search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்
    X

    கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

    • சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கோவை

    கோவை மேட்டுப்பா ளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக, மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் மனை யியல் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதி பார்க் ரோடு ஜி.சி.டி., தடாகம் ரோடு, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.

    கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக கோவிலுக்கு வரும் வாகனங்கள் பாரதிபார்க் ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி ராஜா அண்ணாமலை ரோடு வழியாக, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில், வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.

    மேட்டுப்பாளையம், துடி யலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சங்கனூர் சோதனைச் சாவடியில் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகர் புறக்காவல் நிலையம், தயிர் இட்டேரி, சிவானந்தா காலனி வழியாக நகருக்குள் வரலாம்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம், அதற்கு அருகில் உள்ள பூண்டு குடோன் வாகனம் நிறுத்தும் இடங்களிலும், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஹிப்கோ மோட்டார் கம்பெனி வளாகத்திலும் நிறுத்திவிட்டு, கோவிலுக்கு செல்லலாம். மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையத்தை தாண்டி எந்த வாகனங்களும் செல்ல இயலாது.

    காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மற்றும் இதர பஸ்கள் மற்றும் வாகனங்கள், ஜி.பி., சிக்னல். சத்தி ரோடு, நம்பர் 3 பஸ் நிலையம் கணபதி, சங்கனூர் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.காந்திபுரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், கிராஸ்கட் ரோடு,சிந்தாமணி சந்திப்பு, ஹோம் சைன்ஸ் வழியாக சென்று ராஜா அண்ணாமலை ரோட்டில் வலது புறம் திரும்பி அழகேசன் ரோட்டில் உள்ள, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லலாம்.தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கோவில்மேடு சோதனைச் சாவடி, அவிலாகான்வென்ட் பள்ளி, ஜி.சி.டி., லாலிரோடு வழியாக நகருக்குள் வரலாம்.

    தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவிலாகான் வென்ட் பள்ளியில் இருந்து இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆர்., ரோடில் எஸ்.பி. ஐ.,ல் வலது புறம் திரும்பி ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம். போக்குவரத்து மாற்றத்தி ற்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். சாலையோர பார்க்கிங் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்து வதற்காக ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ள இடங்களி ல் மட்டும், வாகனங்களை நிறுத்த அனுமதி க்கப்பட்டுள்ளது.பொதுமக்கள், போக்குவ ரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும், பக்தர்களும் ஒத்துழைப்பு கொடுத்து, பயணத்தை விரைவாக மேற்கொள்ள, கோவை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×