search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flood risk"

    • சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
    • தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது.

    வேலூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் பெய்த புயல் மழையால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆறுமுகநேரி மற்றும் உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது.

    அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.

    இதனால் தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது. வரத்து குறைவாக உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வரும் உப்பு விலை உயர்ந்துள்ளது.

    50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை கடந்த மாதம் வரை ரூ.230-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 290 வரை விலை உயர்ந்துள்ளது.

    சில்லரை விலையில் கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உப்பு விற்பனைக்கு வருகிறது. மழை வெள்ளத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உப்பு வெள்ளத்தால் நாசமாகிவிட்டது. இதன் காரணமாக உப்பு விலை உயர்ந்துள்ளது.

    ஓட்டல்கள் மற்றும் தோசை, இட்லி மாவு தயாரிப்பவர்கள் உணவு தின்பண்டங்கள் தயாரிப்பவர்கள் மொத்தமாக கல் உப்பு வாங்கி செல்கிறார்கள்.

    மூட்டை மூட்டையாக உப்பு வாங்கிச் செல்லும் அவர்களுக்கு இந்த விலை உயர்வு கடினமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தின்பண்டங்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளது.

    தூத்துக்குடி பகுதியில் தற்போது உப்பளங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் மாவட்டத்தில் மற்ற இடங்களில் வெள்ள பாதிப்பால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    • உதவி கலெக்டர் எச்சரிக்கை
    • அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாண்டஸ் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூர் வட்டார அளவிலான பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அவர் பேசுகையில் கால்வாய்களில் அடைப்புகள் காணப்பட்டாலோ, ஏரிகளின் மதகுகள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டலோ அவை குறித்து விரிவான அறிக்கையினை அந்த பகுதி தாசில்தாருக்கும், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வெள்ள அபாயம் ஏற்பட்டால் உடனடியான மீட்பு பணிகள் மேற்கொளவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் தாசில்தார் சிவப்பிரகாசம், உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது.

    கடலூர்:

    மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணையிலிருந்து நீர் வரத்து வர தொடங்கியதால் கடலூர்மாவட்டம்பண்ருட்டி, எனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது.

    இந்தஅணையின் மூலம் 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

    மேலும் பல்வேறு பகுதி்களுக்குசாத்தனூர்அணையின் மூலம்கூட்டு குடிநீர் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால்சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், இன்ஸ்பெக்டர் நந்தகுமார், துணை தாசில்தார் சிவக்குமார் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தனர் .

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.

    • சாத்தனூர்அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது.
    • தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்குஏற்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது.

    கடலூர்:

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.சாத்தனூர் அணையில் நீர் வரத்து தொடங்கியதால் கடலூர் மாவட்டம்ப ண்ருட்டிஎனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்குஏற்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இந்தஅணையின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

    மேலும் பல்வேறு பகுதி்களுக்கு சாத்தனூர்அணையின் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ள தால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தார் தென்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவும் செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.

    ×