search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

    • கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • நிதி உதவி தேவாலயத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள்: 20.12.2016-ன்படி கீழ்க்கண்ட தகுதிகளின்படி கிறித்துவ தேவாலயம் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள கட்டி டத்தின் வயதிற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

    10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சம், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சம் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற் கொள்ளவும், கட்டி டத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் வருமாறு:-

    தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities), குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities).

    தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப் பட்டுள்ள மானிய தொகை விவரம் வருமாறு:-

    10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.300 லட்சத்தில் இருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங் களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரி சீலித்து, கிறித்துவ தேவா லயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி இரு தவணை களாக தேவாலயத்தின் வஙகிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×