என் மலர்
சவுதி அரேபியா
- 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
- தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.
அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.
இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.
- ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கியது.
அபுதாபி:
சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச டி20 லீக் தொடரில் நேற்று நடந்த ஷார்ஜா வாரியர்சுக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் இந்த மைல்கல்லை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் எட்டினார்.
இந்தப் பட்டியலில் ரஷித் கான் 681 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், பிராவோ 631 விக்கெட்டுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
இதையடுத்து, சுனில் நரைனின் சாதனையை நினைவுகூரும் வகையில் 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கி சிறப்பித்தது.
ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சவுதி பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.
- கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இதன் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
- பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.
- 24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில், இந்த கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். முகமது அப்துல் சோயிப் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்ததாக கூறப்படுகிறது.
இவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
- தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.
இதை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 8002440003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
- விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் மக்காவில் தங்கள் புனித சடங்குகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
- வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கஃபீல் எந்த வேலைக்கும் அமர்த்த முடியும்.
- வேறு வேலைக்கு மாற விரும்பினால், கஃபீல் பயண ஆவணங்களை பறிமுதல் செய்து வைத்து விடுவார்.
சவூதி அரேபியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலான சர்ச்சைக்குரிய கஃபாலா தொழிலாளர் ஸ்பார்ன்சர்ஷிப் முறை ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு, அந்த மாதம் தொடக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இது ஒரு நவீன கால அடிமை முறையாக பார்க்கப்படுகிறது. இந்த முறைப்படி கஃபீல் என அழைக்கப்படும் உத்தரவாதம் வழங்குபவர் அல்லது பிணை வழங்குபவர் (பொதுவாக முதலாளி) தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் கட்டுப்படுத்த முடியும். அவர்கள் வேறு வேலைக்கு செல்ல விரும்பினால் அல்லது சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பினாலும் கூட, டிராவல் ஆவணங்களை பறிமுதல் வைத்துக் கொள்ள இந்த முறை அனுமதி அளித்தது.
இந்த முறையால் மாட்டிக்கொண்ட கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த செவிலியர் ஜெசிந்தா மென்டோன்சா வாழக்கை கொடுமையாக இருந்தது.

கணவர் இறந்ததால், மூன்று குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியரான ஜெசிந்தா, செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து, மாதம் 25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்பதால் கத்தாருக்கு செல்ல விரும்பினார். ஆனால், ஏஜென்ட் அவரை ஏமாற்றி சவூதி அரேபியாவுக்கு கடத்திச் சென்றனர்.
அங்கு உள்ள ஒருவரிடம் ஒப்படைத்தனர். அந்த உரிமையாளரின் தாய் மற்றும் மூன்று மனைவிகளுக்கு பணிபுரிய வேண்டியதாயிற்று. ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு, சரியாக சாப்பாடு வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். கஷ்டப்பட்டு அமைச்சகம் உதவியுடன் ஜெசிந்தா மீட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இந்த முறையால் இந்தியாவைச் சேர்ந்த 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு இனிமேல் இதுபோன்று கொடுமைகள் நடக்காது.
இஸ்ரேல் மற்றும் பஹ்ரைனில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதைப் போல, சவுதி அரேபியாவிலும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வாறு செய்யக்கூடாது. குவைத், லெபனான், கத்தார் போன்ற நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் இந்த முறை இன்னும் இருந்து வருகிறது.
இதுபோன்ற நாடுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த 2.5 கோடி வெளிநாட்டினர் வாழ்ந்து வருகின்றனர். அதில இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் 75 லட்சம் பேர் ஆவார்கள்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் "Vision 2030" மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த முறை ரத்து செய்யப்படும் என ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாட்டின் பிம்பத்தை மாற்றுவதற்காக பல டிரில்லியன் டாலர் செலவில் மறுசீரமைப்பு செய்ய பட்டத்து இளவரசர் முடிவு செய்துள்ளார். 2029 ஆசிய விளையாட்டு போட்டிக்கு முன்னதாக இந்த மறுசீரமைப்பு செய்ய சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்களில், 25 லட்சம் இந்தியர்கள் பயன் அடைவார்கள்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் பிற உலகளாவிய நிறுவனங்கள், வளைகுடா நாடுகள் கஃபாலா முறையைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டின. அவை 'ஸ்பான்சர்ஷிப்' என்ற போர்வையில் மனித கடத்தலை அனுமதிப்பதாக குற்றம் சாட்டின.
பெண்கள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கஃபீல்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களை உரிமைக் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. உதாரணமாக, 2017 ஆம் ஆண்டில், குஜராத்தில் ஒரு பெண் சவுதி அரேபியாவில் தனது 'ஸ்பான்சரால்' பாலியல் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டார், பின்னர் இந்திய அரசாங்கத்தால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இதேபோல் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர் முறை, 1950ஆம் ஆண்டுவாக்கில், வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்த திறன் மற்றும் திறன் அற்ற தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் வகையில கொண்டு வரப்பட்டது. கட்டுமான தொழில் அல்லது உற்பத்தி துறைகளில் அவர்கள் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். பொருளாதார் சரிந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து தொழிலாளர்கள் கஃபீல் என்பதற்குள் கட்டப்பட்டனர். அவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. தொழிலளர்கள் வாழ்க்கை உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தும் முதலாளிகளாக இருந்தனர்.
முதலாளின் அனுமதி இன்று அவதூறு வழக்கு தொடர முடியாது.
- "360 டிகிரி" என்றழைக்கப்படும் ரோலர் கோஸ்டர் சுழலும்போது இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
- சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.
சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.
இன்று பூங்காவில், "360 டிகிரி" என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும்போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார்.
- இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். சவுதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீசின் தலைமுறையில் வந்த கொள்ளு பேரன் ஆவார்.
இவர் கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். அப்போது அவருக்கு வயது 15 ஆகும். கோமா நிலையில் அவர் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தார். இதனால் அவர் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார். இந்த நிலையில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளவரசர் அல் சவுத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார்.
இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கோமாவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு குறைவு என்பதால் வென்டிலேட்டரை அகற்ற அரச குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தனது மகனுக்கு சுயநினைவு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.
- சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் முதலீட்டு மாநாடு நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.
ரியாத்:
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார்.
இதில் அதிபர் டிரம்ப் பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. இப்போது சிரியா முன்னேறவேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என தெரிவித்தார்.
சிரியா மீதான தடைகளை நீக்க சவுதி அரேபிய இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை டிரம்ப் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் ஷராவை சந்தித்தார். 25 ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சவுதி அரேபியா சென்றடைந்தார்.
- அங்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெட்டா:
பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டார்.
பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அவரை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். அப்போது 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகரம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.
இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள்.
இந்நிலையில் இந்த வருடம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனால் இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52,000 ஹஜ் பயணிகளின் புனித கடமை கேள்விக்குறியானது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் மத்திய அரசின் வற்புறுத்தலை அடுத்து 10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.






