search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
    X

    பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

    • மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது
    • பொதுமக்கள் ஒத்து ழைப்பு அளிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சா லையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை சாவடி வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது.

    இந்த பணியை நெடுஞ்சாலை, மின் சாரத்துறையினர் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள உள்ள னர். இப்பணிகள் முடியும் காலமான சுமார் 15 நாட்க ளுக்கு இந்த சாலையில்போக் குவரத்து மாற்றம் செய்யப்ப டுகிறது.

    குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக வேலூர் செல்லும் வாகனங் கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வடுகன் தாங்கல், காட்பாடி வழியாக செல்ல வேண்டும்.

    வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 48-ஐ பயன்படுத்தி செதுவாலை, விரிஞ்சி புரம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 75-ஐ அடைந்து வடுகன்தாங்கல் வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.

    குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்லும் வாகனங்கள் குடியாத்தத்தில் இருந்து மேல்பட்டி சாலையில் உள்ளி கூட் ரோடு சந்திப்பை அடைந்து ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மார்க்கத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங் கள் மாதனூர் - உள்ளி கூட்ரோடு மும்முனை சந்திப்பு வழியாக மேல்பட்டி சாலை வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படும். மற்றநேரங்களில் தற் போது உள்ளபடி அதே சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். கனரக வாகனங்கள் பள்ளிகொண்டாவிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உள்ள தாலும், மழைநீர் வடிகால் வாய்கள் நீண்ட காலத்துக்கு பயன்படுத்த பணிகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதால் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தவிர்க்க முடியாது. போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×