search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple robbery"

    • கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே கும்பாபிஷேகம் நடந்த சில நாட்களிலேயே திரவுபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி, கோடிப்பதி பகுதியில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் புணரமைக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து மகா பாரத சொற்பொழிவு விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    மார்கழி மாதம் என்பதால் இன்று அதிகாலையிலேயே கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி, பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அக்கோவிலின் தர்மகர்த்தாவிடம் தெரிவித்தார்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் தர்மகர்த்தா மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கும்பாபிஷேகம் நடந்து சில நாட்களிலேயே கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் வண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோவில் ஊழியர், கோவிலை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த அறை திறந்து கிடந்தது. அறைக்குள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோவிலுக்குள் வந்த மர்ம நபர் அங்கிருந்த சமையலறை வழியாக லாக்கர் இருந்த ரூமிற்கு சென்றுள்ளார். பின்னர் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    • வாடிப்பட்டி அருகே கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படும் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோவில் கொடி மரம் அருகே 3 அடி உயர உண்டியல் வைக்கப் பட்டுள்ளது.

    நேற்று இரவு பணியாளர்கள் பூஜைகள் முடிந்ததும் பூசாரி, பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கோவிலை திறந்த போது வாயிலின் முன்புறமுள்ள கொடிமரம் அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல் திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகில் சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் அருகில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் மேட்டுப் பெருமாள் நகரில் அமைந்துள்ள நீலமேக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக தகவல் வந்தது.

    2 கோவில்களிலும் இருந்த உண்டியல்களில் இருந்து எவ்வளவு பணம்? திருடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

    ஒரே நாள் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 கோவில்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கொள்ளையர்கள் இதனை நோட்டமிட்டு திட்டமிட்டு 2 கோவில்களிலும் கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே நாள் இரவில் அருகருகே உள்ள 2 கிராமங்களின் பழமையான கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது.
    • கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் பூஜை சில நாட்களுக்கு முன்பு முடிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் வேறு இடத்தில் சிதறி கிடந்தது.

    மேலும் கோவிலின் கலசத்தை எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரில் செல்வவினாயகர் கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு இன்று காலை 6 மணியளவில் சாமி கும்பிட பக்தர்கள் வந்தனர். கோவில் முடியிருந்ததால் வெளியில் இருந்து சாமி கும்பிட்டனர். அப்போது கோவிலின் மையப்பகுதியில் வைக்கப் பட்டிருந்த உண்டியல், கோவில் உட்பிரகாரத்தின் ஓரமுள்ள கிரில் கேட் அருகில் இருந்தது. அருகில் சென்று பார்த்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கும், ஊர் பிரமுகர்களுக்கும் பக்தர்கள் தகவல் கொடுத்தனர். தக வலின் பேரில் விரைந்து வந்த ஊர் பிரமுகர்கள் கோவில் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு உடைக்கப்பட்டிருந்த உண்டி யலில் இருந்த ரூபாய் நோட்டு கள் மட்டும் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. சில்ல ரை நாணயங்கள் அங்கேயே கிடந்ததை கண்டனர். கோவிலின் நடுமை யத்தில் இருந்த உண்டியலை, முன்பகுதி வளைக்கப்பட்ட இரும்பு கம்பியால் கிரில் கேட் அருகே இழுத்து. உண்டி யலை உடைத்து பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை ஊர் பிரமுகர்கள் கண்டுணர்ந்தனர். மேலும், கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், இது தொடர்பாக அங்கிருந்த வர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோவில் உண்டியல் கடந்த 9 மாதத்திற்கு மேலாக திறக்கப் படாததால் சுமார் ரூ.1 லட்சம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று ஊர் பிரமுகர்கள் கூறினார்கள். வரும் 18-ந் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இந்த காணிக்கை பணத்தை பயன்படுத்த ஊர் பிர முகர்கள் திட்டமிட்டிருந்த தும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் பட்டது. அங்கிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். சிறிது தூரம் சென்ற மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கோவிலின் உண்டியலை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.கே. நகரில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார்.
    • பணம் திருடு போய் இருந்ததை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர மையத்தில் கீழ்பெரும் பாக்கம் பகுதியில் 475 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் தீமிதி விழா கடந்த பங்குனி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் நடைபெறும் அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவில் உள்ளே இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போய் இருந்தது. இதை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த கோவிலில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி திருடி வருகின்றனர்.

    • பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது.
    • ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் காவலாளியை கொலை செய்து கோயில் உட்பிரகாரத்தில் இருந்த நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் ஆனது அச்சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது தாரமங்கலம் சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல காலையில் கோயிலில் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு குழம்பிப் போன பூசாரி கோயில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோயில் உள்ளே இருந்த 8 ஐம்பொன் சாமி சிலைகள் மாயமானது தெரியவந்தது.

    அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து அதன் பின்னர் தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் காவல்துறை யினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் தாரமங்கலம் பகுதியில் பழங்கால 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதற்கட்ட விசாரணையாக அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளையர் குறித்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் எல்லை யம்மன் கோவில் உள்ளது. மர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கி ருந்த உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியல் உடைக்கப் பட்டிருப்பதை கண்ட பொது மக்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த சுமார் ஒரு பவுன் தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
    • மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். இன்று காலை, கோயில் பூசாரி தனவேல் கோயிலுக்கு வந்து பார்த்த போது கோயில் கதவு பூட்டை உடைத்து, நேற்று இரவு மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து கோயில் உண்டியல் மற்றும் இரும்பு கம்பி கோயில் எதிரே உள்ள மணிமுத்தாற்றங்கரையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார்.
    • கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தில் ஊருக்கு நடுவே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார். வழக்கம் போல கோவிலை திறப்பதற்காக இன்று காலை பூசாரி சபாபதி கோவிலுக்கு வந்தார். கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கீழிருப்பு கிராமத்தில் தொடர்ந்து கோவில் உண்டியல் உடைப்பு சம்பவம் நடைபெற்று வருவதால்குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கீழிருப்பு சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • மதுரை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மர்ம மனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து வெளியே தூக்கிச்சென்று பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் ஜெயா கஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×