என் மலர்
நீங்கள் தேடியது "கோவை"
- கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோவை:
இந்தியாவின் பல்வேறு நகரங்களில், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் 2 போட்டிகளும் நடைபெற்று என தினமும் போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக நேற்று காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வந்ததை பார்த்தும் அந்த கும்பல் அதிர்ச்சியாகியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்றனர்.
போலீசார் உடனடியாக 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காட்டூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 12 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தினமும் நடக்கும் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும், இவ்வளவு ரன் அடிக்கும், என ஒரு போட்டிக்கு இவர்கள் ரூ.100-ல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது.
- ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
சூலூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களுடனான நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று முதல் விசைத்தறியாளர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
சோமனூரில் நடந்த இந்த போராட்டத்தில், சோமனூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன், சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது. இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி, முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வி.பி கந்தசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறி உரிமையாளர்களுக்கு விரைவில் பிரச்சினையை முடித்து தர வேண்டும். தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் விசைத்தறி தொழில் அழிந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசைத்தறி தொழில் நசிந்து போகாமல் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இன்று 2-வது நாளாக விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டத்தால், ரூ.600 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசும், ஜவுளி உற்பத்தியாளர்களும் இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால், தொழில் மேலும் பாதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
- படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
- மங்களூரில் இருந்து இன்று 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றும் வருகிற 17-ந்தேதியும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை (11-ந்தேதி) மற்றும் 18-ந்தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06090) மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதில், படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.
கொல்லம்
சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06113) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.10-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06114) மறுநாள் காலை 11.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்த
னூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரா வழியாக இயக்கப்படும்.
போத்தனூா்
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.30-க்கு கோவையை அடுத்த போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 14-ந்தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து 11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45-க்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06186) மறுநாள் பகல் 12.15-க்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரி
புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கப்படும்.
மங்களூரு - திருவனந்தபுரம்
மங்களூரில் இருந்து இன்று (10-ந்தேதி), 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06051) மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (11-ந்தேதி), 18 ஆகிய தேதிகளில் மாலை 6.40-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06052) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, ஷொரனூா், திருச்சூா், எா்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர்.
கோவை:
சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலை பகுதிகளில் 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கையகப்படுத்த தேவையான நிலங்கள் சர்வே செய்வது, நிலத்திற்கு கீழ் உள்ள சேவைகள் என்னென்ன என்பதை அறிவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.
இந்த பணியை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் தொடங்கியுள்ளது.
மெட்ரோ ரெயில் இயங்க உள்ள 2 வழித்தடங்களிலும் நிலத்துக்கு கீழ் உள்ள பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் கியாஸ் குழாய்கள், மின்புதை வடம், தொலை தொடர்பு வயர்கள் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குழுவினர் சரியாக பணிகளை செய்கிறார்களா என, மெட்ரோ ரெயில் நிறுவன துணை மேலாளர் கோகுல், உதவி மேலாளர் வினோத்குமார் ஆகியோர் கோவையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- 30-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது
- 16 வகை திரவியங்களான அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.
வடவள்ளி,
கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு.
இந்த நிலையில் கோவிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. முன்னதாக விழா நாளான இன்று காலை 5. 30 மணிக்கு கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு உற்சவருக்கு 16 வகை திரவியங்களான பால், நெய், மஞ்சள், உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.
பச்சை பட்டு உடுத்தி ராஜா அலங்காரத்தில் உச்சவர் காட்சியாளித்தார். மேலும் விழா நிகழ்வாக 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. 8.30 மணிக்கு புனித மண் எடுத்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து சுவாமிக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
முன் மண்டபத்தில் மோசிக வாகனத்தில் விநாயகரும் , தங்கயானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமியும், வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகுவும், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து 9 மணிக்கு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல காலை மாலை யாகம் வரும் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைப்பெகிறது.
இதனை தொடர்ந்து வரும் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. மறுநாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை திருக்கால்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
- ெரயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்?
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை இருகூர்- பீளமேடு செங்களியப்பன் நகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர் ரோஷ் நிற சட்டை வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். பின்னர் போலீசார் ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ெரயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ெரயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- இவற்றின் மதிப்பு ரூ.750 கோடி ஆகும்.
- தீபாவளி பண்டிகைக்கு சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
கோவை,
தொழில் நகரமான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாக தொழில்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பா ளர்கள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆடைகள், இனிப்புவகை கள், பட்டாசு உள்ளிட்ட வற்றுக்காக செலவு செய்தாலும் மக்கள் பலர் தங்க நகைகள் வாங்குதற்கு என தனியாக சிறிது நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
ெகாரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் மந்தமாக காணப்பட்ட விற்பனை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்தது.அக்டோபர் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 23-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 3 நாட்களில் மட்டும் தோராயமாக 1.5 டன் எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மதிப்பு ரூ.750 கோடி ஆகும். மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மாப்பிள்ளை மோதிரம், பெண்களுக்கான மோதிரங்கள், தோடு உள்ளிட்ட சிறிய வகை தங்க நகைகள் தான் அதிகம். இருப்பினும் இத்தகைய நகைகளை அதிக மக்கள் வாங்கியதால் விற்பனை மிக சிறப்பாக இருந்தது.
தீபாவளி கொண்டா டப்பட்டதால் ஞாயிற்று கிழமை அனைத்து நகை கடைகளும் இரவு வரை தொடர்ந்து செயல்பட்டது. நகை விற்பனையை பொருத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் 10 நாட்கள் வரை தொடர்ந்து வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
தற்போது மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதித்துள்ளது. பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு 5 சதவீத வரியை குறைத்து 10 சதவீதமாக நடைமுறைபடுத்தினால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் தரும். மகிழ்ச்சி அடைவார்கள்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சென்னியூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரும் 30 வயது வாலிபரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வெளியே செல்லும் நேரத்தில் இளம்பெண் வாலிபரை வீட்டுக்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவ காரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவிைய கண்டித்தார். மேலும் வாலிபருடனான கள்ளக்காதலை கைவிடு மாறு கூறினார்.ஆனால் இளம்பெண் தனது கள்ளக்காதலை ெதாடர்ந்து வந்தார்.
சம்பவத்தன்று இது சம்பந்தமாக கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணவர் அங்கு இருந்த அரிவாளை எடுத்து இளம்பெண்ணின் நடு தலை மற்றும் கைகளில் வெட்டினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து வடக்கிப்பா ளையம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கதவை திறக்க நேரம் ஆனதால் ஆத்திரம் அடைந்தார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள செங்கப்ப வீதியை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (வயது 58). விக்ரமன் தினசரி மது குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்க மாக பூட்டி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு பின்னர் சுசிலா கதவை திறந்தார்.
நீண்ட நேரத்துக்கு பின்னர் கதவை திறந்ததால் ஆத்திரம் அடைந்த விக்ரமன் தனது மனைவியை தகாத வார்த்தைகள் பேசி தாக்கினார்.
பின்னர் அங்கு இருந்த கத்தியை எடுத்து சுசிலாவின் வலது கையில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்கு விக்ரமன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சுசிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய விக்ரமனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வாலிபர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
- பெரியநாயக்கன்பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது குப்பிச்சிபாளையம் அருகே உள்ள வளம் மீட்பு பூங்கா குப்பை கிடங்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கார்கள் இருந்தது. இதனை பார்த்த போலீசார் அதன் அருகே சென்று அங்கிருந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த காரை பரிசோதனை செய்தனர். அதில் காரில் மூட்டை மூட்டையாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான 544 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்த முகமது யூசப் (வயது 31), தாசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜிதின் (42), கருமமேடு தாமஸ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் தாஜிதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டன் குட்கா கடத்தி வந்த கும்பலில் இருந்து தப்பிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர்கள் குட்காவை வடநாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) என்பவர் மோட்டார் சைக்கிளில் கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னாள் கணுவாய்ப்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் நடத்திய சோதனையில் கருவேப்பிலை மூட்டையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 132 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 6 பேரை அழைத்து வந்து தாக்கினார்.
- வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசம்பாளையம் வில்லீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அதில் ஒருவர் அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை வினோத்குமார் வெளியே சென்று செல்போனில் பேசும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் மேலும் 6 பேரை அழைத்து வந்து வினோத்குமாரை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த வினோத்குமார் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரைத் தேடி வந்தனர். அதில் சின்னத் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.