search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்- மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
    X

    எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்- மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

    • மேயர் ஆர்.பிரியா சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    சென்னை:

    சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர், இந்த மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா பரிசுகளை வழங்கினார். இதில், ஆண்கள் பிரிவில் முதலிடம் சச்சின் பிரிய தர்ஷன், இடண்டாமிடம் தட்சிணாமூர்த்தி, மூன்றா மிடம் ஜோஷ்வா, பெண்கள் பிரிவில் முதலிடம் செல்வி லாவன்யா, இரண்டாமிடம் புனிதா, மூன்றா மிடம் செல்வி ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    மேலும், மாணவர்களில் கோபிநாத், கிஷோர் குமார், ஹரிஷ், ஹரிபாலன், மாணவிகளில் அபிநயா, பாபி ஹோலா, நிஷா ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த ரெட்ரன் மாரத்தானில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய அடிப்படை அறிவு அதிகப்படுத்துதல், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிர்த்தல், இளைஞர்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாலியல் நடத்தையை ஊக்குவித்தல், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்று தொடர்பான சேவைகளை ஊக்குவித்தல், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவையாகும். இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×