search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kapaleeswarar Temple"

    • தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
    • ஞான சம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபம் உள்ளன.

    இந்த தஜாரோகண மண்டபத்தில்தான் அருள்தரும் கற்பகாம்பிகை நவராத்திரி கொலுவிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலாவுக்கு புறப்படுவதற்கு முன் இங்கு வைத்து தான் அலங்காரம் செய்கிறார்கள். மண்டபத்தை யொட்டி திருமுறை பாராயண அறையும் உள்ளன. இதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

     வேத மண்டபம்

    12 கால் மண்டபத்தின் அருகே 4 கால் தூணுடன் விளங்கும் வேத மண்டபத்தில்தான் விழாகாலங்களில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்டுவர்.

    அருணகிரிநாதர்

    இங்கு அருணகிரிநாதருக்கென்று தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அவரை ஆட்கொண்ட முருகனின் சன்னதிக்கு எதிரிலேயே கூப்பிய கரங்களுடன் இவரது சன்னிதியும் அமைந்துள்ளது சிறப்பு.

    தங்கத்தேர் விசேஷ நாட்களில் உட்பிரகாரத்தில் உலா வரும் காட்சியைக் காண பேறு பெற்றிருக்க வேண்டும். விருப்பப்படும் பக்தர்கள் விசேஷ கட்டணம் செலுத்தி இறைவனை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரத்தில் வலம்வரச் செய்து நல்லாசி பெறுகின்றனர்.

    திருக்குளம், நீராழி மண்டபம்

    மேற்கு பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள மேலைக் கோபுரத்தின் வழியே வெளியில் சென்றால், கடல் போல் பரந்துள்ள திருக்குளம், கபாலீ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நடுவே அழகான நீராழி மண்டபம் உள்ளது. சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் இக்குளத்தின் மேற்கு கரையில் எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அதன் அருகில் ஜ்யேஷ்டா தேவியின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

    குளத்தின் வடமேற்கு மூலையில் மூன்று கால் மண்டபமும் தென்கரையில் ஞான சம்பந்தருக்கு பங்குனி விழாவில் அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபமும் உள்ளன. கிழக்கே மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் நீராடும் மண்டபமும், வடக்கில் சிவலிங்க மண்டபமும் அமைந்துள்ளது.

    இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் தைப்பூசத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முதல் நாள் சந்திசேகர சுவாமியும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலரும், தெப்பத்தில் எழுந்தருளுவார். முதல்நாள் ஐந்து சுற்று, இரண்டாவது நாள் ஏழு சுற்று, மூன்றாவது நாள் ஒன்பது சுற்று என மூன்று நாட்கள் தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.

    தெப்பம் புறப்படுகையில் பெண்கள் வெற்றிலையில் கற்பூரமேற்றி தண்ணீரில் விடுகின்றனர். இத்திருக்குளத்தில் முழுகி பாவங்கள் களைந்தவர்கள் அனேகம். அவ்வாறே கலிங்கத்தை ஆண்ட தருமனின் புதல்வன் சாம்பன் என்பவனும் தனது பாவங்கள் தீர இக்குளத்தில் நீராடி கற்பகாம்பிகை, கபாலீஸ்வரரை வழிபட்டு முக்தியடைந்ததாக 'தீர்த்த சர்க்கம்' என்ற நூல் தெரிவிக்கிறது.

    குளத்திற்கு எதிரே கோபுரத்தின் வடக்குப்புறத்தில் கற்பக விநாயகரையும், அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் பாலமுருகனும் நுழைவாயிலுக்கு எதிரே துவஜஸ்தம்பம் உயர்ந்து காட்சி தருகிறது. அதனருகே பலி பீடத்தையும், ரிஷப தேவரான நந்தியம் பெருமானையும், அடியார்க்கு அருள்புரிய வீற்றிருக்கும் விநாயகரையும் காணலாம்.

    ஸ்ரீ கற்பகாம்பிகை சன்னதி

    இங்கு அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறாள். சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. அதோடு வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி, நவராத்திரி காலங்களில் பூப்பாவாடை, தங்கக் காசுமாலை மற்றும் வைரக்கிளி தாடங்கமும் அணிந்து காட்சி கொடுக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளித் தொட்டிலில் அம்பாளை வைத்து வேத பாராயணம் ஒலிக்க மும்முறை வலம் வரும் அவளின் அழகைக்காண கண்கோடி வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சுக்ரவாரம் இந்த பவனியுடன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.

    சன்னிதியின் தென்மேற்கில் இறைவனின் பள்ளியறை உள்ளது. பிராகார சுவர்களில் பாமாலைகளும், சவுந்தர்ய லஹரியும், அபிராமி அந்தாதியும் சலவைக் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.

    • ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக கூறுகின்றனர்.
    • கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன.

    கோவில் வரலாறு:

    இந்த ஆலயமானது கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு முன் இந்த ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மற்ற கோவில்களில் உள்ளவை போன்ற முழு கல்வெட்டுகள் இல்லை. மேலும் கோயிலின் கட்டிடக் கலையில் பல்லவர்கள் அமைப்பையோ, சோழர்கள் அமைப்பையோ காண முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

    16-ஆம், 17-ஆம் நூற்றாண்டின் தூண் வேலைப்பாடுகள் (பிற்கால விஜயநகர முறையில்) காணப்படுகின்றன. மேலும் 1921-ல் சாந்தோம் மாதாகோவில் அருகே மயிலையைப் பற்றிய 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட செய்திகள் மூலம் கபாலீச்சரம் கடற்கரையில் ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததென்றும், அது காலப்போக்கில் கடல் கொண்டதால் இப்பொழுது உள்ள இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டது என்றும் தெரிய வருகிறது.

    இப்பொழுது இக்கோவில் மதில்சுவரின் உட்பகுதியில் 2 கல்வெட்டுக்களும், முருகன் சந்நிதியில் ஒரு கல்வெட்டும், அம்பாள் சந்நிதியின் உட்புறத்தில் இரண்டு கல்வெட்டுக்களும் வடக்கு- வெளிப்பிர காரத்தில் வடக்கு நோக்கி, 8 கற்களில் தொடர்பின்றிச் சிதறுண்ட கல்வெட்டுக்களும் உள்ளன. இவைகள் எல்லாம் முன்பு கடற்கரை ஓரம் இருந்த கோவிலில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    சமீபத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் சில, சாந்தோம் மாதா கோவிலில் இருந்த பெரிய பாதிரியாரான பிஷப் வீட்டில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கந்தபுராணம், கூர்ம புராணம், வராக புராணம் ஆகியவற்றில் கபாலீஸ்வரர் ஆலய மகிமைகள் கூறப்பட்டுள்ளதன் மூலம் இத்தலத்தின் தொன்மை உணரப்படுகிறது.

     தல புராணம் 1:

    கயிலையங்கிரியில் ஒரு சமயம் சிவபெருமானிடம் உமா தேவியார், மகிமை பொருந்திய பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவபிரானும் சொல்லத் தொடங்கினார். அக்கறையாக கவனித்து வந்த தேவியின் கவனத்தை ஒரு மயிலின் நடனம் திசை திருப்பியது. இதை கவனித்த முக்கண்ணர் "எந்த மயிலின் ஆட்டத்தில் மயங்கினாயோ அந்த மயிலாகவே பிறக்கக் கடவது" என சபித்தார்.

    சாப விமோசனம் அருளுமாறு அம்பிகை வேண்ட ஈசனும், "தொண்டை மண்டலத்தில் புன்னை மரத்தடியில் மயிலாய் நீ எமை பூஜிக்க, அங்கே வந்து ஆட்கொள்வோம்" என்றருளி மறைந்தார். அவ்வாறே அன்னையும் பூஜிக்க சிவபிரானும் தான் கூறியவண்ணமே ஆட்கொண்டார். மயில் பூஜித்த பதியானதால் மயிலாப்பூர் என்னும் நாமதேயம் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆதியில் காபாலிகர்கள் ஈசனை அனுதினமும் ஆராதித்து வந்ததால் கபாலீச்சரம் என்னும் நாமதேயம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    தல புராணம் 2:

    அடி முடி காண இயலாத அண்ணாமலை ஜோதியின் முடியை தான் கண்டதாக தாழம்பூவை சாட்சியாக வைத்து பொய் சொன்னார் பிரம்மா. பொய் சொன்ன பிரம்மனின் தலையை கிள்ளி வீசினார் ஈசன். ஆனால் அந்த கபாலமோ கீழே விழாமல் ஈசனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. இதனால் நான்முகன் படைப்பாற்றலை இழந்தார். பிறகு புவியில் வந்து தவமிருந்து பூஜைகள் செய்து மீண்டும் படைப்பாற்றலை பெற்றார். ஈசனை ஸ்தோத்தரித்து வணங்கிய பிரம்மன் அவரிடம், "எனது கபாலத்தை சிறிது காலம் தாங்கியதால் அந்த பெயருடன் சேர்த்து தாங்கள் அழைக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாராம். அவ்வாறே அவரும் கபாலம் + ஈஸ்வரர் கபாலீஸ்வரர் ஆனார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கோவில் கொண்டுள்ள இறைவனின் நாமம் ஸ்ரீ கபாலீஸ்வரர், இறைவியின் நாமம் ஸ்ரீ கற்பகாம்பிகை.

     பிற பெருமைகள்:

    சமயக் குரவரான திருஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப் பதிகம், திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், கபாலீஸ்வரர் பஞ்ச ரத்தினம், கற்பகவல்லி மாலை, சிங்காரவேலர் வெண்பா, திருமயிலை யமக அந்தாதி முதலிய பிரபந்தங்கள் இத்தல மூர்த்திகளின் மகிமையை நன்கு விளக்குவன.

    "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்." -திருஞானசம்பந்தர்

    என்ற பதிகத்தை தலத்துப் பாடலாக திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ளார்.

    சென்னை மாநகரிலுள்ள மயிலாப்பூர் என்னும் திருமயிலையில் கிழக்கு மாடவீதியில், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் சிறப்புற விளங்குகிறது. கோபுரத்தின் உயரம் சுமார் 40 மீட்டர். எழு நிலைகள்,ஒன்பது கலசங்களுடன் கம்பீரமாய் பக்தர்களை வரவேற்கிறது. இது 1902ல் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பகீரதன் தவம், சிவபிரானின் எட்டு வீரச் செயல்கள், காளியுடனான போட்டி, அப்பர், சம்பந்தர், அப்பூதி அடிகள், கண்ணப்பர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள், போன்ற பல சிற்பங்கள் கண்களை கவருவதாக உள்ளன.

    நர்த்தன கணபதி

    பிரதான வாயில் வழியாக நுழைந்தால் எதிரே நர்த்தன விநாயகர் ஒய்யாரமாக வீற்றிருக்கிறார். இவரது நர்த்தன கோலத்திற்கும் சுவையான காரணத்தைக் கூறு கிறார்கள். ஒரு சமயம் முருகன் சிவபிரானின் திருக்கையால் வேல் வாங்கு வதற்காக இங்கு வந்தாராம்.

    சிவபிரானும் அவருக்கு வேலினைவழங்கி ஆசிர்வதித்ததோடு 'தமை யனிடமும் ஆசிர்வாதத்தை வாங்கிக்கொள்' என்றாராம். அவ்வாறே தம்பியால் வணங்கப்பட்டதும் ஆனந்தக் கூத்தாடினாராம் விநாயகர். அதே நர்த்தன கோலத்தில் காட்சி யளிக்கிறார் என்று தல புராணம் விளக்குகிறது.

    ஸ்ரீ உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் சன்னிதி நர்த்தன கணபதி சன்னிதிக்கு அடுத்து அருள்மிகு அண்ணா மலையார் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அதே சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்புரியும் உண்ணா முலை அம்பாளை சிறிய துவாரத்தின் வழியாகவும் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இங்கு கார்த்திகை தீபத்தன்று விசேஷ பூஜை நடைபெறுகிறது.

    சிங்கார வேலவர்

    அடுத்து கருங்கல் தளவரிசை அமைக்கப் பட்டுள்ள தெற்குப் பிராகார சுற்றில் அருள்மிகு சிங்காரவேலர் வீற்றிருக்கிறார். மேற்கு பார்த்த திருக்கோல காட்சி. வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் மீதமர்ந்து பக்த கோடிகளுக்கு அருள்புரிகிறார். கபாலீஸ்வ ரரின் கருவறை விமானத்தை விட சிங்கார வேலவரின் கருவறை விமானம் சற்றே உயரமானது. காரணம், ஆதியில் சிங்கார வேலவரின் கோவில் மட்டுமே இங்கிருந்தது. மூன்று முறை கடல் பொங்கி நிலப்பகுதியை அபகரித்துக் கொண்டதால், சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்வள்ளல் நயினியப்ப முதலியாரின் புதல்வர் முத்தியப்ப முதலியார் இக்கோயிலை அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

    பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார், வில்வமரம் வடக்கு நோக்கி இருக்கும் அருள்மிகு பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார் சந்நிதிகளை அடுத்து பரமனுக்குப் பிரியமான வில்வ மரமும் காணப்படுகிறது.

    மவுனமாகவே இருந்து பகவானை ஆராதித்து வந்ததால் வாயிலார் நாயனார் என்ற ழைக்கப்பட்டார். மயிலையில் பிறந்தவரான இந்த சிவபக்தர், சிவ பெருமானை உள்ளம் என்ற கோவிலில் இருத்தி, ஞானமாகிய சுடர் விளக்கேற்றி, அன்பாகிய அமுதத்தை நிவேதித்து, பல நாளாக ஞானபூஜை செய்து, சிவபெருமானின் அருள் பெற்றவர். அத்தகைய பெருமைமிகு பக்தருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

    • கற்பகாம்பாள் சன்னிதியில் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது.
    • ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது.

    மூலஸ்தானம்

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்-றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்த வந்தவுடன் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது. அதனருகில் சுவரில் விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள பாலகர்களைக் திரு துவார கடந்து சன்னிதியில் நுழைந்தால் ஈசன், பெரிய லிங்க உருவில் மேற்கு திசை பார்த்து காட்சி தருகிறார்.

    ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது. இம்மூர்த்தி, வழிபடுபவருக்கு உடனே காட்சி தந்து அருள்புரியும் என்கின்றனர். பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு. சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு.

    சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    துர்கை

    கபாலீஸ்வரரின் கருவறையின் வடக்கு வெளிச்சுவரில் வடக்கு பார்த்து துர்கை வீற்றிருக்கிறாள். மகா வரப்ரசாதியான இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளிகிழமை தோறும் 9 வாரங்கள் ராகு கால வேளை பூஜை செய்து மங்கள சண்டிகா ஸ்தோத்ரம் படித்து வந்தால் நினைத்த காரியம் சித்தியாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    அடுத்து கோமுகம். மேலே பிரம்ம தேவன் அருள்பாலிக்கிறார். கோமுகத்திற்கருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பிட்சாடனர், மோகினி, குண்டோதரன், அஸ்திர தேவர்,விநாயகர், வீரபாகு மற்றும் சுமித்திரத் தொண்டர் வீற்றிருக்கின்றனர்.

    அடுத்து 63 நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், தொகையடியார் 9 பேர்கள், சிவநேசர், அங்கம் பூம்பாவை, கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஐந்துதலை நாகர், நாகப்படத்தின் கீழ் சிவலிங்கம், காமாட்சி, ஏகாம்பரேசுவரர், பெரிய சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் சிவலிங்கம், இரு நாகங்களின் படங்களின் கீழ் சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் 2 சிவலிங்கங்கள் மற்றும் தெற்கு நோக்கிய பைரவர் (அஷ்டமியில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடத்தப்படுகிறது) திருஉருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் ஒரு சிவலிங்கமும், இதனையடுத்து ஐந்து தலை நாகத்தின் படத்தின் நிழலில் மற்றொரு சிவலிங்கமும், கணேசர், வீரபத்திரர், சிவலிங்கம், சைவ நால்வர், அடுத்து ஒரு சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும் பொள்ளாப் பிள்ளையாரும் உள்ளனர். அதற்கெதிரே மூலஸ்தானத்தின் பின்புறம் திருமாலும் பிரம்மனும் தேடிக்காண முடியாத பிறையண்ணல், லிங்கோத் பவராகக் காட்சியளிக்கிறார். எதிரே பொள்ளாப் பிள்ளையார் அருகில் வரிசையாக 63 நாயன்மார்களின் மூலவ மூர்த்திகளும் சூரிய பகவானும் அருள்புரிகிறார்.

    தட்சிணாமூர்த்தி

    கருவறையின் தெற்கு சுவர் மாடத்தில் குரு தட்சிணாமூர்த்தியும் அவருக்கு அருகில் செல்வ கணபதியும் அருள்புரிகிறார்கள். அறுபத்துமூவர் திருஉருவங்களுக்கு அருகில் சேக்கிழார் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து வடக்கு நோக்கியவாறு பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் நேராக வடக்கிலுள்ள நடராஜர் திருஉருவப் பிம்பத்தை காணலாம்.

    மேற்கு வரிசையில் கற்பகாம்பிகை, ஸோமாஸ்கந்தராகிய அம்மையப்பர் உற்சவ மூர்த்திகளை காணலாம். உள்ளே எங்கேயும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது சரியில்லை. ஏனெனில் எங்கு நோக்கினும் சன்னிதிகள். துவஜஸ்தம்பத்தின் அருகில் தான் அதுவும் வடக்கு நோக்கியே பெண்கள் அஷ்டாங்கமாகவும் ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், விழுந்து கும்பிடுவது சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

     அங்கம் பூம்பாவை, திருஞானசம்பந்தர்

    வெளி பிராகாரத்தில் அங்கம்பூம்பாவைக்கென்று சன்னிதி தனி விமானத்துடன் உள்ளது. அங்கம் பூம்பாவை கிழக்கு நோக்கி இருக்க அதே சன்னிதியில் திருஞான சம்பந்தர் வடபுறம் பார்த்துகாட்சி தருகிறார். சிவனருள் பெற்ற அங்கம் பூம்பாவையின் கதையை பார்க்கலாம்.

    சிவபிரானின் அடியாரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவை ஒரு நாள் நந்தவனத்தில் சிவபிரானுக்காக மலர் பறிக்கும் வேளையில் கொடிய விஷநாகம் தீண்டி மரணமடைந்தாள். செட்டியார் அவளை திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க நிச்சயித்திருந்தார்.

    ஆனால் திடீரென நிகழ்ந்த அவளது மரணத்தால் அவரது எண்ணம் ஈடேற முடியாமல் போயிற்று. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உடலை எரித்த அவர் அவளது சாம்பலை மட்டும் கரைக்க மனமில்லாமல் ஒரு பானையில் எடுத்து. வைத்துக் கொண்டார். அச் சமயம் மயிலைக்கு விஜயம் செய்திருந்த திருஞான சம்பந்தர் நடந்த விஷயத்தை அறிந்து சிவநேசரை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அழைத்துவரச் செய்தார். அவரும் தனது மகளின் சாம்பல் அடங்கிய பானையுடன் அவ்விடம் வந்தார்.

    ஞானசம்பந்தர் மனமுருகி சிவபிரானை பிரார்த்தித்தார். உடனே அவர் நாவினின்று 'மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்ற பதிகத்துடன் பாடல்கள் சரளமாக வெளிவந்தன. அவர், ஒவ்வொரு திருநாளாகக் குறிப்பிட்டு, அவ்வைபவத்தை 'அதைக் காணாமல் போகலாமா பூம்பவாய்' என பாடப்பாட சிவபெருமான் அருளுடன் எலும்புகள் இணைந்து சாம்பல் சதை பெற்றது. 12 வயது பெண்ணாக குடம் உடை வெளிப்பட்டாள். சாம்பலும், எலும்பும் கபாலீஸ்வரர் அருளால் மீண்டும் பெண்ணாக மாறிய புண்ணிய க்ஷேத்திரமிது.

    வாகனம், யாக சாலை அனுதினமும் கபாலீஸ்வரருக்கு தீபாராதனை நடக்கும்போது அடிக்கும் பெரியமணி உயரே மதில் சுவரில் கட்டப்பட்டுள்ளது. வடக்குப் பிரகாரத்தில் வரிசையாக வாகனங்கள் வைக்கும் அறைகளும், யாக சாலையும் உள்ளன. வலது புறத்தில் புன்னைவன நாதருக்கு அம்பிகை மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சியும் அருகில் தல விருட்சமாகிய புன்னை மரம் உள்ளது.

    சனீஸ்வர பகவான்

    சனீஸ்வர பகவானுக்கென்று சன்னிதி தனியாக உள்ளது. காக வாகனத்துடன் மேற்கு பக்கம் பார்த்து அருள்புரியும் இவரை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.

    நவக்கிரகம்

    சனீஸ்வரருக்கு எதிர்பக்கம் கிழக்கு பிரகாரத்தில் திரும்பினால் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நவக்கிரகங்கள் மற்றும் ஜகதீச்வரரின் சன்னிதிகள் காணப்படுகின்றன.

    கோவில் பிராகாரம்

    தரிசனம் முடித்து கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் பிராகாரத்தில் உட்கார்ந்து விட்டே கிளம்ப வேண்டும் என்பது மரபு. தெய்வ சிந்தனையுடன் உட்காரும் அந்த சில நிமிட துளிகளில் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடைக்காது என்பது நிதர்சனம்.

    வீதி உலா

    கோவிலைவிட்டு வெளியே வந்தால் வீதியுலா வரும் தெய்வ மூர்த்திகள் சற்று நேரம் நின்று தரிசனமளிக்கும் 16 கால்மண்டபமும், சன்னிதித் தெருவின் முடிவில் திருத்தேரும் உள்ளன.

    • ஸ்ரீ கற்பகாம்பாளை தரிசனம் செய்தால் சுபமங்களம் கிட்டும்.
    • கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர்.

    1. ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்பு, ஸ்ரீவெள்ளீஸ்வரரை தரிசனம் செய்து ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசனம் செய்தால் சுபமங்கள சவுபாக்கியம் கிட்டும். இது தரிசன நியதியுமாகும்.

    2. மகாசிவராத்திரி, மாத சிவராத்திரிகளில் ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசித்து சிவ சிவ என்று கூறினால் நமது கர்ம வினைகள் குறைந்து பிறவிகள் தீரும்.

    3. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர். எனவே, இங்குள்ள புறாக்களின் தரிசனம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    4. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் 3500-க்கும் மேற்பட்ட அதிஅற்புத உன்னத தேவதைகள் இருக்கிறார்கள். எனவே இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது நல்ல எண்ணங்களையும், நியாயமான பிரார்த்தனைகளையும் மாத்திரமே மனதில் கொள்ள வேண்டும். வேறு எந்தவிதமான மாற்று எண்ணங்களுடன் இப்பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.

    5. தட்ச யாகத்தில் தட்சனின் யாகத்தை அழித்த கோபாவேசம் கொண்ட ஸ்ரீவீரபத்திரரை சாந்தப்படுத்தவதற்காக மகரிஷிகளும், முனிவர்களும் பனி மலையைக் கொண்டு அழுத்தி சுவாமியின் உக்ரகத்தைத் தணிக்க முயற்சித்தனர். தந்தையாகிய சிவனுடைய கோபம் தணிந்ததே அன்றி, ஸ்ரீவீரபத்திரரின் கோபம் சிறிதும் தணியவில்லை. பல்வேறு வடிவங்களில் ஸ்ரீவீரபத்திரருக்கு சித்தர்களும், மகான்களும் கோவில்கள் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சிலா ரூபங்களில், மூலாதார சக்தியின் 500-வது பிரதி பிம்பமே ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவீரபத்திர மூர்த்தி ஆவார்.

    6. மேற்குப் பார்த்த சூரியனை, சூரிய ஹோரையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இவரை வழிபடுவதால் கர்பப்பை சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்திக்கான வழி கிட்டும்.

    7. இக்கோவில் ராகு, கேது பரிகார தலமாகும். இத்தலம் முந்தைய யுகங்களில் ராகு, கேது பரிஹார தலமாக விளங்கியது. இதுபோன்று எதிர் காலத்தில் ராகு, கேது பரிகார தலமாக அமையும் என்பது சித்தர்களின் வாக்காகும்.

    8. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உற்சவ காலங்களில் வெயில் நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ் தானத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் சுவாமியை சுமந்து வரும் அடியார்களுக்கும் அளித்திடில் தொலைத்தொடர்பு துறையில் இருப்போர் மேன்மை அடைவர். தொலைத்தொடர்பில் இருக்கக் கூடிய இன்னல்கள் தீரும்.

    9. "எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பர். அந்த சிரசில் உள்ள கபாலம் மிகவும் முக்கியமானது. கபாலம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் அபூர்வமான மூர்த்தி ஸ்ரீகபாலீஸ்வரர் ஆவார். கபாலம் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தித் தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    10. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் அளவு உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடவும் பொழுது, ஸ்ரீகேசல குசலாம்பிகாயை நமஹ, ஸ்ரீதையல் நாயகியே நமஹ, ஸ்ரீகபாலீஸ்வராய நமஹ என்று சொல்ல வேண்டும். இதனால் கபாலம் சம்பந்தபட்ட நோய்கள் தணியும். உடலின் உஷ்ணமும் குறையும்.

    11. இக்கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக விளக்கெண்ணெயுடன் பசு நெய் கலந்து, தீபம் இட்டு அன்னதானம் செய்திடில், எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். முறிந்த எலும்பானது விரைவாகக் கூடும்.

    12. இங்கு ஸ்ரீஜகதீஸ்வரர் தனிச்சன்னதி கொண்டுள்ளார். இது வாஸ்து பூஜைக்கு உகந்த இடமாகும். இவருக்கு வழிபாடு செய்திட வாஸ்து குற்றங்கள் குறையும்.

    13. ஒரு நாளைக்கு குறைந்தது பதிமூன்று கோபுர கலசங்களையாவது தரிசனம் செய்தல் விசேஷமாகும். இக்கோவிலில் பதிமூன்றிற்கும் மேலாகவே கோபுர கலசங்கள் உள்ளன. தினந்தோறும் கோபுர தரிசனம் செய்வதால் பாவங்கள் தீரும். இதனையே, `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றார்கள் பெரியவர்கள். இக்கோவிலில் அருள்பாலிக்கும் துர்க்கையின் கலியுக திருநாமம் ஸ்ரீபஸ்பத்ரயாக்னி. அமர்ந்த கோலத்தில் மூன்று தேவியர் அருள்பாலிப்பது இச்சிவலாயத்தில் மிகவும் சிறப்புவாய்ந்தது.

    • அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது
    • உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர்.

    காலை 9 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட தேரை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'சம்போ மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். 4 மாட வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் வலம் வரும் காட்சியை காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே மயிலாப்பூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செலச்செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது.

    மயிலாப்பூர் கோவிலில் இருந்து சில கிலோ மீட்டருக்கு பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், பிஸ்கட், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இன்று காலை முதலே வழங்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள தெற்கு மாடவீதி, வடக்கு மாட வீதி, கிழக்கு மாடவீதி, ராமகிருஷ்ண மடம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

     

    மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு பகுதியிலும் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் மயிலாப்பூர் பகுதியே பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மேலும் உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 102 தொட்டிகள் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெ ரிய தொட்டிகள் ஆகும்.

    பக்தர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்களின் குப்பைகளை இந்த தொட்டிகளில் போட்டனர். குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக 10 பேட்டரி வாகனங்கள், 4 இலகு ரக மோட்டார் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் பக்தர்கள் குப்பை களை தொட்டிகளில் போடுமாறு 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள், தன்னார்வலர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 3 ஷிப்டுகளாக 269 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பகதர்கள் திரண்டதால் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • நைவேத்யம், படைத்தும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றன.
    • கோவலின் நான்கு குலத்தோர் சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு்களை செய்து இருந்தனர்.

    காங்கேயம்:

    காங்கேயம் அருகே பாப்பினி கிராமத்தில் அமைந்துள்ள பருகன் நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும்ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் ஆகிய தெய்வங்கள் அமைந்து அருள்பாலித்து வருகிறது. வருடாந்திர மாசி மகத்தை முன்னிட்டு நடராஜருக்கு நைவேத்யம், படைத்தும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் நகராட்சி முன்னாள் சேர்மனும் கூட்டுறவு வங்கியின் தலைவருமான வெங்குமணிமாறன், காங்கேயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகே ஸ்குமார், பாப்பினி பஞ்சா யத்துத் தலைவர் கலாவதி பழனிசாமி, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் மைனர்பழனிசாமி, தொழிலதிபர் கனகராஜ், திருப்பூர் மாவட்ட குத்து சண்டை சங்கத் தலைவர் அப்பு சிவசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் தாராபுரம்மணி, காங்கேயம் அரிசி ஆலை சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் சாமியப்பன், பொருளாளர் சின்னசாமி, சிவன்மலை ஜேசீஸ் பள்ளி தாளாளர் பழனிசாமி, ஆடிட்டர் சண்முகசுந்தரம் மற்றும் கோவில் உபயதாரர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அன்ன தானமும் நடைபெற்றது. வரும் 16ந்தேதி மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு 48 நாட்களுக்கான மண்டல பூஜையும் நிறைவு விழாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுத்தலைவர் எஸ். தங்கமுத்து, தலைவர் வரதராஜ், செயலாளர் எம். ராமசாமி, பொருளாளர் பி. அர்ச்சுணன், பாப்பினி கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், அன்னதான கமிட்டி நிர்வாகி பாலசுப்பிரமணியம், மற்றும் கோவலின் நான்கு குலத்தோர் சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு்களை செய்து இருந்தனர். 

    எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைத்துள்ளார்கள்.
    உயிர்கள் வாழ்வதற்கு முக்கியமாக உணவு தேவை. ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. அதாவது, இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் உண்ணுவதற்கு உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோராகக் கருதப்படுவார்கள் என்கிறது.

    புராணங்கள் அனைத்திலும், தானங்களில் மிக உயர்ந்த தானமாக அன்னதானமே சொல்லப்பட்டு இருக்கிறது. ஒருவரது சகல தோஷங்களையும், முன் ஜென்ம வினை களையும் அடியோடு நீக்கவல்லது, ஒருவர் உள்ளன்போடு செய்யும் அன்னதானம் மட்டுமே. நாயன்மார்களில் பலரும், அடியவர்களுக்கு அன்னதானம் செய்வித்தே சிவபெருமானின் அருளாசியைப் பெற்றுள்ளனர்.

    மயிலாப்பூர் பூம்பாவை திருமுறைப் பதிகத்தில் ‘கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் அன்னதானம் காணாமல் சென்று விட்டாயே பூம்பாவை’ என்று கூறி இறந்து சாம்பலாகிப் போன பூம்பாவையை உயிருடன் எழுப்பி தருவார், திருஞான சம்பந்தர். இதன் மூலம் சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே மயிலாப்பூர் திருத்தலத்தில் அன்ன தானம் செய்வித்தல் என்பது சிறப்பாக நடைபெற்றுவந்துள்ளது என்பதனையும் அறியலாம். எனவே கபாலீஸ்வரர் திருக்கோவிலில் அடியவர்களுக்கு அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு என்கிறார்கள்.

    எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைத்துள்ளார்கள். இத்தலத்தில் கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்து கபாலீஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் வழியில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைந்துள்ளது.

    வீட்டில் சமைக்கும் பொழுது, தினமும் சிறு பிடி அரிசியை தனி பாத்திரத்தில் சேமித்து வரவேண்டும். பின்பு சேமித்த அந்த அரிசியை சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும்பொழுது அங்குள்ள ‘பிடி அரிசி உண்டியலில்’ சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெறுவதால், பிடி அரிசி உண்டியலில் கொட்டிய அரிசி அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடுமையான கர்மவினைகளும், தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம்.

    கபாலீஸ்வரம் வர இயலாதவர்கள் இத்தல சம்பந்தர் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து, வீட்டினில் தினமும் சமைக்கும்போது ஒருகைப்பிடி அரிசியினை தனியாக எடுத்துவைத்து தங்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் அன்னதானம் செய்திட அளிப்பதும் சிறந்த பலனைக் கொடுக்கும். தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தை வலம் வரலாம் வாருங்கள்.

    ஒருமுறை கயிலாய மலையில் பார்வதி தேவிக்கு பஞ்சாட்சர மந்திரப் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். ஆனால் பார்வதி அதனைக் கவனிக்காமல் அருகில் இருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் அடைந்தாள். தன் தவறுக்கு வருந்திய பார்வதி தேவி, ஈசனை வேண்டி சாப விமோசனம் கூறும்படி கேட்டாள்.

    ஈசன் கூறியபடி, மயில் வடிவிலேயே பூலோகத்தில் புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் சிவபூஜை செய்துவந்தார். புன்னை மரத்தின் அடியில் ஈசனை பூஜித்து, ஈசனுடன் மீண்டும் ஒன்றானாள். கபாலீஸ்வரர் கோவில் தல மரமான புன்னைமரத்தின் அடியில், மயில் வடிவில் அன்னை பார்வதி பூஜிக்கும் சிவலிங்கம் உள்ளது. உமையவள் ஈசனை மயில் வடிவில் பூஜித்ததால், இத்தலம் ‘மயிலாபுரி, மயிலை, மயிலார்ப்பு’ என்றழைக்கப்பட்டு, தற்போது ‘மயிலாப்பூர்’ என்று வழங்கப்படுகிறது.

    சிவபெருமானைப்போலவே, தொடக்க காலத்தில் ஐந்து தலைகளைக் கொண்டிருந்தார் பிரம்மன். தனக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் உள்ளதால், தானும் ஈசனுக்கு நிகரே என்ற எண்ணம் பிரம்மனுக்குத் தோன்றியது. பிரம்மனின் கர்வத்தை ஒடுக்க நினைத்த ஈசன், பைரவரை தோற்றுவித்து, பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அப்படி தலையை இழந்து படைக்கும் தொழிலையும் விட்ட பிரம்ம தேவன், ரிஷிகளின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    அந்த லிங்கத்திலேயே ஈசன், கபாலீஸ்வரராக எழுந்தருளினான். பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, கபால ஈஸ்வரனாக திருக்காட்சி கொடுத்த ஈசன், பிரம்மனின் பிழையைப் பொறுத்து ஆக்கல் தொழிலையும் மீண்டும் அவருக்கு வழங்கினார். ‘கபாலி’ என்றால் ஈசனின் பைரவ வடிவமே. பைரவரை வழிபடுபவர்களுக்கு அக்காலத்தில் ‘கபாலிகர்கள்’ என்றே பெயர். இத்தல ஈசன், பைரவ சொரூபமே. கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அபிஷேகம், அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட, அனைத்து செல்வங்களும் நம்மை வந்தடையும்.

    இத்தல கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அமரர், சித்தர், அசுரர், சைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் முதலிய பதினெண் கணங்களும் வழிபடுகின்றனவாம். இதனை சம்பந்தர் தனது இத்தல பூம்பாவை திருப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தலம் பைரவர் உபாசகர்கள் வழிபட வேண்டிய முதன்மை திருத்தலம் ஆகும். கபாலீஸ்வரர் கருவறை முன் மண்டபத்தில் ஈசனின் வலப்புறம் லிங்க சக்தி அருள்கிறாள். ஆலய வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் வள்ளி- தெய் வானையுடனான முருகப்பெருமான், சிங்காரவேலர் எனும் திருநாமத்தில் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் நேர்எதிரில் அருணகிரிநாதர் சன்னிதி உள்ளது. கபாலீஸ்வரர் ஆலயக் கொடிமரத்தின் அருகில் தனிச்சன்னிதியில் திருஞானசம்பந்தரும், பூம்பாவையும் எழுந்தருளி உள்ளனர். சம்பந்தர் கையில் பொற்றாளத்துடனும், அவரை வணங்கிய நிலையில் பூம்பாவையும் இருக்கிறார்கள்.

    இத்தல அன்னையான கற்பகாம்பாளை வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளைகளில் தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்கலாம். தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் மயிலை கற்பகாம்பாளை, தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்க பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து 8 வாரங்கள் வழிபட்டு, கருவறை தீபத்தில் சந்தனாதி தைல எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வழிபட்டு வர வீடு வாங்கும் யோகம் கிட்டும் என்கிறார்கள்.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூர் செல்ல பஸ் வசதி உள்ளது.

    ×