ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர் வரத்து கடுமையாக சரிந்து வந்தது. நேற்று மாலை வரை 3 ஆயிரம் கன அடி அளவில் மட்டுமே வந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com