search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic change"

    • ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹைரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும்.
    • செயின்ட் மேரிஸ் சாலை வலது புறம் திரும்பி சிருங்கேரி மட் சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தை வெளி பஸ் நிலையத்தை அடையலாம்.

    சென்னை:

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையம், திருமயிலை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மெட்ரோ நிலைய பகுதி நாளை (7-ந்தேதி) ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக அர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை வலது, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வலது, ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து அரசு ஆஸ்பத்திரி நோக்கி வரும் வாகனங்கள் ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை இடது, நீலகிரிஸ் கடை, மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை வலது, டி.டி.கே.சாலை, கவுடியா மட் சாலை வரை செல்லும்.

    ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹைரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும். வலது லஸ் சர்ச் சாலை, டி. சில்வா சாலை, பக்தவச்சலம் தெரு, வாரன் சாலை, செயின்ட் மேரி சாலை, இடது புறம் திரும்பி சி.பி.ராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோவில் தெரு)- இடதுபுறம், ரங்கா சாலை வலது, கிழக்கு அபிராமபுரம் 2-வது தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை வழியாக பி.எஸ்.சிவசாமி சாலை வலது, சுலிவன் கார்டன் தெரு இடது, ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.

    கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர் ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1-வது தெரு, லஸ் அவென்யூ 1-வது தெரு லஸ் அவென்யூ, முண்டகண்ணியம்மன் கோவில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.

    வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி செயின்ட் மேரிஸ் சாலை இடம் புறம் திரும்பி சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு நேராக ஆர்.ஏ.புரம் 3-வது குறுக்கு தெரு சென்று காமராஜர் சாலை, ஸ்ரீநிவாசா அவென்யூ, கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர்.கே.மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே. மட் சாலை இடது, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு விரிவாக்கம், வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் தெரு வலது, செயின்ட் மேரிஸ் சாலை இடது, ஆர்.கே. மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    மந்தைவெளி செல்லும் மாநகர பஸ்கள் வாரன் சாலை இடது புறம் செயின்ட் மேரிஸ் சாலை வலது புறம் திரும்பி சிருங்கேரி மட் சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தை வெளி பஸ் நிலையத்தை அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது.
    • கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்தியாவில் முதல்முறையாக 'ஆன் ஸ்ட்ரீட் நைட் பாா்முலா 4 பந்தயம்' தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இந்தப் பந்தயம் டிசம்பா் 9, 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் நிலையில், தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள சில சாலைகள் பந்தய சுற்றுகளாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 1-ந்தேதி வரை இரவு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, கொடி மரச்சாலையில் போா் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் ரிசா்வ் வங்கியின் சுரங்கப்பாதை, பாரிமுனை சென்று, அங்கிருந்து தங்களது இலக்கை நோக்கி செல்லலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடி மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

    அண்ணா சாலையில் பல்லவன் சாலை சந்திப்பு முதல் மன்றோ சிலை வரையிலும், சுவாமி சிவானந்தா சாலையில் பெரியாா் சிலை முதல் நேப்பியா் பாலம் வரையிலும், காமராஜா் சாலையில் நேப்பியா் பாலம் முதல் போா் நினைவிடம் வரையிலும் சாலை குறுக்கலாக்கப்படும். இந்த வழியாக வாகனங்கள் வழக்கம்போல செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்தச் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ந்தேதி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.
    • மறுநாள் இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ந்தேதி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும். மறுநாள் இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும்.

    திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் முக்கிய நாட்களான 17, 18 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள்

    தூத்துக்குடி, ஆறுமு கநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழி யாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி டி.சி.டபிள்யு. ஜங்ஷன், நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.

    அல்லது வீரபாண்டி யன்பட்டிணம் சண்முகபுரம் ெரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.

    குரும்பூர் மார்க்க த்தில்இருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.

    கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை என்.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன் வழியாக செல்லவும்.

    நாகர்கோவில், திசை யன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், நெல்லை ரோடு நல்லூர் 'வி' ஜங்ஷன் வழியாக செல்லவும்.

    II அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்.

    1.தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    2.நெல்லை, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் நெல்லை ரோட்டில் உள்ள ஷபி டிரேடர்ஸ் கீழ்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    3.கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் தெப்பகுளம் (முருகாமடம்) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    4.நாகர்கோவில், திசை யன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் தெப்பகுளம் (முருகாமடம்) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள்.

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப் பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப் பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 5 வாகன நிறுத்துமிடங்களும், நெல்லை சாலையில் 6 வாகன நிறுத்துமிடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 4 வாகன நிறுத்துமிடங்களும் மற்றும் திருச்செந்தூர் டிபி சாலையில் 1 வாகன நிறுத்துமிடமும் சேர்த்து மொத்தம் 16 வாகன நிறுத்துமிடங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் குறுக்கு நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமல் காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள். தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தூத்துக்குடி சாலையில் உள்ள ராஜ்கண்ணா நகர் வழியாக ஜெ.ஜெ. நகர் வாகன நிறுத்துமிடம், சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், அரசு தொழிற்பயிற்சி பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம், மற்றும் ஆதித்தனார் கல்லூரி மாணவர் விடுதி எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    2. நெல்லை, குரும்பூர் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்.

    நெல்லை, குரும்பூர் சாலை மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் நெல்லை சாலையில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூம் எதிரே உள்ள சுப்பையா லேன்ட் வாகன நிறுத்துமிடம், வியாபாரிகள் சங்க வாகன நிறுத்துமிடம், வேட்டையாடும் மடம் வாகன நிறுத்துமிடம், குமரன் ஸ்கேன் சென்டர் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், ஆதித்தனார் கல்லூரி பணியாளர் குடியிருப்பு வாகன நிறுத்துமிடம் மற்றும் அருள் முருகன் நகர் வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்தமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    நாகர்கோவில், திசைய ன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்.

    நாகர்கோவில், திசை யன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் உள்ள குடோன் எதிரே உள்ள சுந்தர் லேன்ட் வாகன நிறுத்துமிடம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் லேன்ட் வாகன நிறுத்துமிடம், முருகானந்தம் லேன்ட் வாகன நிறுத்துமிடம் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்ததுமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்.

    கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை, என்.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து வலதுபுறம் திரும்பி பரமன்குறிச்சி சாலையில் உள்ள குடோன் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

    மேற்கண்ட சாலை களிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தர்கள் கோவில் அருகில் செல்வதற்கு சிறப்பு அரசு நகர பேருந்துகள், மினி பேருந்துகள், வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதியிலுள்ள தேரடி அருகில் பக்தர்களை இறக்கிவிட்டு திரும்பி செல்லும்போது அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் ஜங்ஷன், தெப்பகுளம் (முருகாமடம்) வழியாக செல்லும்.

    பக்தர்களுக்கான முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள்

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள்,கோவில் வளாகம், கடற்கரை பகுதி, ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், மேலும் சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் காவலர்களை பணியமர்த்தியும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இத்திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்கள் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ ஜாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ எவ்வித அனுதியுமில்லை. மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகள் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது.

    வாகனங்களில் வரும் பக்தர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்கள் காட்டும் வழிமுறைகளை கடைபிடித்து அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் தங்கள் வாகனங்களை மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தம் செய்யுமாறும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறை யினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும்.
    • பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும். இந்த நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து சென்ற வண்ணம் உள்ளது.

    இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, காமநாயக்கன்பாளையம் வழியாகவும், மங்கலம் வழியாகவும், செல்ல அறிவுறுத்தி வருகிறார்கள்.

    போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளித்து வருகிறார்கள். மேலும் பல்லடம் நகரின் முக்கியமான பகுதிகளான பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
    • எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.

    மதுரை

    மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து தற்காலிக மாக மாற்றம் செய்யப்படுகிறது.

    இன்று (2-ந்தேதி) முதல் இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆகிய நேரங்களில் மட்டுமே கீழ மாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் ஆகிய சாலைகளில் சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப் படும்.

    9-ந் தேதி அன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.

    மேலும் பை-பாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு, அழகர்கோவில் சாலை, மூன்றுமாவடி சந்திப்பு, புது நத்தம் ரோடு, அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, கூடல் நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை-ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருந்துவமணை சந்திப்பு ஆகிய சந்திப்புகளில் இருந்து நகருக்குள் நுழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11 மணி முதல் மறுநாள் 10-ந்தேதி. காலை 7.10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படும்.

    10, 11-ந் தேதிகளில் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக் குள் மேற்படி சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.

    அதே நாட்களில் பொது மக்களின் நலன் சுருதி நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இருசக்கர வாகனங் கள் தவிர மற்ற வாகனங்க ளுக்கு அனுமதி இல்லை. அவசியமெனில் இரு சக்கர வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

    அதே நாட்களில் பேலஸ் ரோடு, கீடிமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்ைல.

    மதுரை மாநகர பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், வர்த்தக சங்கங்கள் நெரிசல் இல்லாமல் மக்கள் பொருட்கள் வாங்கி செல்ல உதவும் வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படு கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    சிவகாசி

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சிவகாசி நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீபாவளி வரை போக்குவரத்து மாற்றம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சிவகாசி நகருக்குள் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பிற்பகலில் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நகர் பகுதிக்குள் கனரக வாக னங்கள் அனுமதிக்கப்படும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங் கள் தவிர மற்ற நேரங்களில் வெளியூரில் இருந்து லோடு ஏற்றவோ, இறக்கவோ, வரும் கனரக வாகனங்கள், உள்ளூரில் இருந்து வெளியே செல்லும் கனரக வாகனங்கள் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    கனரக வாகனங்கள் பிள்ளைக்குழி நிறுத்தத்தில் இருந்து இடது புறமாக திரும்பி தெய்வானை நகர், மணிகண்டன் மருத்துவ மனை, மணி நகர் பஸ் நிறுத்தம் வழியாக சிவகாசி பழைய மீன் மார்க்கெட் பகுதியில் சென்று நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் கனரக வாக னங்கள் சாட்சியாபுரம் சாமி யார் மடத்திலிருந்து கங்கா புரம், செங்கமல நாச்சியார் புரம், திருத்தங்கல் தேவர் சிலை, திருத்தங்கல் மாரி யம்மன் கோவில், திருத்தங் கல் செக்போஸ்ட் வழியாக சென்று திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங்கள் மட்டுமே வெம்பக்கோட்டை ஜங்ஷன் வழியாக பன்னீர் தெப்பம், மணிநகர், பஸ் நிலையம், அம்பலார் மடம் மற்றும் பழனியாண்டவர் தியேட்டர், காரனேஷன் ஜங்ஷன் வரையிலான சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி லோடு ஏற்றவோ, இறக்கவோ செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடாது.

    அனைத்து வாகனங்களை யும் மதியம் 3 மணிக்கு காரனே ஷனுக்கு எதிரே இந்து நாடார் பெண்கள் மேல்நி லைப்ப ள்ளிக்கு சொந்தமான மைதானத்திற் குள் சென்று நிறுத்த வேண்டும். பயணிகளை அங்கிருந்து மட்டுமே ஏற்ற வேண்டும். திருத்தங்கல் வழியாக வெளியே செல்ல வேண்டும். சிவகாசி நகருக்குள் வேறு எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க கூடாது. திருத் தங்கல் சாலையிலும் எங்கும் கனரக வாகனங்களை யோ, ஆம்னி பஸ்களையோ நிறுத்தக் கூடாது. திருத் தங்கல் புதிய பஸ் நிலையத்தில் மட்டுமே பயணிகள் மற்றும் பொருட் களை ஏற்ற, இறக்க வேண்டும்.

    • காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி. சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைய அறிவுறுத்தல்
    • அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பலாம்

    கோவை,

    கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சந்திப்பு முதல் உப்பிலிபாளையம் சிக்னல் வரை மேம்பாலப் பணி மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்து இருந்தனர். இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    அதன்படி, அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் நஞ்சப்பா சாலை வழியாக பார்க் கேட் ரவுண்டானாவை அடைந்து மத்திய சிறை அருகே செல்லும் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அல்லது உப்பிலிபாளையம் சிக்னலில் வலதுபுறம் திரும்பி ரெட்கிராஸ், ஹூசூர் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

    அண்ணா சிலை சந்திப்பில் இருந்து மேம்பாலம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கே.ஜி. மருத்துவமனை ரெட்கிராஸ் வழியாக உப்பிலிபாளையம் சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அண்ணாசிலை சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி டாக்டர் பாலசுந்தரம் சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக செல்ல வேண்டும்.

    அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பியோ அல்லது லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாகச் செல்லலாம்.

    காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி செல்லும் பேருந்துகள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    காந்திபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் பார்க்கேட், எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைந்து செல்லலாம்.

    திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், எல்,ஐ.சி. சிக்னல், பார்க்கேட் வழியாக காந்திபுரம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூக்கனேரி யில்‌ கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள்‌ நாளை நண்பகல்‌ 12 மணிக்குள்‌ கொண்டு சென்று கரைத்திடல்‌ வேண்டும்‌.
    • விநாயகர்‌ சிலை கரைத்தல்‌ சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல்‌ படையினர்‌ உட்பட மொத்தம்‌ 1232 காவலர்கள்‌ ஈடுபட உள்ளனர்‌.

    சேலம்:

    சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலை 10 மணிக்குள் சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் சென்று, திட்டமிட்ட நீர்நிலைகளில் கரைத்திடல் வேண்டும்.

    இவற்றுள் மூக்கனேரி யில் கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள் நாளை நண்பகல் 12 மணிக்குள் கொண்டு சென்று கரைத்திடல் வேண்டும்.

    இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை காலை 11 மணிக்குள் சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து எடுத்து, ஊர்வலம் புறப்படும் இடமான எல்லை பிடாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும்.

    மேற்படி விநாயகர் சிலை கரைத்தல் சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1232 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

    சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலப் பாதையான எல்லை பிடாரியம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்படுகின்றது.

    மாற்று வழிப்பாதை விவரம்

    ஊர்வலப்பாதை சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றுபாதை அண்ணா பூங்கா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு மற்றும் அஸ்தம்பட்டி. வழியாக போக்குவரத்து மாற்றபட்டுள்ளது. இதேபோல் அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரையான ஊர்வலப்பாதை மாற்றாக அஸ்தம்பட்டி, கலெக்டர் பங்களா, ஐயந்திருமாளிகை, மற்றும் கன்னங்குறிச்சி வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாநகர போலீஸ் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
    • கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் கலங்கரை விளக்கம் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில், காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பயன்படுத்த இயலாது. இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் 6-ந்தேதி (நாளை) முதல் ஒரு வருடத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    * லூப் ரோடு மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவு சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் 'யூ-டர்ன்' செய்து கலங்கரை விளக்கம் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * போர் நினைவுச்சின்னத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லவிரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் 'யூ-டர்ன்' செய்து இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

    வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ரிசர்வ் வங்கி இணைப்பு சாலை, பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம்.
    • ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம்.

    பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிரகாசம் சாலையில் (பிராட்வே சாலை) என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு முதல் தாதா முத்தியப்பன் தெரு சந்திப்பு வரையிலான பகுதி தற்காலிகமாக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி என்.எஸ்.சி போஸ் சாலையில் (பிராட்வே சந்திப்பு) இருந்து பிரகாசம் சாலை வழியாக ஸ்டான்லி ரவுண்டானா நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நாளை (22-ந்தேதி) முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரை தடை செய்யப்படுகிறது.

    என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் எஸ்பிளனேடு சாலைகளில் வரும் வாகனங்கள் ஸ்டான்லி ரவுண்டானா செல்வதற்கு குறளகம் சந்திப்பு என்.எஸ்.சி. போஸ் சாலை பாரீஸ் சந்திப்பு இடது புறம் திரும்பி ராஜாஜி சாலை - இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம். முத்துசாமி சாலையில் வரும் வாகனங்கள் முத்துசாமி சாலை ராஜா அண்ணாமலை மன்றம் வடக்கு கோட்டை பக்க சாலை, ரிசர்வ் வங்கி இணைப்பு சாலை, பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம்.

    ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம். கொத்தவால்சாவடிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கம் போல் அனுமதிக்கப்படும். ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து பிரகாசம் சாலை- அண்ணா பிள்ளை தெரு வழியாக கொத்தவால் சாவடிக்கு உள்ளே செல்லலாம். அண்ணா பிள்ளை தெரு- டேவிட்சன் தெரு தாதா முத்தியப்பன் தெரு பிரகாசம் சாலை வழியாக கொத்தவால் சாவயை விட்டு வெளியே செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈ.வெ.ரா சாலையில் சென்டிரல் மற்றும் ஈ.வி.கே. சம்பத் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை.
    • எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. சாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஈ.வெ.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலைதுறையினர் சாலையில் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணியில் ஈடுபட உள்ளனர். எனவே 3-ந்தேதி (நாளை) இரவு 10 மணி முதல் வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை இப்பகுதிகளை சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஈ.வெ.ரா சாலையில் சென்டிரல் மற்றும் ஈ.வி.கே. சம்பத் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல தடை ஏதும் இல்லை. எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. சாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது. அத்தகைய வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பால டாப் சிக்னல் சந்திப்பிலிருந்து (தாளமுத்து நடராஜர் மாளிகை சந்திப்பு) இடதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் சாலை, உடுப்பி பாயின்ட் வலதுபுறம் திரும்பி, நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாலாஜா சாலை வழியாக வருவோர் நேரடியாக அண்ணா சிலை அருகே வலது புறமாக திரும்பி சென்ட்ரல் நோக்கி செல்ல முடியாது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. கட்டிடத்தை தாண்டியதும் தாராபூர் டவர் எதிரே இடது புறமாக திருப்பி விடப்பட்டுள்ளன.

    இந்த வாகனங்கள் இடது புறத்தில் உள்ள டேம்ஸ் சாலை வழியாக சென்று வலது புறத்தில் இருக்கும் பிளாக்கர்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலையை சென்றடையும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுப்பேட்டை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இந்த வழியேதான் அண்ணா சாலையை சென்றடைய முடியும் என்பதால் இருபுறமும் வரும் வாகனங்கள் ஒரே இடத்தில் சந்தித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாலாஜா சாலை வழியாக வருவோர் நேரடியாக அண்ணா சிலை அருகே வலது புறமாக திரும்பி சென்ட்ரல் நோக்கி செல்ல முடியாது. இந்த வழியாக வரும் வாகனங்கள் அண்ணா சிலை சந்திப்பில் இடது புறம் திரும்பி 50 மீட்டர் தூரத்திலேயே யூ திருப்பம் போட்டு சிம்சன் நோக்கி செல்கின்றன.

    இதுபோன்ற சூழலில் சிம்சன் வழியாக வருவோர், நேராக எல்.ஐ.சி. செல்வதிலும் வாலாஜா சாலைக்கு இடது புறம் திரும்புவதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

    தேவி தியேட்டர் வளாகத்தில் இருந்து எழும்பூர் அல்லது சென்ட்ரல் நோக்கி செல்பவர்கள் அண்ணா சாலையை குறுக்காக கடந்தால்தான் தாராபூர் டவர் அருகே திரும்ப முடியும். அண்ணா சாலையில் வாகனங்கள் சென்று கொண்டே இருப்பதால் இந்த சந்திப்பில் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிலையே காணப்படுகிறது.

    சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த போக்குவரத்து மாற்றங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் இதுபற்றி வாகன ஓட்டிகளுடன் ஆலோசித்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    ×