என் மலர்
செங்கல்பட்டு
- தேவி கருமாரியம்மன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
- கார்த்திக் மற்றும் அவர் கொடுத்த தகவலின்படி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த மகேந்திராசிட்டியில் உள்ள தேவி கருமாரியம்மன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக கார்த்திக் மற்றும் அவர் கொடுத்த தகவலின்படி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை தொடர்பாக ஜெயச்சந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பூங்காவின் நடைபெறும் “வனவிலங்கு வார” கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன.
- ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை ரசித்து செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கின் போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. கொரோனோ தொற்று பரவல் முடிந்து வழக்கமாக பூங்கா திறக்கப்பட்டதும் வாகனத்தில் சிங்கங்களை பார்வையிடம் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 3 ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 2-ந்தேதி வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. அன்று பூங்காவின் நடைபெறும் "வனவிலங்கு வார" கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன. சுற்றுலா பயணிகள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்து திறந்த வெளியில் சுற்றும் சிங்கங்களை பார்க்கலாம். ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி வருகிற 2-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 3 ஏ.சி. பஸ்கள் உள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த வாகன த்தில் செல்ல ஒருவருக்கு ரூ.150 கட்டணமாக இருக்கும். இதன் மூலம் பூங்காவில் வருவாய் மேலும் அதிகரிக்கும். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தற்போது பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
- இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை ஏற்றார்.
- பெண் விஞ்ஞானி ராஜலட்சுமி மேனன் துவக்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
"இஷ்ரே" என்கின்ற இந்திய வெப்பப்படுத்துதல், குளிர்வித்தல் பொறியாளர்கள் கூட்டமைப்பின் கல்பாக்கம் பிரிவு, இந்திய பெண் விஞ்ஞானிகள் சங்கம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து கல்பாக்கத்தில் சக்தி-2023 என்ற கருத்தரங்கை நடத்தியது.
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். பெண் விஞ்ஞானி ராஜலட்சுமி மேனன் துவக்கி வைத்தார். "இஷ்ரே" அமைப்பின் தேசிய தலைவர் யோகேஷ் தக்கர், சுற்றுச்சூழல் சுகாதார பொறியியல் துறை தலைவர் கல்பனா மற்றும் 300 பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி, பாதுகாப்பு ஆராய்ச்சி, வனப்பகுதியின் வான்வழி பாதுகாப்பு, 2070ம் ஆண்டிற்குள் கார்பனை முற்றிலும் குறைப்பது, காற்றின் மாசுபாட்டை கண்காணித்து அதை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள், திட்டங்கள் குறித்து கருத்தரங்கில் பெண் விஞ்ஞானிகள் பேசினார்கள்.
- அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.
- வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கீழ் பெருமாள்சேரி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசைமுழுவதும் பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
திருப்போரூர்:
அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க.கூட்டணியை முறித்து உள்ளது. இந்நிலையில் திருப்போரூர் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர், ஓ.எம்.ஆர். சாலையில் பஸ்நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதில் பூட்டு போடவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் திருப்போரூர் பஸ்நிலையத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.சிலையின் மீது காவித் துண்டை அணிவித்து சென்றுவிட்டனர். இன்று காலை பஸ்நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)மங்கள பிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எம்.ஜி.ஆர்.சிலை இருந்த இரும்பு கூண்டுக்கு புதிய பூட்டும் போடப்பட்டது.
இதுதொடர்பாக திருப்போரூர் போலீஸ்நிலை யத்தில் அ.தி.மு.க.வினர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திருப்போரூர் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- சுவேதா கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கத்தை சேர்ந்தவர் சுவேதா(20). பட்டதாரியான இவர், கேளம்பாக்கம் அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
- மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடபட்டது. விழாவில் பரதநாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை என பாரம்பரிய நடனங்கள் நடத்தப்பட்டது. விழாவில் செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சிற்பக்கல்லூரி முதல்வர் ராமன், சுர்தீப் ரங்கசாமி, வழிகாட்டிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக திருக்கழுகுன்றம், கடம்பாடி, தண்டரை, மானாமதி சுற்றுவட்டார பகுதி இருளர் பழங்குடி பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து உற்பத்தி செய்யும் கை எம்ராய்டரி துணிகளை, அர்ச்சுனன்தபசு அருகே ஸ்டால் அமைத்து காட்சி படுத்தி இருந்தனர். மயில், பழங்குடி வேட்டை, மாம்பழம், மயில், கோலம் உள்ளிட்ட டிசைன்கள் அங்கு வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
- சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
- ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 1000 லிட்டர் கள்ளத்தனமாக விற்க செல்லும் பொழுது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையான போலீசார் விடியற்காலை மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி சோதனை செய்த போது மிகப் பெரிய 11 பேரல்களில் 1000 லிட்டர் டீசல் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் என்பவரிடம் விசாரிக்கும் பொழுது தனது வாகனங்களுக்கு டீசல் வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.இந்த டீசல் வாங்கியதற்கான ரசீது கேட்ட பொழுது அவர் இல்லை எனவும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்கவே போலீசார் தீவிர விசாரணை செய்ததில் தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசரை கள்ளத்தனமாக குறைந்த விலைக்கு வாங்கி வந்தவாசி பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது பிடிபட்டார் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மினி லாரியையும் 11 பேரல் டீசலையும் கைப்பற்றி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் (வயது 44) பிடித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
- தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.