என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrababu Naidu"

    • சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடினார்.
    • மாநிலத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆந்திர மாநில பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    டெல்லி விமான நிலையத்திற்கு சென்றபோது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை எதேர்ச்சியாக சந்தித்தார். சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடினார்.

    இன்று ஜல் சக்தி மந்திரி சி.ஆர்.பாட்டில், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

    அப்போது அமராவதி கட்டுமான பணிக்கு அதிக நிதி, கலப்பட நெய் வழக்கு மற்றும் 16-வது நிதி அறிக்கை பரிந்துரைகளால் மாநிலத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்தது.
    • புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

    கர்னூல் மாவட்டம் களுகோட்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்த நிலையில், இப்போது ரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

    முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் பவன் கல்யாண் பரிகார விரதம் இருந்தார் .
    • ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்த நெய்யை பயன்படுத்தியதாக 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.

    லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார்.

    இதனையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

    இதனிடையே திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்றார்.

    இதனிடையே ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் விலங்குகளின் கொழுப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்துள்ளன.

    • கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?.
    • சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள்.

    ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக தெலுங்கானாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி மீது குற்றம்சாட்டி வருகிறது. மேலும், ஆந்திராவுடன் இணைந்திருந்தபோதும் கூட அநீதி இழைக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ராயலசீமா நீர்ப்பாசன திட்டம் குறித்து குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில், நதி நீர் தொடர்பாக ஆந்தியா- தெலுங்கானா இடையே சர்ச்சை தேவையில்லை என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?. சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள். போலாவரம் திட்டம் நிறைவடைந்ததும் தெலுங்கான நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அரசாங்கத்தின் போது செய்யப்பட்ட 'தவறுகள்' சரிசெய்யப்பட்டுவிட்டன. வருவாய் தொடர்பான சர்ச்சைகளை தீர்க்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. சிலர் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். தவறுகளைச் செய்துவிட்டு, பழியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    • தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
    • தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது.

    ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் 4-வது உலக தெலுங்கு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    மக்கள் ஒருவருக்கொருவர் அவரவர்களுடைய மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஒரு மொழியை விட மற்றொரு மொழி உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அல்ல. தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு மொழியின் மீது அன்பு கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    • இந்தியாவில் இருந்து சுமார் 4 முதல் 5 கோடி மக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர்.
    • எந்த நாட்டிற்குச் சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் ஈட்டப்படுகிறது.

    மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    திருப்பதியில் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, 

    இந்தியாவின் மக்கள் தொகை, அறிவு மற்றும் திறமை நமது பாரம்பரிய மதிப்புகள் மற்றும் தேசிய இலக்குகளுடன் இணைந்தால், உலகளாவிய சக்தியாக இந்தியா உருவெடுப்பதைத் யாராலும் தடுக்க முடியாது. வயதானவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. இந்த விஷயத்தில், இன்று நீங்கள் பார்த்தால், இந்தியாவில் இருந்து சுமார் 4 முதல் 5 கோடி மக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். இன்று நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் ஈட்டப்படுகிறது.

    எந்தவொரு ஆடம்பரமான பகுதியும், அமெரிக்காவில் கூட. அமெரிக்கர்களின் சராசரி வருமானம் 55,000 டாலர்கள் முதல் 60,000 டாலர்கள் வரை இருக்கும், அதே நேரத்தில் இந்தியர்கள் சுமார் 135,000 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள், இது இரண்டு மடங்கு அதிகம். மோகன் பகவத் எப்போதும் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047க்குப் பிறகும் இந்தியாதான் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும்' என தெரிவித்தார். 

    • ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன்.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அமராவதி வெங்கடபாலத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 2-வது பிரகாரம், 7 மாடி மகாராஜா கோபுரம், 3 கோபுரங்கள் ஆர்ஜித சேவை மண்டபம், வாகன ரத மண்டபம், பஞ்சமுக ஆஞ்சநேய சாமி சிலை மற்றும் புஷ்கரணி ரூ.260 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஏழுமலையான் முன்னிலையில் மக்கள் தூய்மையாகவும், சுத்தமாகவும், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். கோவில் விரிவாக்க பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் நான் சிறு வயதிலிருந்து ஏழுமலையானை வணங்கி வருகிறேன்.

    ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன். அங்கு சாதாரண மனிதனாக இருப்பதுதான் என்னுடைய உணர்வு. தவறு செய்தவர்கள் அடுத்த பிறவில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

    தவறு செய்தவர்களுக்கு இந்த பிறவிலேயே அவர்களை ஏழுமலையான் தண்டிப்பார். சாமியை தரிசிக்க செல்லும் அனைவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும். ஏழுமலையானை யாரும் அவதூறு செய்ய விடமாட்டேன். கடந்த 2003-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இருந்து எனது உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும். மும்பையில் ரூ.100 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோவிலை கட்ட ரேமன்ட் நிறுவனம் முன் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • நிதிஷ் குமார் கட்சி கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு இடங்களை பிடிக்க இருக்கிறது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் பவன் கல்யாண் "பீகார் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
    • துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    மோன்தா புயலின் பாதிப்பால், ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி இரவு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.

    இந்தப் புயலால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, மோன்தா புயலால் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு ரூ. 2,079 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.829 கோடியும், மீனவளத் துறைக்கு ரூ.1,270 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பல மாவட்டங்களில் இன்னும் நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால், சேதத்தின் முழுமையான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

    எனினும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.  

    • புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வான்வழியாக ஆய்வு செய்தார்.
    • சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

    வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் நேற்று இரவு மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடந்தது.

    இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது.

    இந்நிலையில், ஆந்திராவில் மோன்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து கொனசீமா மாவட்டத்தில் மோன்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர், நீரில் மூழ்கிய பயிர் வயல்களை ஆய்வு செய்த அவர், பயிர் சேதம் விரைவில் மதிப்பிடப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

    • மோன்தா புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் ஆந்திர பிரதேச மாநிலம் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் (காகிநாடா) இடையே நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகுிறது.

    ஆப்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. ஆந்திர மாநில கடையோர பகுதிகள் இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியுள்ளார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்ததாகவும், பிரதமர் அலுவலகத்துடன் தொழில்நுட்ப அமைச்சர் நர லோகேஷ் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

    அப்போது எங்கெல்லாம் மழை பெய்யும், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பயிர்கள் சேதமடைவதை தடுக்க கால்வாய்கள், குளங்கள், ஏரிகளின் கரையோரங்களை வலுப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் புயலின் நிலை குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

    கிருஷ்ணா மாவட்டத்தில் இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், குண்டூர், பபட்லா, என்டிஆர், பல்நாடு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
    • உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாகவும்,18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கலில், இந்த விபத்தை பேரழிவு என்று குறிப்பிட்டு, காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஹெல்ப்லைனை நிறுவவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    பேருந்து தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

    ×