search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police inquiry"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
    • பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    அரூர்:

    தருமபுரியில் இருந்து கோவைக்கு வெடிெபாருட்கள் ஏற்றி செல்வதாக சேலம் மாவட்டம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று கருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதனை ஓட்டி வந்த டிரைவர் இளையராஜா (33) என்பவர் 2 ஆயிரத்து 953 கிலோ வெடி பொருட்கள் இருந்தது. வெடி பொருட்களை தருமபுரியில் இருந்து கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக் (35) என்பவரும், அரூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின்படி மினிலாரியில் 2 ஆயிரத்து 953 கிலோ வெடிபொருட்களை பென்னாகரத்தில் இருந்து ஏற்றி கொண்டு கோவைக்கு சென்றதாக கைதான இளையராஜா போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள கார்த்திக்கை பிடிக்க வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குமாரும் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைமறைவாக உள்ள 2 பேரையும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வெடிபொருட்கள் ஏற்றி சென்றதாக கூறப்படும் பென்னாகரத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
    • வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காகாபாளையம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நடுவனேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சந்திரசேகர் (வயது 29). தறிதொழிலாளி.

    இவருக்கும், பிரியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இந்த அதிர்ச்சியை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மது குடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து மது குடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானார். மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்தார்.

    கடந்த 25-ந்தேதி சந்திரசேகர் மது குடித்துவிட்டு வந்து போதையில் கத்தியை காட்டி அம்மாவிடம் தகராறு செய்தார். இதனால் அவரை மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தபோது அவரது சட்டை பையில் இருந்து கத்தி மற்றும் போதை மாத்திரை ஆகியவை இருந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் எச்சரிக்கை செய்து, அறிவுரைகள் சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனாலும் அவர் குடி பழக்கத்தை கைவிடவில்லை. மறுநாள் (26-ந்தேதி ) மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால் அவரை குடிபழக்கத்தில் இருந்து மீட்பதற்காக இடங்கணசாலை-சின்னப்பம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் சந்திரசேகர் அரியானூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சில் பலத்த காயங்களுடன் இருப்பதாக இன்று காலை உறவினர்களுக்கு போதைமீட்பு மையத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்க்கையில் ஆம்புலன்சில் கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் சந்திரசேகர் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்திரசேகரின் கை, கால்கள் ஆகியவற்றை முதுகு பக்கமாக சேர்த்து வைத்து கட்டி வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இதனிடையே அங்கு உறவினர்கள் குவிந்தனர். இதனால் பதட்டம் நிலவியது. பாதுகாப்புக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி போதை மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு இங்கு என்ன நடந்தது?, அவரை கொலை செய்தவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.
    • வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்தியபிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

    காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது57).தி.மு.க.பிரமுகரான இவர் சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுந்தர தேவி, அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    சம்பத்குமார் தினமும் காலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அவர் கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொண்டார்.

    அப்போது திடீரென மழை பெய்தததால் அருகில் உள்ள இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் அங்கு தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சம்பத் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
    • கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.

    முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

    அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

    பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.

    பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடன் தொல்லையால் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள பழைய ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவரது மனைவி சாந்தி (வயது50). இவரது மகன் விஜயஆனந்த் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் என்ஜினீரியங் படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அப்போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் தனியாக ஒரு நூற்பாலை ஒன்றையும் நடத்தி வந்தார். இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் நடத்தி வந்த நூற்பாலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நிறுவனத்தை மேலும் தொடர முடியாமல் இழுத்து மூடிவிட்டனர்.

    இந்த நிலையில் விஜயஆனந்திற்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். ஆனால், நூற்பாலை மூடிவிட்ட காரணத்தினால் அவரால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

    நூற்பாலையை மூடிவிட்டதால் அதில் முதலீடு செய்த பங்கு தொகையும், மேலும், அவர் சிலரிடம் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காததால் தனக்கு கடன் கொடுத்தவர்களிடம் கடன் தொகை முழுவதையும் திரும்ப கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்.

    இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு விஜயஆனந்தை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த விவரங்கள் அனைத்தும் தனது தாய் சாந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பழனிவேல் நேற்று காலை பாலக்கோட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தாய் சாந்தி, மகன் விஜயஆனந்த் ஆகிய 2 பேரும் வீட்டை பூட்டி கொண்டு அவர்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு டியூப் வழியாக நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    இந்த விவரங்கள் ஏதும் அறியாத பழனிவேல் நேற்று இரவு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடியபடி சாந்தியும், விஜயஆனந்தும் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இதுகுறித்து பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் கடன் தொல்லை தாக்காமல் விஜயஆனந்த் தற்கொலை செய்து கொள்ளும்முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து தனது தாய்க்கு தெரிவித்தபோது ஒரே மகனை இழுந்து என்ன செய்வதென்று தெரியாததால் அவரும் தனது மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 2 பேரும் தங்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லையால் தாய், மகன் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காப்பர் கம்பி அனுப்புவதாக கூறி ரூ.2.55 லட்சம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனியார் நிறுவன அதிகாரி யாக உள்ளார். தனது தொழில் தேவைக்காக காப்பர் கம்பிகள் விற்கும் இடம் குறித்து இணைய தளத்தில் தேடினார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த ஒரு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.

    தனக்கு 5 டன் காப்பர் கம்பி தேவைப்படுவதாக கணேஷ் தெரிவித்தார். இதற்கு ரூ.8.50 லட்சம் ஆகும் என்றும், முன்தொகையாக ரூ.2.55 லட்சம் செலுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி திரிபுராவைச் சேர்ந்த கோஷாமோகன் என்பவரது வங்கிக் கணக்கிற்கு கடந்த 11-ம் தேதி ரூ.2.55 லட்சம் அனுப்பினார்.

    அதன் பிறகு தனக்கு காப்பர் கம்பி வராதது குறித்து கேட்டபோது உங்களது சரக்கு ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்றால் மேலும் ரூ.4.40 லட்சம் கட்டவேண்டும். மொத்தம் 15 டன் காப்பர் கம்பி அதில் உள்ளது. உங்களுக்கு தேவையானதை எடுத்து க்கொண்டு மீதி கம்பிகளை விற்ற பிறகு பணம் கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளனர்.

    2வதாக பெங்களூரை சேர்ந்த சாமுவேல் என்ப வருக்கு பணம் அனுப்பி வைக்குமாறு எதிர்முனை யில் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கணேஷ் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை இருகூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவருக்கும் லிஷி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் ராஜேஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கலசபாக்கம் அருகே வெயில் கொடுமைக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் வெளியில் கூட செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

    நேற்றும் கடுமையான வெயில் வாட்டியது. 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. கலசபாக்கம் அருகே உள்ள கீழ்பாலூரை சேர்ந்தவர் மண்ணு இவரது மனைவி சின்னபாப்பா (வயது 45). இவர் நேற்று கீழ்பாலூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடுமையான வெயிலால் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சின்னபாப்பா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.