என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus Fire Accident"

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தெலுங்கானாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பயணித்த பேருந்து மீது டீசல் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து 24 வயதான வாலிபர் ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, மதீனா நகருக்கு செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 



    • இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
    • இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். 



    • பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
    • தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.

    இதை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 8002440003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    • விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

    சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் மக்காவில் தங்கள் புனித சடங்குகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.

    நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. 



    • உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்துள்ளது.
    • உயர் மின்னழுத்த வயரில் உரசி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர்- டெல்லி நெடுஞ்சாலையில் மனோகர்புரா-ஷாபூர் அருகே உயர்அழுத்த மின்கம்பியில் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து உரசி தீப்பிடித்ததில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ஷாபூர்-மனோகர்புரில் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களை உத்தர பிரதேச மாநலம் பிலிபிட்டில் இருந்து படுக்கை வசதி கொண்டு பேருந்து ஏற்றிக்கொண்டு வந்தது. மனோகர்பூரில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் உயர்மின்அழுத்தம் கொண்ட வயரில் உரசி பேருந்து தீப்பிடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தீப்பிடித்ததால் தொழிலாளர்கள் கிடையே அச்சம் ஏற்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் ஜன்னலை உடைத்து வெளியேறினர். மற்றவர்கள் தீயில் கருகி காயம் அடைந்தனர். சிலர் மின்வயரால் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர்.

    காயம அடைந்தவர்களில் 4 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி எஸ்எம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

    50 முதல் 60 தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது குடும்பம் மற்றும் லக்கேஜ் உடன் பேருந்தில் வந்துள்ளனர். சிலர் சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் பஜன் லார் சர்மா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.

    • குர்னூரில் நடந்த ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் கருகி உயிரிழந்தனர்.
    • குடிபோதையில் இருந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை ஓட்டியதுதான் விபத்து முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி பலியாகினர். இவர்களில் 19 பேர் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள். ஒருவர் குடிபோதையில் இருசக்ர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் சிவசங்கர்.

    இவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது, திடீரேன பைக் உடன் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த பைக், டிவைடரில் (சாலை நடுவே உள்ள தடுப்பச்சுவர்) மோதியுள்ளது. அப்போது அந்த பகுதியாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை இழுத்துச் சென்றுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து, அது பேருந்தில் பரவி 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது அனைத்துக்கும் காரணம் சிவசங்கர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததுதான். இந்த நிலையில் நகர போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள் என கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கருணை காட்டக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக சஜ்ஜனார் கூறியதாவது:-

    குடிபோதையில் வாகனம் ஒட்டுபவர்கள் பயங்கரவாதிகள். அந்த காலக்கட்டத்தில், அவர்களின் செயல்கள் நமது சாலைகளில் பயங்கரவாதச் செயல்களைத் தவிர வேறில்லை. பயங்கரமான குர்னூல் பேருந்து விபத்து, 20 அப்பாவி மக்களில் உயிர்களை பிறந்துள்ளது. உண்மையான அர்த்தத்தில் அது விபத்து அல்ல. இது ஒரு தடுக்கக்கூடிய படுகொலை. குடிபோதையில் பைக் ஓட்டியவரின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற நடத்தையால் ஏற்பட்டது.

    இது ஒரு சாலை விபத்து அல்ல, மாறாக ஒரு குற்றச்செயலாகும், இது அலட்சியத்தால் ஏற்பட்ட குற்றமாகும், இது சில நொடிகளில் முழு குடும்பங்களையும் அழித்தது.

    பி. சிவசங்கர் என அடையாளம் காணப்பட்ட பைக் ஓட்டுநர், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளில் அவர் அதிகாலை 2:24 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதைக் காட்டுகிறது. அதற்கு சில நிமிடங்களுக்கு பின் அவர் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:39 மணிக்கு பேரழிவு தரும் மோதலை ஏற்படுத்தியுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டும் அவரது முடிவு, ஆணவத்தின் ஒரு தருணத்தை கற்பனை செய்ய முடியாத அளவிலான சோகமாக மாற்றியது.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எல்லா வகையிலும் பயங்கரவாதிகள் என்ற எனது கூற்றில் நான் உறுதியாக நிற்கிறேன். அவர்கள் வாழ்க்கையையும், குடும்பங்களையும், எதிர்காலத்தையும் அழிக்கிறார்கள். இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பிடிபடும் ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முழு சக்தியையும் எதிர்கொள்வார்கள். அப்பாவி உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு எந்த கருணையும், விதிவிலக்கும், கருணையும் இருக்காது. ஒரு சமூகமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவறு என்று அழைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது வாழ்க்கையை சிதைக்கும் ஒரு குற்றம், அதற்கேற்ப தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
    • அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ் நேற்று காலை ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது.

    பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.

    இந்நிலையில் ஆம்னி பஸ்ஸில் பார்சலில் வைக்கப்பட்டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புடைய 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே தீவிபத்து தீவிரமடைய காரணம் என்று தெரியவந்துள்ளது.

    பேருந்தின் சரக்கு வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பம் காரணமாக வெடித்ததால் தீ மளமளவென பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பயணிகள் பேருந்தில் செல்போன்கள் பார்சலை எடுத்துச் சென்றது கடுமையான பாதுகாப்பு விதிமீறலாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

    பைக்கில் வந்து பேருந்துடன் மோதியவர்கள் விபத்துக்கு சிறிது நேரம் முன் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் காணப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. எனவே விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே பஸ் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும். 

    • சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
    • ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார்.

    திருப்பூர்:

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இதில் திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர், உடல் கருகி பலியான தகவல் வெளியாகி உள்ளது.

    திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன்கள் ஜெயபிரகாஷ், யுவன் சங்கர் ராஜா (வயது 23). மொபட்டில் சென்று காய்கறி வியாபாரம் செய்யும் ராஜா, மிகவும் கஷ்டப்பட்டு தனது இரு மகன்களையும் படிக்க வைத்தார்.

    ஜெயபிரகாஷ் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பி.எஸ்சி. படிப்பு முடித்த யுவன் சங்கர்ராஜா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியார் மருந்து கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே திருப்பூருக்கு பெற்றோரை காண வந்தார்.

    அதன்பின் மீண்டும் ஐதராபாத் சென்று பணிபுரிந்து வந்தார். நீண்ட தூரத்தில் பணியாற்றிய அவர் தமிழக பகுதியிலும் வேலை தேடினார். இதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணலுக்கு யுவன் சங்கர் ராஜா அழைக்கப்பட்டார்.

    இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார். ஆம்னி பஸ்சின் 3-ம் நம்பர் இருக்கையில் இருந்த அவர் தீ விபத்தில் உடல் கருகி பலியானார். யுவன்சங்கர் ராஜா இறப்பு செய்தி கேள்விப்பட்டதும், அவரது பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக உறவினர்களுடன் கர்னூல் மாவட்டத்துக்கு சென்றனர்.

    யுவன் சங்கர் ராஜாவின் இறப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரது பெற்றோரிடம் ரத்தம் பெறப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகே அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது.
    • பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.

    ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்தது. பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.

    பயணிகள் ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்சில் இதமான போர்வைகளால் போர்த்தப்பட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் அந்த நேரத்தில் அது அவர்களின் கடைசி தூக்கம் என்று தெரியாது.

    பஸ்சில் பலியான 19 பேரின் முழு வாழ்க்கையும், கொளுந்துவிட்டு எரிந்த தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது.

    இந்த விபத்தில் 19 பயணிகள் உடல் கருகி இறந்தனர். அவர்களிடமிருந்த செல்போன்கள், லேப்டாப்கள் வெடித்து சிதறியது.

    விபத்து குறித்து உயிர் தப்பிய பயணிகள் கூறியதாவது:-

    விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    எங்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் கை, கால்களை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பித்தோம்.

    பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.

    தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து முன்பக்க கதவை திறந்து விட்டிருந்தால் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு டிரைவர்களின் அலட்சியமே காரணம். அவர்கள் முன் பக்க கதவை திறந்து விடவில்லை. பயணிகளை எச்சரிக்காமல் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உயிர் தப்பிய அஷ்வின் என்பவர் கூறுகையில்:-

    நான் டிரைவர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். தீ விபத்து ஏற்பட்டதும் கண் விழித்தேன். டிரைவர் ஒருவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். மேலும் கீழே குதித்து மணலை அள்ளி வீசி தீயை அணைக்க முயன்றதை கண்டேன்.

    ஆனால் அவர்கள் முழுமையாக முயற்சி செய்யாமல் ஓடிவிட்டனர். நான் பஸ் ஜன்னல் வழியாக குதித்து தப்பினேன் என்றார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்ஸை ஓட்டி வந்தவர் பல்நாடு மாவட்டம் ஒப்பி செர்லாவை சேர்ந்த டிரைவர் லட்சுமய்யா என தெரியவந்தது.

    கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆனால் லட்சுமய்யா 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 10-ம் வகுப்பு தோல்வி அடைந்ததாக போலி சான்றிதழ் கொடுத்து கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றது தெரியவந்துள்ளது.

    பஸ்சில் தீ அணைக்கும் கருவி, ஜன்னல்களை உடைக்கும் சிறிய சுத்தியல் போன்றவை இல்லை. இதனால் உயிர் பலியை தடுக்க முடியவில்லை. விதிமீறியதாக ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    பஸ்சில் இருந்த பயணிகளில் 18 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் லக்கேஜ் கேரியரில் ஒரு பயணி இறந்து கிடந்தார். அவர் எப்படி லக்கேஜ் கேரியருக்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற பயணி ஒருவரின் உடல் ஜன்னலுக்கு வெளியே பாதியும் உள்ளே பாதியும் கருகிய படி கிடந்தார். இது விபத்தின் தீவிரத்தை காட்டியது.

    இறந்தவர்களில் 18 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    முன்பதிவு செய்யாமல் பயணித்த ஒரு பயணியின் அடையாளம் தெரியாமல் உள்ளது.

    மேலும் பஸ் விபத்தில் பலியானவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மதகிரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 32) இவர் சங்கா ரெட்டி பகுதியில் சிப்ஸ் தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ்சில் அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

    மேலும் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (22 )என்பது தெரிய வந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். 

    • கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன.
    • காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.

    இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
    • உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாகவும்,18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கலில், இந்த விபத்தை பேரழிவு என்று குறிப்பிட்டு, காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஹெல்ப்லைனை நிறுவவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    பேருந்து தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

    • தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர்.
    • பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

    ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட போது பலரும் அவசர கால கதவு வழியே குதித்து தப்பியுள்ளனர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து தீயை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனிடையே, பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    ×