search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
    X

    எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்

    வேலூர்:

    வேலூரில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டும் எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் இன்று நடந்தது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்த னியாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் கிரீன் சர்கிள், மீன் மார்கெட், கோட்டை சுற்றுசாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று நேதாஜி மைதானத்தில் முடித்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி உள்ளிட்டோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×