என் மலர்
நீங்கள் தேடியது "அமராவதி"
- செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாவர் அஜித்.
- 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படம் வெளியாகவுள்ளது.
1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்த இப்படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவிதா, நாசர், தலைவாசல் விஜய், சார்லி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமராவதி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே மாதம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது.
உடுமலை :
உடுமலையை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்பட்டு வருகிறது. வனப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் அதன் வழி உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பா ளையம், குடிமங்கலம், மடத்து க்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வரும் வரும் சுனைகளின் தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிரம்பி நின்ற இடங்கள் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:- வெப்பம் அதிகரித்து இருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. அங்கேங்கே அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யவில்லை. இதனால் கவலையாக உள்ளது. மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணைகளில் தூர்வாரும் பணியை தொடங்கி நீர் நிற்கும் தேங்கி பரப்பை அதிகப்படுத்த வேண்டும். நவீன இயந்திரங்கள் மூலம் ஆழப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றனர்.
நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 30.71 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 116 கனஅடி தண்ணீரும் நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது. அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 55.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இந்த தகவலை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- அணுகுசாலைகள், குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் :
பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.திட்டத்தில் நான்கு வழிச்சாலையுடன் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இணைவதற்கான அணுகுசாலைகள், குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் மடத்துக்குளம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, நான்கு வழிச்சாலைக்கு செல்லும் அணுகுசாலையில் அமராவதி பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. அந்த இடத்தில் கால்வாயை கடக்கும் வகையில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக கால்வாயின் ஒரு பகுதி மூடப்பட்டு பாலம் கட்டுமான பணி நடக்கிறது.
- ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம்.
- முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.
தாராபுரம்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை அமராவதி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர். ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது.
தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.
கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் என புரோகிதர்கள் தெரிவித்தனர்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் சில இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேப்போல் உடுமலை அமராவதி ஆற்றங்கரை மற்றும் திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில் பக்தர்கள் புனிதநீராடினர்.
- சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைநகர் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமராவதி சுற்றுசாலைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கட்டப்படும் வீட்டு வளாகங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை பார்வையிட்டார்.
ஏற்கனவே அமராவதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பணிகளையும் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பதவியேற்றதும் போல வரம் திட்டம் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மீண்டும் கொண்டு வந்து செயல்படுத்தவும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
- தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமராவதி ஆந்திராவின் தலைநகராக உருவாக்கப்படும் என அறிவிப்பு.
- பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி மூன்று இடங்களில் தலைநகர் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலம் ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது 10 வருடங்களுக்கு ஐதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும். அதன்பின் தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ தலைநகராக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 2-ந்தேதியுடன் 10 வருடம் முடிவடைந்தது. இதனால் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகிவிட்டது. ஆந்திர மாநிலத்திற்கு தலைநகர் இல்லாமல் உள்ளது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமராவதியை புதிய தலைநகரமாக உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டது. அதன்பின் ஜெகன்மோகன் ரெட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் என்ற திட்டத்தை உருவாக்கினார்.
என்ற போதிலும் இதுவரை எந்த நகரும் இன்றும் தலைநகராக உருவாக்கப்படவில்லை. தலைநகரம் தேர்ந்தெடுக்கப்படும் வரை வெலகபுடி தற்காலிகமாக செயல்பட்டது.
தலைநகரம் அரசு அதிகாரிகள் பணிபுரியும் முக்கிய முனையமாக செயல்படக் கூடியது. முக்கிய அரசு அமைப்புகளான நீதித்துறை, நிர்வாக அலுவலகங்கள், சட்டமன்றம் போன்றவை தலைநகரத்தில் இருக்கும். நிர்வாகத்தின் இந்த மையப்படுத்தல் திறமையான நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பொது சேவை வழங்கல் ஆகியவற்றை எளிதாக்குகிறது.
குந்தூர் மாவட்டத்தின் கிருஷ்ணா நதியோரம் அமைந்துள்ள அமராவதி, சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
51 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சிறந்த வகையில் தலைநகரை உருவாக்க கடந்த 2015-ல் மதிப்பீடு செய்யப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தால் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 2019-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி தோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார்.
அமராவதி தலைநகராக மாறுவதற்கான அனைத்து திட்டங்களுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தடைபோட்டார். திட்டங்களுக்கான பட்ஜெட்டை குறைக்க சிங்கப்பூர் நிறுவனம் வெளியேறியது. அத்துடன் மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டார். இதனால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது. நிலத்தை கொடுக்கக் கூடியவர்கள் உச்சநீதிமன்றததை நாடினர்.
தற்போது சந்திரபாபு நாயுடன் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார். இதனால் அமராவதிதான் மாநில தலைநகர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். விசாகப்பட்டினர் பொருளாதார தலைநகராக உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அமராவதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட சந்திரபாவு நாயுடு, தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு மக்களின் தலைநகர் மீண்டும் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவும் அமராவதியை மீண்டும் கட்டுவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடியுள்ளது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துவதற்கான மொத்த தொகையான 2500 கோடி ரூபாயில் 1500 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.
அமராவதியை தலைநகர் திட்டம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் ஆந்திரா தலைநகர் இல்லாமல் உள்ளது.
- இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
- நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4 மணி முதல் தூரலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இரவு 9 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப ட்டது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதன் காரணமாக மாநகர் பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
திருப்பூர் மற்றும் கோவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் ஆண்டி பாளையம்-கல்லூரி சாலை பகுதிகளை இணை க்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
இதனைத்தொடர்ந்து தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கடந்த ஒரு வாரமாக அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு சீரடைவதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று 3-வது நாளாக தடை நீடிக்கிறது.
இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து திரும்பி செல்கின்றனர்.
உடுமலை அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மறையூா், காந்த லூா், கோவில்கடவு உள்ளி ட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஓரிரு நாள்களில் அணை மீண்டும் நிரம்பும் என்று எதிா்பார்க்கப்படுவதாக பொது பணித்துறையினா் தெரிவித்துள்ளனா்.
90 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை 6 மணி நில வரப்படி நீா்மட்டம் 81.17 அடியாக உள்ளது. அணைக்கு 1266 கனஅடி நீா்வரத்து உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-25, கலெக்டர் முகாம் அலுவலகம்-55, திருப்பூர் தெற்கு-36, கலெக்டர் அலுவலகம்-30, அவி னாசி-40, ஊத்துக்குளி-59, பல்லடம்-17, தாராபுரம்-19, மூலனூர்-37, குண்டடம்-37, உப்பாறு அணை-50, நல்லதங்காள் ஓடை-25, காங்கயம்-54, வெள்ள கோவில் ஆர்.ஐ. அலுவலகம்-47, வட்டமலை கரை ஓடை அணை-56.40, உடு மலை-5, அமராவதி அணை-6, திருமூர்த்தி அணை-5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, மடத்துக்குளம்-5. மாவட்டம் முழுவதும் 612.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
- பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு,சிறு ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 84.20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
- விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
திருப்பூர்,ஜூலை.11-
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
எனவே கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக பிழித்திறன் இழந்து கடந்த ஆண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கரும்பு விளைவதற்கு ஏற்ற நீர் வளம் மற்றும் நிலவளம் கொண்ட பகுதியாகும்.
சிறப்பம்சம் கொண்ட இந்த ஆலை பராமரிப்பு இன்றி தற்போது இயங்கப்படாமல் இருப்பதால் கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள னர் .
எனவே மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு முழுமையாக ஆலையை புனரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலு வலகம் முன்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் பால தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினார். விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
- குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது
- பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது அமராவதி அணை. மொத்தம் 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து திருப்பூர் , கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. அக்டோபர், நவம்பர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்ததால் அணை முழு கொள்ளளவை அடைந்து பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.
அக்டோபர் மாதம் ஓரளவு மழை பெய்த போதும் நவம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வந்தது. இதே போல கொடைக்கானல் பகுதியிலும், கேரளப்பகுதிகளிலும், சின்னாறு ,பாம்பாறு, கூட்டாறு ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளிலும் நீடிக்க துவங்கியதால் அணை நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது.
கடந்த 10-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1400 கன அடியாக அதிகரித்து இருந்ததை தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர துவங்கியது. தொடர் மழை காரணமாக 11-ந் தேதி அணை நீர்மட்டம் 71 .23 அடியாகவும், 12ந் தேதி அணை நீர்மட்டம் 72.88 அடியாகவும், 13ந் தேதி 73. 33 அடியாகவும், 14-ந் தேதி 74 .12 அடியாகவும் உயர்ந்தது.
இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அணை வேகமாக தனது முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழியும் என பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உடுமலை , மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரலுடன் மழை நீடிப்பதால் தென்னை, மக்காச்சோளம் ,கரும்பு, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்தப்பள்ளியில் 2024-2025- ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9- ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
- 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதியில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 2024-2025- ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9- ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பதாரர்கள் https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அடுத்த மாதம் 16- ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். சேர்க்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த முழுமையான விவரங்களை nta.ac.in ; https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாகக்கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து அணை முழு கொள்ளளவை அடைந்து அமராவதி பிரதான கால்வாய் மற்றும் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து 422 கன அடியில் இருந்து 1,619 கன அடியாக அதிகரித்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 57.29 அடியில் இருந்து 59.65 அடியாக அதிகரித்து ஒரே நாளில் 2.34 அடி உயர்ந்துள்ளது. மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.






