என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து மாற்றம்"

    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
    • விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    * திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை

    * சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.

    * விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

    • இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
    • வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சென்னை:

    சென்னை பள்ளிக்கரணையில், வேளச்சேரி மெயின்ரோடு மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பில், காமாட்சி மருத்துவமனை அருகே சில மாதங்களுக்கு முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து சில நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் மூலம் அந்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் சமீப காலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

    சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை - விநாயகபுரம் மெயின்ரோடு ஆகிய 2 சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி போக்குவரத்து போலீசார் சில மாற்றங்களை செய்தனர்.

    மேலும் ரேடியல் சாலையில் 'யு' வளைவில் திரும்புவதற்கும் ஏற்பாடுகளை செய்தனர். இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல முடிகிறது. இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் சிக்னல் சந்திப்புகளில் வாகன நெரிசலை குறைத்திருந்தாலும், சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் தவறான திசையில் வாகனம் ஓட்டி செல்வது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள் வாகன நெரிசலை குறைத்துள்ளன. ஆனால் அருகில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வது அதிகரித்துள்ளது. நீண்ட தூரம் செல்வதை தவிர்க்க அவர்கள் யு வளைவின் வழியாக தவறான திசையில் வாகனங்களில் செல்கிறார்கள்.

    வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
    • மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    மதுரை:

    மதுரையில் இன்று இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பாண்டிகோவில் சுற்றுச் சாலை, கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வழக்கமான பாதையில் செல்ல வேண்டும்.

    ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் விரகனூர் சந்திப்பில் இருந்து தென் கரை சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் திருமங்கலம், கப்பலூர், சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக செல்ல வேண்டும். மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை பொது மக்களின் கார், இருசக்கர வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    • கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அறிவிப்பு.
    • விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி அக்கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டம், புரசைவாக்கம் கட்டம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுலார் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாயின் ஒரு பகுதியாக வருகிற 00.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது என்பதால், இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.

    இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டைத்தை ஒட்டி நாளை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • இன்று நடைபெற உள்ள பேரணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற உள்ள பேரணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து மாற்றங்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

    * அண்ணா சிலையிலிருந்து வரும் மாநகரப் பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு - ஜிபி சாலை - டவர் கிளாக் - ஜிஆர்எச் பாயிண்ட் -ராயப்பேட்டை நெடுஞ்சாலை - லாயிட்ஸ் சாலை - ஜம்புலிங்கம் தெரு - ஆர்.கே.சாலை - வி.எம்.தெரு, மந்தைவெளி - மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷை அடையலாம்.

    * கிரீன்வேஸ் பாயின்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை, டிடிகே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். மேலும், வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    • வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் நோக்கி வாகனங்கள் செல்ல முழுவதும் தடுக்க வேண்டியுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அக்கரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.சாலை வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம், கோவளம் வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும். கோவளத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து சோழிங்கநல்லூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அக்கரை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருவான்மியூர் செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் தாம்பரம் மாநகர போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக,

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாரு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யு, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.

    அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    வருகிற 5-ம் தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 9-ம் தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 10-ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

    வருகிற 5 மற்றும் ஏப்ரல் 9,10-ம் தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

    கிழக்கு அபிராமபுரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 30 கார்)

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 கார்)

    செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 80 கார்)

    காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 கார்)

    வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
    • வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருத்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    TATA IPL Season 2025 கிரிக்கெட் போட்டிகள் 23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 Globes MA சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், பின்வருமாறு வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    நிறுத்தத்திற்கான எற்பாடுகன்:-

    1. பொதுமக்கள் MRTS, உயில் அல்லது மெட்ரோ ரயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    2. வாகன நிறுத்தத்திற்கான அனுமதி வைத்திருப்பவர்கள் வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகணங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்(இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதாணம் 200 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    3. அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள்:-

    * போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் R.K சாலை வழியாக காமராஜர் சாலை சென்று மெரினா கடற்கரை அடைந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம். (இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 500 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    ஆ. போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிஷபோன்ற வணிக வாகனத்தில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருந்து வாலஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

    4. வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருத்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் சுாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல/இறக்கிவிடுவதற்கு அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். (பேருந்து நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 300 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அழகர்கோவில் சாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பறக்கும் மேம்பால பணிகள் நிறைவுபெற்றது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை நகரில் நத்தம் சாலை மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக போக்குவரத்தில் சில மாறுதல்கள் செய் யப்பட்டன.

    இந்த நிலையில் மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த சாலைக ளில் நாளை (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    இதன்படி பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் இருந்து யூத் ஹாஸ்டல் (ரேஸ்கோர்ஸ் சாலை) நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர்கோ வில் சாலையில் பயணித்து, அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட் வழியாக தல்லாகுளம் செல்ல வேண்டும்.

    புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து அழகர்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்து, அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்ல வேண்டும்.

    நத்தம் சாலை, ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்லவேண்டும். நத்தம் சாலை ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட வழியாக செல்லவேண்டும்.

    மதுரை மாநகராட்சி அலுவலக சாலை-அவுட் போஸ்ட் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கே.கே.ந கர் ஆர்ச்சில் இருந்து, அழகர்கோவில் சாலைக்கு கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, அவுட்போஸ்ட் வழியாக வலதுபுறம் திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக தற்போது சென்று வரும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கக்கன் சிலையில் இருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் (ரேஸ் கோர்ஸ் சாலை) பாண்டியன் ஓட்டல் வழியாக அழகர் கோவில் சாலைக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் கவிஞர் பாரதிதாசன் சாலையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளன.

    டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாசாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை (அல்லது) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லாம்.

    லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து மாற்றம் ஒருவார காலம் அமலில் இருக்கும்.

    சென்னை :

    மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி (நாளை) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து ம.பொ.சி.-க்கு செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் தணிகாசலம் சாலை, வெங்கட்நாராயணா சாலை வழியாக உஸ்மான் சாலையை (பனகல் பார்க்) அடையலாம்.

    உஸ்மான் சாலையில் இருந்து பாஷ்யம் சாலை வழியாக போத்தீசுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    பர்கிட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் தணிகாசலம் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு சிவஞானம் சாலை, தியாகராயசாலை வழியாக திருப்பி பர்கிட் சிக்னலில் இருந்து வாகனங்கள் வெங்கட்நாராயணா சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் இந்தி பிரசார சபா தெரு, சவுத் போக் சாலை, ம.பொ.சி. சந்திப்பு வந்து அண்ணாசாலையை அடையலாம்.

    தியாகராயநகர் மேட்லியில் இருந்து பர்கிட் சாலை வழியாக அண்ணாசாலைக்கு வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.

    நந்தனம் சந்திப்பில் இருந்து வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பனகல் பூங்கா வரை வழக்கம் போல செல்லலாம்.

    மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஒருவார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

    மேலும் இன்று (12-ந்தேதி) முதல் அடுத்த மூன்று வருடத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    அதன்படி டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை அல்லது சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி. ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லலாம்.

    லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×