search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாய்-மகன் தற்கொலை
    X

    பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாய்-மகன் தற்கொலை

    • கடன் தொல்லையால் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள பழைய ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவரது மனைவி சாந்தி (வயது50). இவரது மகன் விஜயஆனந்த் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் என்ஜினீரியங் படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அப்போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் தனியாக ஒரு நூற்பாலை ஒன்றையும் நடத்தி வந்தார். இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் நடத்தி வந்த நூற்பாலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நிறுவனத்தை மேலும் தொடர முடியாமல் இழுத்து மூடிவிட்டனர்.

    இந்த நிலையில் விஜயஆனந்திற்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். ஆனால், நூற்பாலை மூடிவிட்ட காரணத்தினால் அவரால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

    நூற்பாலையை மூடிவிட்டதால் அதில் முதலீடு செய்த பங்கு தொகையும், மேலும், அவர் சிலரிடம் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காததால் தனக்கு கடன் கொடுத்தவர்களிடம் கடன் தொகை முழுவதையும் திரும்ப கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்.

    இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு விஜயஆனந்தை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த விவரங்கள் அனைத்தும் தனது தாய் சாந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பழனிவேல் நேற்று காலை பாலக்கோட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தாய் சாந்தி, மகன் விஜயஆனந்த் ஆகிய 2 பேரும் வீட்டை பூட்டி கொண்டு அவர்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு டியூப் வழியாக நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    இந்த விவரங்கள் ஏதும் அறியாத பழனிவேல் நேற்று இரவு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடியபடி சாந்தியும், விஜயஆனந்தும் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இதுகுறித்து பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் கடன் தொல்லை தாக்காமல் விஜயஆனந்த் தற்கொலை செய்து கொள்ளும்முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து தனது தாய்க்கு தெரிவித்தபோது ஒரே மகனை இழுந்து என்ன செய்வதென்று தெரியாததால் அவரும் தனது மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 2 பேரும் தங்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லையால் தாய், மகன் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×