என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி உதவி"

    • பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
    • இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை சுமார் 5 மணியளவில் சென்னை, பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து மகேந்திரா வேன் மூலம் சுற்றுலா வந்த 17 நபர்களில் பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவரது 2 மகள்கள் கார்த்திகா (வயது 17) மற்றும் துளசி (வயது 16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு 30-ந்தேதி அன்று மேற்படி இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இம்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கட்-ஆப் மதிப்பெண்களுக்குமேல் மதிப்பெண் பெற்ற சில மாணவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
    • பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டு ஜூன் மாத சுழற்சிக்கான தேசிய பட்டியல் சாதியினர் பெல்லோஷிப் (உயர்கல்வியை தொடர நிதி உதவி) முடிவுகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பட்டியல் சாதி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் கவனத்தை கொண்டு வர இக்கடிதத்தை எழுதுகிறேன்.

    கடந்த மார்ச் மாதம் யு.ஜி.சி-நெட் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 865 மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்களுக்குமேல் மதிப்பெண் பெற்ற சில மாணவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பலர் திருத்தம்கோரி அணுகினர்.

    கடந்த ஆண்டும், ஜூன் 2023 சுழற்சிக்கான பட்டியலில் தகுதியான சிலர் விடுபட்டபோது, 44 மாணவர்களுடன் கூடுதல் பட்டியல் வெளியிட்டது. ஆனால் இந்த ஆண்டு தகுதி வாய்ந்த மாணவர்களின் கூடுதல் பட்டியலை வெளியிடுவதற்கு பதிலாக கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

    இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த பேரின் எண்ணிக்கை 865 இருந்து 805-ஆக குறைக்கப்பட்டது. மார்ச் மாதம் தேசிய பட்டியல் சாதியினருக்கான பெல்லோஷிப் வழங்கப்பட்ட பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 487 பேர் திடீரென்று விளக்கம் இல்லாமல் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர். இது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மார்ச் மாத முடிவுகளின் அடிப்படையில் பலர் ஏற்கனவே பி.எச்.டி படிப்புகளில் சேர்ந்தனர். தற்போது இந்த தன்னிச்சையான மாற்றத்தால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

    எனவே காலியிடங்களின் அசல் எண்ணிக்கையை 865 ஆக மீண்டும் உயர்த்த நடவடிக்கை எடுத்து கடந்த ஆண்டை போலவே 60 மாணவர்களை கொண்ட கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அக்கடித்தில் கனிமொழி எம்.பி கூறி உள்ளார்.

    • கர்நாடக அரசு பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.
    • கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது.

    பெங்களூரு:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

    இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து காலை முதலே லட்சக்கணக்கான பேர் விதானசவுதா முன்பு குவியத் தொடங்கினர். கூட்டம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மாலை 3 மணியளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து விதான சவுதா முன்பு குவிந்திருந்த லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். இதேபோல் பெங்களூரு நகரின் நாலா திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மேலும் சின்னசாமி மைதானத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 9 பேர் மருத்துவ மனையில் இறந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் மற்றும் காயம் அடைந்து கதறினர்.

    கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்த சம்பவத்தில் 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்கும். இந்த துயர சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதனை தொடர்ந்து பெங்களூரு நகர துணை ஆணையர் ஜி. ஜெகதீஷை மாஜிஸ்திரேட் விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி அறிவித்துள்ளது.


    • தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது.
    • ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் 7 லட்சம் நிதியுதவி வழங்கினார் துபே.

    நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 39 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் 4 இடங்களில் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் உள்ளன. இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

    சிஎஸ்கே இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 70 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார்.

    தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வருடாந்திரம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 10 வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள அந்த சங்கம் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கிறது.

    அதன்படி தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TNSJA) விருதுகள் மற்றும் உதவித்தொகை விழாவில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் உள்பட 7 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    இது குறித்து துபே கூறியதாவது:-

    சிஎஸ்கே அணி ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு சென்ற போது டாக்டர் பாபா அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்வது பற்றி சொன்னார். இது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த சிறிய உதவித்தொகை அவர்கள் நாட்டுக்காக பெரியளவு பாடுபடுவதற்கான உதவியைச் செய்யும்.

    என்று கூறினார். 

    • திருவிழாவில் மின் அலங்காரத்திற்கு ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கியது.
    • அரசு சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 1- ம் தேதி, தேவாலய திருவிழாவில் மின் விளக்குகள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விஜயன் வயது 52, ஜஷ்டஸ் வயது 33, சோபன் வயது 45, மைக்கேல் பின்டோ வயது 42 ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனார்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு மீனவரணி மாநில செயலாளர் ஏற்பாட்டில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    மீனவரணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண நிதியை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீனவர் நல்வாரிய உறுப்பினர் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவர் எஸ். கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளர் அனனியாஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

    • மதுரை மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி நிதி உதவி வழங்கினார்.
    • இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் வண்டியூர் பகுதி 40-வது வார்டு பாரதி புரத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி அனிதா. இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். அவர் டெல்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    இது பற்றி அறிந்த அமைச்சர் பி.மூர்த்தி மாணவி அனிதாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் துரைப்பாண்டியன், கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீக்குளித்து உயிரிழந்த சுங்க சாவடி ஊழியர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
    • விசிக சார்பில் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் குன்னம் அடுத்துள்ள சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது44) இவர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுங்க சாவடி அதிகாரியிடம் தனக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டார். ஆனால் விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். கோபால் ஒருநாள் மட்டும் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து சுங்க சாவடி அதிகாரிகள் கோபாலை ஐந்து நாட்கள் பணி நீக்கம் செய்தனர். இதில் மன உளைச்சலால் கோபால் இரு தினங்களுக்கு முன்பு தனக்குத்தானே உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், உயிரிழந்த கோபால் மனைவி முனியம்மாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிதியுதவி அளிக்க கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மண்டல செயலாளர் கிட்டு, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் விஜயகுமார், கிளை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முனியம்மாள் வீட்டிற்கு சென்று நிதி உதவி அளித்தனர்.

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிதி உதவி அளிப்பதாக தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கண்காணிப்பு குழு கூ ட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 21,739 நபர்கள் புதிதாக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். 15,629 பேரின் பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வூதியம் 455 நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 27,253 நபர்களுக்கும், இயற்கை மரண நிதி உதவி 579 நபர்களுக்கும் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் சேர்த்து மொத்தம் 31,890 நபர்களுக்கு ரூ.16 கோடியே 40 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக உள்ள சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளயர்களுக்கு தாமாக சொந்தமாக வீடு கட்ட அல்லது அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

    6 கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்க சென்னை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தால் இறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் முதன்மையாக நடைபெறும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள இ.எஸ்.ஐ. மற்றும் சேமநலநிதி பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு தமிழக அரசால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை உத்தரவின் பேரில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதிவரை 9,151 பேருக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 390 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்தார்.

    • கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கடந்த நிதியாண்டில் இருந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்கும் நோக்க த்தில் ஒரு பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, இளநிலை தோட்டக்கலை அல்லது இளநிலை வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்று பவராக இருக்க கூடாது.

    கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெற முடியும்.

    முன் வைக்கும் திட்டத்தின் உரிமையானது ஒற்றை உரிமையாள ருடையதாக இருக்க வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்க ளுக்கான செலவு முன் வைக்கும் திட்ட மதிப்பில் சேர்க்க இயலாது. 21 வயது முதல் 40 வயதுடைய வர்களாக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் அக்ரி கிளினிக், இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்ப டுத்துதல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

    தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கை யினை இம்மாதத்தி ற்குள் திண்டல் வித்யா நகரில் உள்ள ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பள்ளி வளாகத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
    • அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவியை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார்.

    பல்லடம் : 

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி கிழக்கு செயல்படுகிறது. இங்கு மாணவர்கள் 149 பேர் மாணவிகள் 135 பேர் உள்பட 284 பேர் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.

    இதற்கிடையே அகற்றப்பட்ட கட்டடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பெற்றோர்கள் மற்றும் பச்சாபாளையம் பொதுமக்கள், நகர்மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் பொதுமக்களின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் பள்ளி வகுப்பறைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை ஏற்று அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவியை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவக்குமார், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமாரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் பாமிதா கயாஸ், ராஜசேகரன்,பாலகிருஷ்ணன், மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெகதீசன்,கவுஸ்பாஷா, பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம், உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • இந்த தம்பதியினர் தங்கியிருந்த வீடு கடந்த மாண்டஸ் புயலால் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
    • தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    மொரப்பூர்,

    மாரண்டஅள்ளி அருகே சி.எம் புதூரைச் சேர்ந்தவர் முத்தன்- திராவிட தாய் தம்பதியினர். சுமார் 50 ஆண்டுகளாக தி.மு.க. வின் கிளைச் செயலாளராக இருந்து வரும் இந்த தம்பதியினர் தங்கியிருந்த வீடு கடந்த மாண்டஸ் புயலால் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

    இந்த நிலையில் தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த செய்தியை அறிந்த தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பாதிக்கப்பட்ட முதியவரின் வீட்டிற்கு சென்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து தற்காலிகமாக வீட்டை சரி செய்து கொள்வதற்காக ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஆமணி, ராஜகுமாரி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால், முனியப்பன்,கிருஷ்ணன், பேரூர் கழகச் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான முரளி, வெங்கடேசன்,மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜா, கலை இலக்கிய அணி ராஜபார்ட் ரங்கதுரை, ஒன்றிய அவைத்தலைவர் ராஜாமணி விவசாய அணி குமார்,கவுன்சிலர்கள் ராஜா, கார்த்திகேயன், புதூர் பழனி, ஜோதிவேல், விஜய், சக்தி ஊராட்சி மன்றத் தலைவர்கள் சென்னகேசவன், குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • “நம்ம ஸ்கூல்” திட்டத்திற்கு செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
    • பள்ளி யின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாபெரும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாமிற்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், பள்ளியின் தலைவர் செல்லப்பன் கலந்து கொண்டனர்.

    அப்போது பள்ளியின் தாளாளர் சத்தியன் "நம்ம ஸ்கூல்" திட்டத்திற்காக ரூ. 2 லட்சம் நன்கொடையையும், நினைவு பரிசையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம் வழங்கினார். பள்ளி யின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    ×