search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "East coast road"

    • வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

    அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.

    • அச்சத்துடன் சாலையை கடக்கும் மக்கள்
    • போலீசார் தடுப்புகளை வைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.

    இங்கு போக்குவரத்தை நெறிமுறைப்படுத்த அமைக்கப் பட்டுள்ள சிக்னல் தூண் 2017-ம் ஆண்டு முதல் செயல்படுவதில்லை.

    மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த இந்த போக்குவரத்து சிக்னல் தூண்  வீசிய பலத்த காற்று மற்றும் மழையில் சாய்ந்தது. இது பொதுமக்கள் மீது விழுந்து விடாமல் இருப்பதற்கு  போலீசார் தடுப்புகளை வைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    எந்த நேரத்திலும் இது விழுந்து விடும் என்று அச்சத்தில் அப்பகுதியை மக்கள் கடக்கின்றனர்.

    • மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.
    • தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரம்:

    தாம்பரம் அருகே உள்ள நடுவீரபட்டு பகுதியை சேர்ந்தவர் நரேஷ்பாபு. ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

    இதையடுத்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லீலாவதி அரங்கத்தில் ஆடம்பரமாக திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    நரேஷ் மற்றும் அவரது அண்ணனுக்கும் அவர்களிடம் கூட்டாளியாக இருந்து தற்போது எதிரியாக உள்ள எதிர்தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.

    இதில் எதிர்தரப்பை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக திருமண நாள் அன்று நரேஷ்பாபுவை கொலை செய்ய எதிர்தரப்பினர் அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் திருமண வரவேற்பின் போது ரவுடிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மோதலை தடுக்கும் வகையில் நரேஷ்பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மண்டபத்திலும், அங்குள்ள அறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.

    இதேபோல் தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுப்புகள் அமைத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

    இரவு 7 மணி அளவில் மணமக்கள் சொகுசு ஜாகுவார் காரில் பாதுகாப்புடன் வந்து இறங்கினர். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலால் அவசர அவசரமாக வரவேற்பு, ஆடம்பர விருந்துகள் இரவு 10மணிக்குள் முடிக்கப்பட்டது.

    திருமண வரவேற்பில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதலில் போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    பனையூர் பகுதியில் வசித்து வந்தவர் நெல்சன் (வயது27). இவர் டெல்லி சிறப்பு காவல் படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.

    விடுமுறையையொட்டி நெல்சன் பனையூரில் உள்ள வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டெம்போ வேன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நெல்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர் நெய்வேலியை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் நெய்வேலியை சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் அவரை கடத்தி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். கொலையுண்ட அருண்பிகாஷ், என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் சென்னை ஒரகடத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அந்த கட்டுமான நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனை பார்த்த அவர் இங்கு அடிக்கடி வந்து சென்றார்.

    இதுபோல் அருண் பிரகாஷ் வந்து சென்ற போது தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

    இது கொடர்பாக அருண்பிரகாசிடம் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? கடைசியாக அவரிடம் பேசியவர் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. #tamilnews
    வளைவுகளில் விபத்தை தடுக்க கிழக்குகடற்கரை சாலையில் 1000-க்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை கொண்டு சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. #accident #Roadblocking

    மாமல்லபுரம்:

    சென்னை-பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து மத்திய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். இதில் தமிழ் நாட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் பகுதியாகவும், அதிக நெடுவளைவுகள் கொண்ட ஆபத்தான பகுதியாகவும் கல்பாக்கம் அடுத்த கடம்பாக்கம், இடைக் கழிகாடு, பனையூர்குப்பம், மரக்காணம் ஆகிய பகுதிகள் இருப்பதை கண்டறிந்ததனர்.

    மேலும் இரவு நேர நெடுந்தூர வாகன ஓட்டிகளிடம் கருத்துக்கள் கேட்டபோது, “இரவு நேரத்தில் வேகமாக வரும்போது திடீர் என்று நெடுவளைவை பார்த்ததும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறது” என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கடம்பாக்கம்-மரக்காணம் இடையே பனையூர் குப்பம் அருகே உள்ள 300 மீட்டர் நெடுவளைவு ஒன்றில் சீனா நாட்டில் சாலை விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் நைலான் சேப்டி ரோலர் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி நவீன வளைவு அமைக்கப்பட்டுள்ளது.


    இதில் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடன் 1000-க்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை கொண்டு சாலை தடுப்பு அமைத்துள்ளனர்.

    இந்த தடுப்புகள் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வரும் வாகனங்கள் மோதினால் விபத்து மற்றும் சேதமின்றி பாதுகாப்பாக திருப்பி விடுகிறது.

    தற்போது கிழக்கு கடற் கரை சாலையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் இந்த தொழில் நுட்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ரோலர்களை பயன் படுத்தினால் சாலைகளும் அழகாக இருக்கும் விபத்துக்களும் குறையும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#accident #Roadblocking

    கிழக்கு கடற்கரை சாலையில் டைலர் கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை கம்பளிசாமிமடம் தெருவை சேர்ந்தவர் சுஜாதா (வயது44). கணவரை விட்டு பிரிந்த இவர் கிழக்கு கடற்கரைசாலை லதா ஸ்டீல் அவுஸ் அருகே லட்சுமி நகரில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுனில்குமார். கல்லூரியில் படித்து வரும் இவர் கல்லூரி முடிந்த பின்னர் தாய்க்கு உதவியாக டைலர் கடைடயை கவனித்து வந்தார்.

    சம்பவத்தன்று 2 வாலிபர்கள் டைலர் கடை முன்பு நின்று கொண்டு சுஜாதாவை முறைத்து பார்த்தனர். இதனை சுனில்குமார் கண்டித்து தட்டிக்கேட்டார். பிறகு அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் சுஜாதாவும், அவரது மகன் சுணில்குமாரும் டைலர் கடையை மூடுவதற்காக பொருட்களை எடுத்து அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை சுனில்குமார் மீது வீசினர். ஆனால் சுனில்குமார் சுதாரித்து கொண்டு ஒதுங்கி கொண்டதால் அந்த பீர் பாட்டில்கள் டைலர் கடையில் இருந்த ஷோகேஸ் கண்ணாடியில் பட்டு நொறுங்கியது.

    பின்னர் அந்த வாலிபர்கள் சுஜாதாவுக்கும், அவரது மகன் சுனில்குமாருக்கும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து சுஜாதா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டைலர் கடையை சூறையாடி கொலைமிரட்டல் விடுத்தவர்கள் லாஸ்பேட்டை சின்னையன்பேட் பகுதியை சேர்ந்த பாரதி மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள். #tamilnews
    ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் டோல்கேட் பகுதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னைபாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை இணைப்பு பகுதிகளான கோவளம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் டோல்கேட் அமைத்து வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் 54 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு கழிப்பிடம், ஓய்விடம், சுத்திகரிப்பு குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்காமல் அந்த நிறுவனம் 12 மணி நேரம் வேலை வாங்குவதுடன் குறைந்த சம்பளமும் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.

    இந்த நிலையில் ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி நேற்று பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் டோல்கேட் பகுதி ஊழியர்கள் கட்டண ரசீது போட மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் உத்தண்டியில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.#tamilnews
    ×