில் பட்டம் விட்டவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார்.
மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் நடை பயிற்சிக்காக மோட்டார் சைக்கிளில் வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கு ஆற்றங்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கு ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. அவர்களை கண்டதும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
பலரும் நடைபயிற்சி செய்யும் காலை நேரத்தில் கொலை நடந்திருப்பது மானாமதுரையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் மானாமதுரை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். இது பிடிக்காததால் யாராவது கொலை செய்தார்களா? அல்லது பேரூராட்சி ஒப்பந்தப்பணி விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க மாவட்டம்முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடை பெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் திருநல்லூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ராமராஜ் (வயது24). இவர் கோயமுத்தூரில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் தற்போது ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று மாலை ராமராஜ் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பாப்பாநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். சங்கரன்குடிகாடு பகுதி தரைப் பாலத்தில் சென்ற போது, வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டான திருநல்லூர் மேலத்தெரு கண்ணப்பன்(40) மற்றும் அவரது கார் டிரைவர் சங்கர் ஆகியோர் அங்கு மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ராமராஜை கைகாட்டி அழைத்துள்ளனர். ஆனால் இதை கவனிக்காமல் அவரும் கைகாட்டி விட்டு சென்று விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கண்ணப்பன், சங்கர் ஆகிய இருவரும் காரை எடுத்து சென்று ராமராஜை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தடுத்த ராம ராஜிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ராமராஜை அவரது நண்பர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து மருத்துவமனைக்கு சென்று ராமராஜிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.