search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "looting"

    • தெலுங்கானாவின் 119 இடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது
    • மாநில அரசுக்கு கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட உரிமை உள்ளதா என கேட்டார்

    தெலுங்கானாவில் 2018ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி வெற்றி பெற்று அவர் ஆட்சி அமைத்தார்.

    இவ்வருட இறுதிக்குள் தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

    வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரில் அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    தனது நீண்ட உரையில் கே.சி.ஆர். ஆட்சியை விமர்சித்த மோடி, தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க.வையும் தாக்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    தமிழ்நாட்டில் இந்து கோவில்களை தி.மு.க. அரசாங்கமே எடுத்து நடத்தி வருகிறது. அரசின் முழு கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளன. அவ்வாறு அவர்கள் செய்யும் போது கோவில் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், செல்வங்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் கொள்ளை போவதையும் தடுக்க முடியாமல் அரசே அக்கொள்ளைக்கு துணை நிற்கிறது. கோவில்களை மாநில அரசாங்கமே எடுத்து நடத்த அரசுக்கு உரிமை உள்ளதா? மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களை அரசு தொடுவதில்லை. ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் மட்டும் தி.மு.க. அரசு தலையிடுவது ஏன்? தனது கூட்டணி கட்சியான தி.மு.க. இவ்வாறு செய்வதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? இந்துக்களுக்கே கோவில் நிர்வாகத்தை திருப்பி அளிக்கும்படி தி.மு.க.வை கேட்குமா?

    இவ்வாறு மோடி கேள்வி எழுப்பினார்.

    கோவில்களின் மாநிலம் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் 1000 வருடத்திற்கு மேற்பட்ட கோவில்கள் மட்டுமே 400க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரில் செல்வவினாயகர் கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு இன்று காலை 6 மணியளவில் சாமி கும்பிட பக்தர்கள் வந்தனர். கோவில் முடியிருந்ததால் வெளியில் இருந்து சாமி கும்பிட்டனர். அப்போது கோவிலின் மையப்பகுதியில் வைக்கப் பட்டிருந்த உண்டியல், கோவில் உட்பிரகாரத்தின் ஓரமுள்ள கிரில் கேட் அருகில் இருந்தது. அருகில் சென்று பார்த்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கும், ஊர் பிரமுகர்களுக்கும் பக்தர்கள் தகவல் கொடுத்தனர். தக வலின் பேரில் விரைந்து வந்த ஊர் பிரமுகர்கள் கோவில் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு உடைக்கப்பட்டிருந்த உண்டி யலில் இருந்த ரூபாய் நோட்டு கள் மட்டும் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. சில்ல ரை நாணயங்கள் அங்கேயே கிடந்ததை கண்டனர். கோவிலின் நடுமை யத்தில் இருந்த உண்டியலை, முன்பகுதி வளைக்கப்பட்ட இரும்பு கம்பியால் கிரில் கேட் அருகே இழுத்து. உண்டி யலை உடைத்து பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை ஊர் பிரமுகர்கள் கண்டுணர்ந்தனர். மேலும், கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், இது தொடர்பாக அங்கிருந்த வர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோவில் உண்டியல் கடந்த 9 மாதத்திற்கு மேலாக திறக்கப் படாததால் சுமார் ரூ.1 லட்சம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று ஊர் பிரமுகர்கள் கூறினார்கள். வரும் 18-ந் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இந்த காணிக்கை பணத்தை பயன்படுத்த ஊர் பிர முகர்கள் திட்டமிட்டிருந்த தும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் பட்டது. அங்கிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். சிறிது தூரம் சென்ற மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கோவிலின் உண்டியலை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.கே. நகரில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வயலூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வீடு சூறையாடப்பட்டது
    • தாக்கப்பட்ட பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் வசிக்கும் தங்கவேல் பூசாரியின் மகன்கள் முருகேசன், மாணிக்கம். இருவரிடையே சொத்து பிரிப்பதில் தகராறு காரணமாக முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசன் மருமகன் மோகன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, மாணிக்கம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.அப்போது மாணிக்கம் மனைவி பூங்காவனம் (வயது 60) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பூங்காவனம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வந்த அகரம்சீகூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 5 லட்சம் பணம்-நகைகள் திருட்டு நடந்ததாக போலீசில் மனைவி பரபரப்பு புகார் செய்தார்.
    • பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை சமயநல்லூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் உற்சவ விழா தொடங்கியது. இதில் முதல் மரியாதை யாருக்கு? என்பது தொ டர்பாக பொன்னம்பலம் தரப்புக்கும், தி.மு.க. கிளைச் செயலாளர் வேல்முருகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலம் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வீட்டில் நின்ற காருக்கு தீ வைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    கோவில் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய சத்திரப்பட்டி போலீசார், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.பிரமுகர் வேல் முருகன், ராஜபாண்டி, செந்தமிழன், கலைவாணன், ராஜ்மோகன், படையப்பா, சங்கர், அருண் உள்பட 18பேர் மீதும், வேல்முருகன் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னம்பலம்,

    அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் மற்றும் பழனிவேல், சின்னகருப்பு, விஜய், வேலுமணி உள்பட 20பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் வேல்மு ருகன், செந்தமிழன், ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள், சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டை, எதிர்தரப்பினர் சூறையாடிய போது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.5லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை-வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வழக்கத்தை விட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்றவற்றில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களில் அருப்புக்கோட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, பழக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). மளிகை கடை நடத்தி வரும் இவரது ரூ. 1 அரை லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து அருப்புக்கோட்டை டவுன் மற்றும் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சரண்யா என்பவரது பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று அருப்புக்கோட்டை பகுதிகளில் நாள்தோறும் கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்தில் இறங்கி சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது.
    • இயற்கையால் படைக்கப்பட்ட அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த அமராவதி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் தம்புரான் கோவில் அருகே அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவமும் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ், சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்து கடத்திச்சென்ற வண்ணம் உள்ளனர். அதே போன்று நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் முறைகேடான வழியில் நடைபெற்று வரும் தொடர் கனிமவள கொள்ளையால் தட்பவெப்ப நிலை மாற்றமும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    இது சம்பந்தமாக புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக புகார் அளிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் ஆய்வு செய்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

    விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    திருச்சியில் செல்போன் கடையை சூறையாடியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அருண்குமார் (வயது 20). இரு சக்கர வாகனங்களுக்கு சீட் கவர்கள் தைக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் திருச்சி என்.எம்.கே. காலனி 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்றனர். அங்கு தாங்கள் வைத்திருந்த செல்போனை வாங்கிக்கொண்டு, அதற்கான பணத்தினை கொடுக்குமாறு கூறியுள்ளனர். அப்போது வினோத் இங்கு ரீசார்ஜ் மட்டுமே செய்வோம் செல்போன் வாங்கி, விற்பது கிடையாது என கூறியுள்ளார்.

    தொடர்ந்து இருவரும் நாங்கள் இதே பகுதியை சேர்ந்தவர்கள் தான். எங்களிடம் இதனை வாங்கிக் கொள்ளுங்கள் என தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு வினோத் தொடர்ந்து மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, அவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் இது குறித்து வினோத்குமார் தனது உறவினரான கரிகாலன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார். வினோத் மற்றும்  உறவினர்களும் கடையினை சூறையாடிய அருண்குமார், ஜாகீர்உசேன் ஆகிய இருவரையும் தாக்குவதற்காக தேடி அலைந்தனர்.

    அப்போது இவரும் மேலப்புதூர் ரெயில்வேகேட் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற வினோத்குமார், கரிகாலன் (35), சிவா (23), மல்லிகைபுரத்தை சேர்ந்த ரீகன் (26) ஆகிய 4 பேர் அவர்களை தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அருண் குமாரின் தலையில் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற ஜாகீர் உசேனின் கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    பின்னர் அரிவாள் வெட்டில் காயமடைந்த இருவரையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அருண்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். ஜாகீர் உசேனுக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக  அடிதடி வழக்காக இதனை பதிவு செய்த போலீசார், தற்போது கொலை வழக்காக மாற்றி வினோத்குமார், கரிகாலன், சிவா, ரீகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த திலீப், கல்கண்டார்கோட்டையை சேர்ந்த வினோத், முதலியார் சத்திரத்தை சேர்ந்த மதன், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×