search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial aid"

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • ரஷிய உக்ரைன் போர் 590 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவி அந்நாட்டை தூக்கி நிறுத்துகிறது என்றார் புதின்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமாக சேதங்களும் உயிரிழப்புகளும் நடைபெற்றும் போர் 590 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்காவிற்கு உள்ள கடன் ரூ. 2,74,63,90,35,00,00,000 (33 டிரில்லியன் அமெரிக்க டாலர்) எனும் அளவை தொட்டு விட்டதால், அந்நாட்டில் செலவினங்களை குறைக்க கோரி பெரும் விவாதங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இந்த விவாதங்களில் ரஷிய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவி தடைபடும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரிவித்தார்.

    இப்பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஒரு சந்திப்பில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. உதவி நின்றால், ஒரு வாரத்தில் அனைத்தும் நின்று விடும். நிதியுதவி மட்டுமல்ல; ராணுவ தளவாட உதவிகளும் நிற்க தொடங்கினால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும். தற்போது வரை ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், உக்ரைன் 90 ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, "அமெரிக்காவை போன்று நிதியுதவியோ ராணுவ உதவியோ உக்ரைனுக்கு நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியாது," என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.

    புதின் கூறியவாறு அமெரிக்க உதவி தடைபட்டு, போர் ரஷியாவிற்கு சாதகமாக சென்றால் அதனால் எற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    • திடீர் மரணமடைந்த ராஜபாளையம் போலீசார் குடும்பத்துக்கு நிதி உதவியை டி.எஸ்.பி. பிரீத்தி வழங்கினார்.
    • 1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை மரணமடைந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிவையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நாகராஜ் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தை சேர்ந்த இவ ரது மனைவி ஆண்டாள் (வயது49), ஜெயப்பிரகாஷ் (22), அபிநேஸ் (14) என்ற 2 மகன்களும் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 1993 பேஜ் காவல்துறையினர் சார்பில் அனைவரும் சேர்ந்து ரூ.7லட்சத்து 4 ஆயிரத்து 500 பணத்தை திரட்டினர். இதில் அவரது தாயாருக்கு ரூ.1 லட்சமும், மீதி தொகையை அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் ராஜபாளையம் டி.எஸ்.பி பிரீத்தி வழங்கி ஆறுதல் கூறினார். இதில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜ், மனோகரன், வடக்கு காவல் நிலையம் முத்து கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மணி கண்டன் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் கடந்த 14-ந் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.உடன் ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

    • 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.
    • தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

    பல்லாவரம்:

    ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட செல்லும் மாணவர்களுக்கு, பல்லாவரம் எம். எல். ஏ. இ.கருணாநிதி ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    கொரோனா காலத்தில், முடங்கிக் கிடந்த அரசு பள்ளி மாணவர்களை, செறிவூட்டும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாகவும், 'ராக்கெட் சைன்ஸ்' என்ற தலைப்பில் ஆன்-லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு, ஜனவரி 26-ந்தேதி நடத்தப்பட்டது.

    விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தலைமையில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், ஆன்-லைன் வகுப்பும் தொடர்ந்து கேள்வி நேரமும் நடத்தப்பட்டது.

    இதில் நிறைவாக 50 பேர் தமிழக அரசின் ஆதரவுடன் வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி ரஷ்ய நாட்டில் உள்ள யூரிக்காரின்' விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட செல்கிறார்கள்.

    இவர்களில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஜமீன் பல்லாவரம் மேல் நிலை பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்ரோஹித், பிளஸ்-1 மாணவர் முகமதுசதிக், 10-ம் வகுப்பு மாணவர்கள், லத்தாஷா ராஜ் குமார், இலக்கியா, லித்திகா, ரக்க்ஷித் ஆகிய 6 மாணவர்களும் அடங்குவர்.

    ரஷ்யாவுக்கு செல்ல ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2 லட்சம் செலவாகிறது. இதில் 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. ஒரு மாணவருக்கு தனியார் நிறுவனமும், ஒரு மாணவருக்கு தமிழ் ஆர்வலர்களும் நன்கொடை வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில் 2 மாணவர்களுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில் பல்லாவரம் 2-வது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அறிவியல் பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, மாமன்ற உறுப்பினர் கலைச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது.
    • மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ஏட்டு ரமேஷ். உடல்நலக்குறைவு காரணமாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

    அவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பே உயரிழந்து விட்ட நிலையில் அவர்களது மகன் திவ்யேஷ், ரமேசின் சகோதரி கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரும்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.

    உயிரிழந்த ஏட்டு ரமேசுடன் 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினர். "உதவும் உறவுகள் 99" என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ரூ.14 லட்சம் வரையில் (ரூ.13 லட்சத்து 93 ஆயிரம்) நிதி திரட்டினர். இந்த மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த பணத்தை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 லட்சத்து 32,300-க்கான காசோலை திவ்யேசிடம் வழங்கப்பட்டது.

    ஏட்டு ரமேசின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கமிஷனர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களின் இந்த உதவும் குணத்தை அனைவரும் பாராட்டினார்கள். 2,727 காவலர்கள் சேர்ந்து இந்த பணத்தை திரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மனுவின் தன்மையை கூறி அரசின் நலத்திட்டங்கள் அந்த பெண்ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தார்
    • கலெக்டர் தன் வைப்பு நிதியில் ரூ.75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேரடியாக வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மனைவி சந்தியா (வயது 43). இவர்களுக்கு அனுப்பிரியா (13), அன்பு (12) எனற 2 பிள்ளைகள் உள்ளன. மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் இருதயராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் 2 பிள்ளைகளோடு இனி எப்படி வாழ்வேன். போதிய வருமானமும் கிடையாது. என்ன செய்ய போகிறேன் என சந்தியா தவித்தார். மேலும் வசிக்க வீடு கூட இல்லாமல் நடுவீதிக்கு வந்த சந்தியா ஆரமரத்தடியில் வசித்து வந்தார்.

    வாழ்க்கையின் விரக்திக்கே சென்ற சந்தியா, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரின் மனிதநேயமிக்க செயல், உதவும் குணம், அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுப்பது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நிலையை அறிந்து அரசு சார்பில் வீடு கட்டி கொடுப்பது போன்ற பல்வேறு நல்ல செயல்களை செய்து வருவது நினைவுக்கு வந்தது.

    இதனால் கலெக்டரிடம் நமது நிலையை எடுத்து கூறி முறையிட்டால் வாழ்வில் ஒளி பிறக்கும் என உறுதியாக நம்பிய சந்தியா, வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு இரு பிள்ளைகளுடன் சென்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் நிலைைமையை எடுத்து கூறி மனு அளித்தார்.

    இந்த மனுவை படித்து பார்த்த கலெக்டர், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை அழைத்து மனுவின் தன்மையை கூறி அரசின் நலத்திட்டங்கள் அந்த பெண்ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தார்.

    பின்னர் உடனே சந்தியாவிற்கு கும்ப கோணம் அசூர் அருகே வீடு கட்ட வீட்டு மனை பட்டாவும், ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு கட்டித்தர நிதியையும் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஒதுக்கீடு செய்தார்.

    மேலும் அவரது குடும்ப சூழ்நிலையை கருத் தில் கொண்டு மாவட்ட கலெக்டர் தன் வைப்பு நிதியில் ரூ.75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேரடியாக வழங்கினார். பின்பு தனது சொந்த பணத்தில் தொழில் செய்வதற்காக ரூ.10,000 தனியாக வழங்குவதாகவும் கூறினார்.

    கலெக்டரின் மனிதநேயமிக்க உதவும் செயலை பார்த்து சந்தியா ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி கூறினார். கருணை உள்ளத்தோடு உதவிய கலெக்டருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது என உணர்ச்சி பெருக்கில் சந்தியா கூறினார்.

    • கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • நிதி உதவி தேவாலயத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள்: 20.12.2016-ன்படி கீழ்க்கண்ட தகுதிகளின்படி கிறித்துவ தேவாலயம் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள கட்டி டத்தின் வயதிற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

    10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சம், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சம் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற் கொள்ளவும், கட்டி டத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் வருமாறு:-

    தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities), குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities).

    தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப் பட்டுள்ள மானிய தொகை விவரம் வருமாறு:-

    10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.300 லட்சத்தில் இருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங் களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரி சீலித்து, கிறித்துவ தேவா லயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி இரு தவணை களாக தேவாலயத்தின் வஙகிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • “நம்ம ஸ்கூல்” திட்டத்திற்கு செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
    • பள்ளி யின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாபெரும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாமிற்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், பள்ளியின் தலைவர் செல்லப்பன் கலந்து கொண்டனர்.

    அப்போது பள்ளியின் தாளாளர் சத்தியன் "நம்ம ஸ்கூல்" திட்டத்திற்காக ரூ. 2 லட்சம் நன்கொடையையும், நினைவு பரிசையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம் வழங்கினார். பள்ளி யின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    • மதுரை மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி நிதி உதவி வழங்கினார்.
    • இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் வண்டியூர் பகுதி 40-வது வார்டு பாரதி புரத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி அனிதா. இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். அவர் டெல்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    இது பற்றி அறிந்த அமைச்சர் பி.மூர்த்தி மாணவி அனிதாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் துரைப்பாண்டியன், கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி அமைச்சர்கள், எம்.எல்.ஏ. ஆகியோர்களால் நேரில் சென்று வழங்கப்பட்டது.
    • உயிரிழந்த விமலின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்று வந்தார். இவரது ஊரில் 'முரட்டுக்காளை' என்ற பெயரில் கபடி அணி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அணியினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் கபடி போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதன்படி கடந்த 24-ம் தேதி இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முரட்டுக்காளை அணியும் கலந்து கொண்டது. அப்போது நடைபெற்ற விளையாட்டில் கலந்து கொண்ட விமல் எதிரணியை நோக்கி ரெய்டு சென்றார். அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் வேகமாக ஓடி வந்து விமல் மீது விழுந்தார். இந்த நிலையில் விமல் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே சரிந்து விழுந்து இறந்து போனார். விமலின் மறைவால் அந்த போட்டிக்கு வந்திருந்த விளையாட்டு வீரர்கள், போட்டி நடத்தியவர்கள், விமலின் சொந்த ஊர்க்காரர்கள் உட்பட அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். உயிரிழந்த விமலின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், விமலின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கபடி போட்டி யில் உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்தினரை அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூபாய் 3 லட்சம் நிதியினையும், அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியாக ரூ.2 லட்சத்தையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் சிவா. கார்த்திகேயன், யூனியன் சேர்மன் சபா.பாலமுருகன், துணைத்தலைவர் தேவகி ஆண்டவரசு, தி.மு.க. வை தலைவர் ராஜா முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அறிவழகன் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
    • பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் இந்த நிதிவழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக உள்ளது.

    இந்நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை தற்போது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் இந்தத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் பல முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என பதிவிட்டுள்ளார்.

    ×