என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவூதி அரேபியா"

    • 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
    • தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.

    சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.

    அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.

    இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.

    அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.

    இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.  

    • "360 டிகிரி" என்றழைக்கப்படும் ரோலர் கோஸ்டர் சுழலும்போது இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
    • சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.

    சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.

    இன்று பூங்காவில், "360 டிகிரி" என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும்போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.

    இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.    

    • இளங்கோவன் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார்.
    • இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்ப ருத்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (51,) இவர் கடந்த மாதம் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் டிசை னிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி சவூதி அரேபியா நாட்டில் உயிரிழந்தார். பக்ரீத் பண்டிகை காரண மாக, சவூதி அரேபியாவில் அரசு விடுமுறை என்பதால் இளங்கோவன்ன் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருந்தது.

    இந்த நிலையில், இளங்கோவன் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு எடுத்து வரவேண்டும் என அவரது உறவினர்கள், சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தா னிடம் கோரிக்கை வைத்த னர். இந்த கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. இதன் காரணமாக, இளங்கோவனின் உடல் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்து, பின்னர், மங்கலம் பேட்டை யில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையி னர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், ராதாகிருஷ்ணன்எம்.எல்.ஏ. ஆகியோர் மங்கலம் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர், இளங்கோ வனின் இறுதிச் சடங்கிற்காக அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக நிதி உதவி வழங்கினர். அப்போது, விருத்தாசலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உடனி ருந்தனர். நிதி உதவியை பெற்றுக் கொண்ட இளங்கோவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உயிரிழந்த இளங்கோவ னுக்கு கவுரி என்கிற மனை வியும், காயத்ரி (வயது. 21) என்கிற மகளும், ஜீவன்ராஜ் (வயது.12) என்கிற மகனும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக அவர் மாறியுள்ளார்.
    • படுத்த படுக்கையாகி இருந்த அவர், இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.

    உலகின் அதிக எடையுள்ள மனிதராக இருந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி தனது எடையை பெருமளவில் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

    610 கிலோ எடை வரை இருந்த அவர், தற்போது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக மாறியுள்ளார்.

    சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் உதவியால் ஷாரிக்கு எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உணவுக் கட்டுப்பாடு மற்றும் போதுமான உடற்பயிற்சியால் அடுத்த 6 மாதங்களில் தனது எடையில் பாதியை அவர் குறைத்தார்.

    அவரது மருத்துவக் குழு வழங்கிய தீவிர சிகிச்சை மற்றும் பிசியோதெரபி ஆகியவை அவரது எடை குறைப்பிற்கு உதவிகரமாக அமைந்தது.

    அதிக எடை காரணமாக படுத்த படுக்கையாகி இருந்த அவர், இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.

     

    • இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது.
    • இதில் 14.5 கிலோமீட்டருக்கு சுவர் இருந்தது.

    சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    வடமேற்கு சவூதி அரேபியாவில் பழமையான கோட்டை நகரத்தின் எச்சங்கள், பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குய்லூம் சார்லக்ஸ் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 14.5 கிலோமீட்டருக்கு சுவர் இருந்தது.

    அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் இடம், வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான பகுதியில் நீண்ட காலமாக மறைந்து இருந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், "இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது. இந்நகரத்தில் 500 பேர் வரை வாழ்ந்திருக்கலாம். இந்த முக்கியமான கண்டுபிடிப்பு பண்டைய மக்கள் நாடோடிகளிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு எவ்வாறு மாறியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    இது பிராந்தியத்தின் வரலாற்று நிலப்பரப்பில் அதன் முக்கியத்துவத்தை வெளிகாட்டுகிறது. அக்கால சமூக மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சிகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அரேபிய தீபகற்பத்தின் இந்த பகுதியில் நகரமயமாக்கலை நோக்கிய முக்கிய மாற்றத்தை வலியுறுத்துகிறது. குடியிருப்புகள் ஒரு நிலையான திட்டத்தைப் பின்பற்றி கட்டப்பட்டன மற்றும் சிறிய தெருக்களால் இணைக்கப்பட்டன.

    வெண்கல யுகத்தில் வடமேற்கு அரேபியாவில் பெரும்பாலும் ஆயர் நாடோடி குழுக்கள் ஆதிக்கம் செலுத்தினர். நீண்ட தூர வர்த்தகத்துக்காக ஒருங்கிணைக்கப்பட்ட சிறிய கோட்டைகளை மையமாகக் கொண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நினைவுச் சின்ன சுவர் அங்கு உள்ளன" என்று தெரிவித்தனர்.

    • ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது .
    • முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட்டுக்கே உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. 2024 ஐபிஎல் போட்டியில் கவுதம் கம்பீர் பயிற்சி அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன

    ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

    இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கை தற்போது 574 ஆக குறைக்கப்பட்டு இறுதி கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

    இறுதி கட்ட பட்டியல் விவரம், 

    கேப்டு இந்திய வீரர்கள் - 48

    கேப்டு வெளிநாட்டு வீரர்கள் - 193

    இணை நாட்டு வீரர்கள் - 3

    அன்கேப்டு இந்திய வீரர்கள் -318

    • மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் அதி கனமழை பெய்துள்ளது.
    • அதிகபட்சமாக அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    பாலைவன நாடான சவுதி அரேபியாவில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.

    புனித நகரங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் பெய்த அதி கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகிலுள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.

    மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் மிக கனமளிக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    • சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
    • குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர்.

    பணத்துக்காக தனது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்புணர்வு செய்ய கணவன் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குலாதியைச் சேர்ந்த நபரை அந்த பெண் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.

    பெண்ணின் கணவர் வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவார்.

    இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் கணவரின் இரண்டு நண்பர்கள் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் நண்பர்கள் இருவருடன் வீட்டுக்கு வந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக அவரது புகாரில் கூறியுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் தன்னை வன்கொடுமை செய்யும்போது அதை வீடியோ பதிவாக தனது கணவர் சவூதி அரேபியாவில் தனது மொபைல் போனில் பார்ப்பார் என்றும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    அவர் என்னை விவாகரத்து செய்வதாக மிரட்டியதால், எனது குழந்தைகளுக்காக நான் அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவர் சவூதியில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கொடுமை பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

    எனவே அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் புலந்த்ஷாஹர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஷ்லோக் குமாரைச் சந்தித்து தங்களின் துயரத்தை விவரித்தனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

    திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவூதி அரேபியாவில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் கோல்ட் படம் பெற்றுள்ளது. #SaudiArabia #GoldMovie #AkshayKumar
    மும்பை:

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை சமீபத்தில் விலக்கப்பட்டு, புதிய திரையரங்குகள் அமைக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், மவுனி ராய், குனால் கபூர் உள்ளிட்டோர் நடித்த கோல்ட் என்ற திரைப்படம் நேற்று சவூதி அரேபியாவில் திரையிடப்பட்டது.

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது. சவூதி அரேபியாவில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டதன் மூலம், திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின், சவூதியில் வெளியான முதல் திரைப்படம் என்ற கூடுதல் பெருமையை கோல்ட் பெற்றுள்ளது. #SaudiArabia #GoldMovie #AkshayKumar
    சவூதி அரேபியாவில் மதகுருமார்கள், உரிமை தொடர்பாக பேசுபவர்கள் மீது வன்முறையை தூண்டுவதாக பிரபல மதகுரு சபர் அல்-ஹவாலி மற்றும் அவரது 3 மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். #SaudiArabia
    ரியாத்:

    சவூதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடான சவூதியில் அந்நிய கலாச்சாரங்களை புகுத்தி வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் அவரது வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பலர் விமர்சிக்கின்றனர்.

    இந்நிலையில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊழல் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பிரபல மதகுரு சபர் அல்-ஹவாலி முன்வைத்து வந்தார். இதையடுத்து, மதகுருமார்கள் மற்றும் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மீது வன்முறையை தூண்டுவதாக சபர் அல்-ஹவாலி மற்றும் அவரது மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சபர் அல்-ஹவாலி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை எனவும், வன்முறையை தடுக்கவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் இதுதொடர்பாக லண்டனை மையமாக கொண்டுள்ள சவூதி அமைப்பான ஏ.எல்.கியூ.எஸ்.டி, சவூதி ராஜ குடும்பத்தின் மோசமான நிலை குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #SaudiArabia
    சவூதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு தடை விலக்க சட்டம் இன்னும் அமலுக்கு வராத நிலையில், கார் ஓட்டியதாக 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுபாடுகள் இருக்கிறது.

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
    இதற்கிடையே சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார்.

    பெண்கள் கார் ஓட்ட அனுமதி வருகிற ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சட்டம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதற்காக மாதர் நல ஆர்வலர்களான 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.

    கடந்த 15-ந்தேதி முதல் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களில் இமன் அல் நப்ஜன், லுரெயின் அல் ஹத்நுல், அசிசா அல்-யூசப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

    இதில் இமன்-அல்- நப்ஜன், லுரெயின் அல்-ஹத் நுல் ஆகியோர் ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டு 75 நாட்கள் சிறையில் இருந்தவர்கள்.

    இவர்கள் 7 பேரும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் 
    விளைவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஒற்றுமையை பிளவுபடுத்த முயற்சி செய்ததாகவும் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    பெண்கள் கார் ஓட்ட தடையை நீக்க கோரி போராடியவர்கள் அந்த தடை நீக்கப்படுவதற்கு முன்பே தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சமீபத்தில் பெண்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை நடத்த ஆண்களின் அனுமதியை நாட வேண்டிய சட்டத்தையும் பட்டத்து 
    இளவரசர் சல்மான் அகற்றினார் என்று குறிப்பிடத்தக்கது.
    ×