பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்

பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது.
 தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதை படத்தில் காணலாம்.
 தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையிலிருந்து நீர் வரத்து வர தொடங்கியதால் கடலூர்மாவட்டம்பண்ருட்டி, எனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது.

இந்தஅணையின் மூலம் 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

மேலும் பல்வேறு பகுதி்களுக்குசாத்தனூர்அணையின் மூலம்கூட்டு குடிநீர் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால்சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், இன்ஸ்பெக்டர் நந்தகுமார், துணை தாசில்தார் சிவக்குமார் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தனர் .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com