என் மலர்
சவுதி அரேபியா
- ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் தனது வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் இணைந்து சவுதி அரேபியா ஒரு அமைதியான முன்னெடுப்பை முன்னெடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்தால் அது தனது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று சவுதி அரேபியா கருதுகிறது.
குறிப்பாக ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டால் தங்களது நாட்டில் உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்கும் என்று சவுதி அரபியா அஞ்சுகிறது என்று கூறப்படுகிறது.
ஈரானிய ஆட்சியை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் எண்ணெய் சந்தைகளை சீர்குலைத்து , இறுதியில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே தீங்கு விளைவிக்கும் என்று சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்துள்ளது.
- இலங்கையின் மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எடுத்தது.
அபுதாபி:
19-வது இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது.
ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இலங்கையின் பதிரனா, இந்தியாவின் ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீரர்கள் விவரம் வருமாறு:
கேமரூன் கிரீன்: ரூ.25.20 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மதிஷா பதிரனா: ரூ.18 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
லியாம் லிவிங்ஸ்டன்: ரூ.13 கோடி- சன் ரைசர்ஸ் ஐதராபாத்
பிரசாந்த் விர்: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்
கார்த்திக் சர்மா: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.9.20 கோடிக்கு வாங்கியது.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தைச் லியம் லிவிங்ஸ்டன் முதல் சுற்றில் விலைபோகவில்லை. அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- அன்கேப்டு பிளேயர்கள் 2 பேரை 14.20 கோடிக்கு சி.எஸ்.கே. அணி வாங்கியது.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- பதிரனாவை 18 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ஆகிப் நபி தர்ரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- வெங்கடேஷ் அய்யரை 7 கோடிக்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏற்கனவே கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கே.கே.ஆர். வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- கேமரூன் கிரீனை 25.20 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் அய்யரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இவர் கடந்த ஆண்டு 23.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- கேமரூன் கிரீனை மும்பை அணி ஏலத்தில் கேட்டபோது அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் கேட்டது. அந்த அணியிடம் மொத்தமே 2 கோடிமட்டுமே உள்ள நிலையில், 2 கோடி அடிப்படை விலைக்கு ஏலம் கேட்டதால் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது.
- 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
- இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
அபுதாபி:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
- சவுதி அரேபியாவில் செங்கடல் திரைப்பட விழா நடைபெற்றது.
- இதில் நடிகை ஆலியா பட்டிற்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
சவுதி அரேபியா:
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வரும் 13-ம் தேதி வரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இந்த செங்கடல் திரைப்பட விழாவில் சிறப்பான நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது
அப்போது, தனது தொடக்க காலத்தில் மிகுந்த ஆர்வமாக நடித்ததாக ஆலியா பட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஓமர் ஷெரிப் விருதை துனிசிய நடிகை ஹெண்ட் சப்ரி வென்றார்.
இதுதொடர்பாக கோல்டன் குளோப் தனது எக்ஸ் வலைதளத்தில், கோல்டன் குளோப் ஓரிஸான் விருதினை ஆலியா பட்டிற்கு கிடைத்ததில் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் நடிகர் அமிர் கானுக்கு விருது வழங்கப்பட்டது.
- 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
- தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.
அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.
இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.
- ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கியது.
அபுதாபி:
சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச டி20 லீக் தொடரில் நேற்று நடந்த ஷார்ஜா வாரியர்சுக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் இந்த மைல்கல்லை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் எட்டினார்.
இந்தப் பட்டியலில் ரஷித் கான் 681 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், பிராவோ 631 விக்கெட்டுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
இதையடுத்து, சுனில் நரைனின் சாதனையை நினைவுகூரும் வகையில் 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கி சிறப்பித்தது.
ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






