search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் கொள்ளை
    X

    கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் கொள்ளை

    • பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேஅள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் காளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக அவர் வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு காளியம்மன் சாமி கழுத்தில் இருந்த தங்கத்தாலி ¾ பவுன் நகையும், உண்டியல் பணம் ரூ.5000-த்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்தது.

    உடனே அவர் ஊர் கிராம மக்களிடம் தகவலை தெரிவித்தார். தகவலறிந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலிலை ஆய்வு செய்தனர்.

    மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×