search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in water flow"

    • சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.
    • கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைக்கு மழைநீர் வர தொடங்கியுள்ளது. வறண்ட நிலையில் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு, எடப்பாடி பகுதிகளில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    இதே போல ஏற்காட்டில் நேற்று மதியம் கன மழை கொட்டியது. இரவிலும் சாரல் மழை நீடித்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதே போல சங்ககிரி, கரியகோவில், வீரகனூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    227.7 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 58 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடி 52, சங்ககிரி 30, கரியகோவில் 28, ஏற்காடு 24.2, வீரகனூர் 20, காடையாம்பட்டி 6.4, ஆத்தூர் 4, கெங்கவல்லி 2, சேலம் 1.1., பெத்தநாயக்கன்பாளையம் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 227.70 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    • நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது.
    • பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து வரும் தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளிலும், கேரளாவின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 822 கன அடி நீர் வந்த போது அணையின் நீர் மட்டம் 119.65 அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 1708 கன அடியாக இருந்த நீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 120.25 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு 2593 கன அடி நீர் வருகிறது.

    இதனால் அணையின் நீர் மட்டம் 121.20 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2886 மி.கன அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 48.69 அடியாக உள்ளது. நீர் வரத்து 139 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1826 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.50 அடி. வரத்து 11 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 90.20 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49.43 மி.கன அடி.

    பெரியாறு 49.4, தேக்கடி 21.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.
    • குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்ட குளம், குட்டைகள் உள்ளன. மாவட்டத்தின் முதல் குளமாக இருப்பது சாமளாபுரம் குளம். செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

    ஏற்கனவே 80 சதவீத தண்ணீருடன் நிரம்பியிருந்த சாமளாபுரம் குளம் தற்போது நிரம்பி வழிகிறது. சாமளாபுரம் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், வழங்குவாய்க்கால் வழியாக பள்ளபாளையம் குளம் செல்கிறது.

    பள்ளபாளையம் குளமும் வேகமாக நிறைந்து, உபரிநீர் பரமசிவம்பாளையம் ஓடை வழியாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டு பள்ளபாளையம் குளத்தின் கசிவு நீரும் வாய்க்கால்களில் சென்று கொண்டிருக்கிறது.

    இதேபோல், ஆண்டி பாளையம் குளமும் நிரம்பி, அடர்மரங்கள் வளர்ந்த இரு தீவுகளுடன் கண்கொள்ளா காட்சியாக, அமைந்துள்ளது. முக்கியமான குளங்கள் நிரம்பியுள்ளதால் நஞ்சராயன் குளத்துக்கு வரும் பறவைகள், ஓய்வு நேரத்தில், சாமளாபுரம், பள்ளபாளையம், ஆண்டிபாளையம் குளங்களுக்கும் திரும்பி கொண்டிருக்கின்றன.பருவமழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயருமென விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக வரும் நல்லாறு, திருப்பூர் மாநகராட்சி பகுதி வழியாக செல்கிறது. நல்லாற்றின் குறுக்கே, 450 ஏக்கரில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் நேரடியாக நல்லாற்றில் கலக்கின்றன. முறைகேடாக இயங்கும் சில சாயப்பட்டறைகள், 'பட்டன் - ஜிப்' பட்டறைகள் நல்லாற்றில் சாயக்கழிவை வெளியேற்றுகின்றன.

    நல்லாறு முழுமையாக மாசுபட்டு, கடும் துர்நாற்றத்துடன், ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. சிறிய மழை பெய்தாலும், சாயக்கழிவை நல்லாற்றில் திறந்துவிடுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதற்கு ஆதாரமாக, நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாட்சியாக காட்டுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக நல்லாற்றிலும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில், சாயக்கழிவை கலந்துவிடுவதால் குளத்தில் இருக்கும் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், மழை பெய்யும் வாரங்களில், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும்.பல நாட்களுக்கு அகற்றாமல் இருக்கும் போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    வலை மூலமாகவும், தூண்டில் போட்டும் குளத்தில் மீன் பிடிக்கின்றனர். சில நேரம் ஆபத்தை உணராமல் குளத்திற்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர். சில நேரங்களில் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் சாப்பிட தகுதியற்றவையாகவும் இருக்கும்.மாவட்ட நிர்வாகம், குளத்தில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

    பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பினர் கட்டுப்பாட்டில் அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர், கிளாக்குளம், நடுவச்சேரி, கருவலூர், அவிநாசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பல 100 ஏக்கர் பரப்பளவில் குளங்கள் உள்ளன.

    இதில் கிளாக்குளம், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட சாலையை ஒட்டியுள்ள குளங்களில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு, குழாய் பதிக்கும் பணி நடந்தது. தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் குளக்கரை பலவீனமடைந்தது.

    இதே போன்று புஞ்சை தாமரைக்குளமும் பலவீனமடைந்தது. அதோடு எஞ்சிய பிற குளங்களின் கரைகளை பலப்படுத்தவும், குளங்களை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும் 7 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே தத்துனூர்ஊராட்சியில் 846 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர், புலிப்பார், புஞ்சைத்தாமரைக்குளம் என 3 ஊராட்சிகளில் உள்ள, 845 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்துக்கு ஒப்படைக்க நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டது.அங்கு பேட்டரி கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதனால், ஆயிரம் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக, 'சிப்காட் திட்டம் கைவிடப்படுகிறது என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட மாட்டாது என்பதே முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.

    தற்போது அவிநாசி அருகேயுள்ள அன்னூரில் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்

    தத்தனூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெய்யும் மழையால் பசுமை திரும்பியுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளவே விவசாயிகள் விரும்புகின்றனர். தத்தனூர் மட்டுமின்றி, புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் உட்பட அருகிலுள்ள ஊராட்சிகளில் 'சிப்காட்' தொழிற்பூங்காவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். எனவே சிப்காட் தொழிற்பேட்டை வராது என நம்புகிறோம் என்றனர்.

    • விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. வயல்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஒரு சில குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மா, வாழை, தென்னை உள்ளிட்ட மரப் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பேருதவியாக அமைந்துள்ளது.

    கார்த்திகை பட்டம் துவங்க உள்ளதால் விவசாயிகள் மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்திற்கு போதுமான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.இந்த சீசனில் நல்ல விலை கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

    பயிர் சாகுபடிக்கு போதுமான மழை பெய்துள்ளதாலும், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்துவங்கி உள்ளதாலும் கார்த்திகை பட்ட சாகுபடி பரப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பார்த்திபனூர் மதகு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    ராமநாதபுரம் வைகை பழைய மூன்றாம் பாசனப்பரப்பின் பங்கீட்டு நீர் வைகை அணையில் இருந்து 8.8.2022 முதல் 14.8.2022 வரை ஆறு நாட்களுக்கு 1148 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் 27.08.2022 முதல் 02.09.2022 வரை ஆறு நாட்களுக்கு 840 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனுடன் வைகை ஆறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழைநீரும் சேர்ந்து பெறப்பட்டது. இதன் மூலம் வைகை பாசனப்பரப்பில் பயன் பெறும் கண்மாய்களில் 104 கண்மாய்களுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த 104 கண்மாய்களில் 14 கண்மாய்கள் 75 -100 சதவீதம், 37 கண்மாய்கள் 50 -75 சதவீதம், 32. கண்மாய்கள் 25 -50 சதவீதம், 21 கண்மாய்கள் 25 சதவீதம் வைகை தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்படும் தண்ணீரை நம்பியுள்ளது. தற்சமயம் வடகிழக்கு பருவமழைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வைகை அணையிலிருந்து பெறப்பட்ட வைகை நீரின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 104 கண்மாய்களுக்கும் எஞ்சிய பிற கண்மாய்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது ஓர் அரிய நிகழ்வாகும். ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மொத்த கொள்ளளவாகிய 7 அடியில் 6 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தலைமதகில் உள்ள 7 போக்கிகளுடன் கூடுதலாக 2 போக்கிகள் அமைக்கப்பட்டதன் மூலமாக வினாடிக்கு 1850 லிருந்து 2300 கனஅடி கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டு நீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

    2-வது பெரிய கண்மாயான சக்கரக்கோட்டை கண்மாய்க்கு வெள்ள காலங்களில் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுவந்த நிலையில் தற்பொழுது 40 சதவீதம் மேல் தண்ணீர் வழங்கப்பட்டு நீர் இருப்பு மேலும் உயர்ந்து வருகிறது.

    வைகை நீர் பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து பரளை வெள்ளை நீர் போக்கி வழியாக வினாடிக்கு 750 கனஅடி முதல் 1000 கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பரளையாறு மூலம் பயன் பெறும் 10 நீர்வளத்துறை கண்மாய்களில் 2 கண்மாய்களில் 50 சதவீதத்திற்கு மேலாகவும் மற்றும் 4 கண்மாய்கள் 25 சதவீதத்திற்கு மேலாகவும் நீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப தற்பொழுது உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் இணைப்பு கால்வாய்களுக்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் வீணாகாமல் சேமித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, வைகை ஆறு வடிநிலை கோட்ட உதவி செயற்பொறியாளர் நிறைமதி, உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, சீனிவாசன், கார்த்திக், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது
    • நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியகுளம், மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தேனி ரெயில் நிலையத்துக்குட்பட்ட தண்டவாளத்தில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி பாதையை சீரமைத்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.60 அடியாக உள்ளது. வரத்து 969 கன அடி. திறப்பு 1866 கன அடி. இருப்பு 6017 மி.கன அடி.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. வரத்து 1784 கன அடி. திறப்பு 2069 கன அடி. இருப்பு 5681 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடி. வரத்து 15 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.37 அடி. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    பெரியாறு 7.2, தேக்கடி 23.8, கூடலூர் 4.6, உத்தமபாளையம் 10.7, வீரபாண்டி 8.2, வைகை அணை 3, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 6, ஆண்டிபட்டி 7.2, அரண்மனைபுதூர் 14, போடி 3.6, பெரியகுளம் 15 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உள்பட நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    பல மடங்கு

    இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நேற்று முன் தினம் காலை முதலே நீர்வரத்து பெருமளவு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் குந்தா அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேகமாக உயர்ந்து வருகிறது

    முன்னதாக அணை திறக்கப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் மின்வாரிய தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

    குந்தாஅணை திறந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டதால் கெத்தை அணையின் நீர் மட்டம் மள,மளவென உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    • நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது.
    • அணைக்கு நீர் வரத்து காலை 9 மணி முதல் அதிகரிக்க தொடங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி முதலில் கீழ் மதகுகள் வழியாகவும், அதன் பிறகு மேல் மதகுகள் வழியாகவும் 25,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சத்திய–மங்கலத்தில் கரையோரம் இருந்த சுமார் 15 குடும்பத்தினர் பாது–காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையோரம் பகுதியில் இருந்த வர சித்தி விநாயகர் கோவில் படிக்கட்டை வெள்ளம் சூழ்ந்தது.

    கோபி அருகே உள்ள அரசூர் மற்றும் மாக்கி–ணாங்கோம்பை கிராமங்கள், அத்தாணி அப்பக்கூடல் பகுதிகளில் உள்ள கரையோர பகுதி–களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் நீரும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,300 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இந்த 12,300 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து காலை 9 மணி முதல் அதிகரிக்க தொடங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாக கொடிவேரி அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக இன்று 4 -வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொது மக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம் அணை 27.41 அடியாகவும், பெரும்பள்ளம் அணை 17.49 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை 33.50 அடியாகவும் உள்ளது. 

    • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    • அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகின்றன. இதில் திருவண்ணாம லையில் தொடர்ந்து கன மழை பெய்ததில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. தாமரை நகர் பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

    ஒசூர் அருகேயுள்ள கெலவரப் பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டியதால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இதனால் தென்பெண்ணை ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 4,270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சாத்தனூர் அணையில் முழு கொள்ளளவு 119 அடியாகும் இதில் தற்போது 113 அடி கொள்ளளவு எட்டி உள்ளன.

    அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 50.18 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர் மட்டம் 20.50 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 50.71 அடி யாகவும் உயர்ந்திருக்கிறது.

    மேலும், ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து கன மழை நீடிப்பதால், அங்குள்ள பீமன் நீர்வீழ்ச் சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நீர் வீழ்ச்சி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்திருக்கிறது.

    ×