search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon running"

    • விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடக்கிறது.
    • சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி மாளிகை அருகே நாளை (25-ந்தேதி) காலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடக்கிறது. இதில் 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    போலீஸ் முன்னாள் ஐ.ஜி. சொக்கலிங்கம், ஜேப்பியார் பல்கலைக் கழக இயக்குனர் ரெஜினா, துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஐ.ஐயப்பன் ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்கள். சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    • மேயர் ஆர்.பிரியா சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    சென்னை:

    சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர், இந்த மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா பரிசுகளை வழங்கினார். இதில், ஆண்கள் பிரிவில் முதலிடம் சச்சின் பிரிய தர்ஷன், இடண்டாமிடம் தட்சிணாமூர்த்தி, மூன்றா மிடம் ஜோஷ்வா, பெண்கள் பிரிவில் முதலிடம் செல்வி லாவன்யா, இரண்டாமிடம் புனிதா, மூன்றா மிடம் செல்வி ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    மேலும், மாணவர்களில் கோபிநாத், கிஷோர் குமார், ஹரிஷ், ஹரிபாலன், மாணவிகளில் அபிநயா, பாபி ஹோலா, நிஷா ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த ரெட்ரன் மாரத்தானில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய அடிப்படை அறிவு அதிகப்படுத்துதல், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிர்த்தல், இளைஞர்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாலியல் நடத்தையை ஊக்குவித்தல், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்று தொடர்பான சேவைகளை ஊக்குவித்தல், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவையாகும். இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்

    வேலூர்:

    வேலூரில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டும் எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் இன்று நடந்தது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்த னியாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் கிரீன் சர்கிள், மீன் மார்கெட், கோட்டை சுற்றுசாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று நேதாஜி மைதானத்தில் முடித்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி உள்ளிட்டோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடந்தது
    • எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    காலை கிரிவலப் பாதை அண்ணா ஆர்ச் முதல் காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபம் வரை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இதனை திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை நினைவு பரிசாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக போதைக்கு அடிமை ஆகாமல் இருப்பது குறித்தும், அதுக்கு அடிமையானவர்களை போதையில் இருந்து மீட்டெடுக்கும் வகையிலும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலூர் கோட்டை அருகிலிருந்து வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், பணியாளர்கள் ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள், பொதுமக்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம், ைசக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் வேலூர் சரக டி.ஐஜி முத்துசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், எஸ்.பி. ராஜேஷ் கண்ணா, பல்க்கலைகழக பதிவாளர் விஜயராகவன், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் மாரத்தான் போட்டி வேலூரில் துவங்கி காட்பாடி பிரம்மபுரத்தில் நிறைவு பெற்றது.

    சைக்கிள் போட்டி வேலூரில் தொடங்கி சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நிறைவுபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.
    • பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42 கிமீ, 32 கிமீ, 21 கிமீ மற்றும் 10 கிமீ) மாரத்தான் ஓட்டம் நாளை (8-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை சென்றடையும்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    * அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

    * போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹைரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * மத்திய கைலாசிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

    * பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    * மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல். பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.

    சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும்.

    அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்
    • கீரமங்கலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21 கி.மீ. தொலைவிளான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கீரமங்கலம் சிவன் கோவில் அருகே தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். அங்கிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், நகரம், குளமங்கலம் வழியாக மீண்டும் கீரமங்கலத்தை அடைந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 8 வயதுக்கும் மேற்பட்ட 400 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • 1000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் 91-வது பிறந்தநாளை முன்னிட்டும், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்துல் கலாம் கனவு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

    மாரத்தான் போட்டியானது 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூரம் ஆகிய இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1000த்திற்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    இந்த மாரத்தான் போட்டியானது வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தொடங்கிய அம்மூர், மாந்தாங்கல் முத்துக்கடை ஆகிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், டி.எஸ்.பி பிரபு, ரோட்டரி ஆளுநர் பழனி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், வாலாஜா ஸ்போட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, அப்துல் கரீம் மற்றும் கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    மாரத்தான் ஓட்டத்தில் சாதனை படைத்த மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.வுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். #Marathon #MaSubramanian #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாரத்தான் ஓட்டத்தில் சதம் அடித்து, பெருமிதம் அளித்திடும் சாதனை படைத்திருக்கும் தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனுக்கு எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரிடம் நாம் கற்றுக்கொண்ட கொள்கை நேர்த்தியும், மன உறுதியும், நேர்மையும் தான் நம் எல்லோரையும் எப்போதும் எள்ளளவும் சோர்வின்றி வழி நடத்துகிறது.

    அதில் மா.சுப்பிரமணியன் தனிச்சிறப்புக்குரியவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். காலையில் உடற்பயிற்சி செய்வதை நான் தவறாமல் பின்பற்றி வருகிறேன். நடைப்பயிற்சி மேற்கொள்வதும் இயல்பு. அப்போது என்னுடன் வரக் கூடியவரான மா.சுப்பிரமணியன், இணையாகவும் வேகமாகவும் நடந்து வருபவர். உடற்பயிற்சியால் உடல் நலத்தைப் பேணிக்காப்பதில் அக்கறை உள்ளவர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயினை எதிர்கொண்டு வரும் மா.சுப்பிரமணியன், 2004-ம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி வலது கால் மூட்டு துண்டுகளாக சிதறும் நிலைக்கு ஆளானவர். அதன்பிறகு அறுவை சிகிச்சைகளினால் மீண்டவர்.

    அப்படிப்பட்ட நிலையிலும், மன உறுதி தளராமல் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி முதன் முதலாக 21.1 கி.மீ. தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 18 மாநிலங்களில் நடந்த பல மாரத்தான் போட்டிகளிலும், 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று ஓடியுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் 99 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை பெசன்ட் நகரில் தனது 100-வது மராத்தான் போட்டியை நிறைவு செய்திருப்பது அவருக்கான தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்ல, இளைய தலைமுறைக்கு எந்நாளும் ஊக்கம் தரும் ஏற்றமிகு முயற்சியாகவும் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு மாரத்தான் போட்டியுமே ஏதோ ஒரு சமூக விழிப்புணர்வுக்காகவே நடந்துள்ளது. அதில் நீண்ட தூரம் ஓடுவதன் முலமாக அந்த உணர்வை பொதுமக்களும் பெறச் செய்வதுடன், இளைஞர்களும் தன்னைப் பின் தொடர்ந்து இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் ஊக்கத்தையும் மா.சுப்பிரமணியன் ஏற்படுத்தி இருக்கிறார்.

    பொதுநல நோக்கத்துடன் ஒவ்வொரு முறையும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல கிலோ மீட்டர் தூரம் ஓடி வரும் மா.சுப்பிரமணியன் தனது 100-வது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்திருப்பது, அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் உயிர்த்துடிப்புள்ள சாதனையாகும்.

    மா.சுப்பிரமணியனுக்கு தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், கழக இளைஞர்களும் தமிழ் நாட்டின் இளைய தலைமுறையினரும் தங்கள் உடல் நலனைத் தக்கப்படிப் பேணி, அதனை பொதுநலனுக்கு உரிய முறையில் நெடுங்காலம் பயன்படும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #Marathon #MaSubramanian #MKStalin

    5 ஆண்டுகளில் 100 போட்டிகளில் ஓடி மாரத்தான் ஓட்டத்தில் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார். #Marathon #MaSubramanian

    சென்னை:

    சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் இன்று பெசன்ட்நகரில் நடந்த 21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினார்.

    பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளியில் போட்டி தொடங்கியது. 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி அதே இடத்தில் போட்டியை நிறைவு செய்தனர். இந்த தூரத்தை மா.சுப்பிரமணியன் 2.31 மணியில் ஓடி முடித்தார்.

    மா.சுப்பிரமணியனுக்கு இது 100 வது போட்டி ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருப்பவர். 2004-ல் நடந்த சாலை விபத்தில் கால்  உடைந்தது.

     


    இருப்பினும் தனது மன வலிமையால் 2014 பிப்ரவரி 9-ந்தேதி மாரத்தான் போட்டி ஓட தொடங்கினார். தொடர்ந்து இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டிகளில் ஓடி வருகிறார்.

    5 ஆண்டுகளில் 25 முறை 21.1கி.மீ. தூரம் பங்கேற்று ஓடியதற்காக, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற 21.1 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு 29-வது மாரத்தான் போட்டியை முடித்து ஆசியா புக் ஆப் ரெக்கார்டு 50-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்து, வேல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டியால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார்.

     


    மேலும் இண்டர் நே‌ஷனல் கோல்டன் டிஸ்க் விருதை வேல்டு ரெக்கார்டு யூனியன் வழங்கியது. வேல்டு கிங் டாப் ரெக்கார்டு 2018 எனும் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

    இம்மாரத்தான் சாதனைகளைப் பாராட்டி திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    மாரத்தான் போட்டிகளில் சாதனை படைத்த மா.சுப்பிரமணியனுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். #Marathon #MaSubramanian

    ×