என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றப்பத்திரிகை தாக்கல்"

    • கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
    • தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ந் தேதி காரில் காதலனுடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் (வயது 30), கார்த்திக் (21), குணா (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது அவர்களது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 3 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    பி.எஸ்.என். சட்டத்தின் கீழ் கடத்தல், கொலை மிரட்டல், கூட்டுச்சதி, கூட்டு பாலியல் பலாத்காரம், தடயங்களை மறைத்தல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், வழிப்பறி உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சம்பவம் நடந்து 29-வது நாளான நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணையானது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ளது. வழக்கு விசாரணை விரைவில் முடிந்து குற்றவாளிகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
    • சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் புதிய குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது.

    ஊழல் வழக்கில் ஒரு விசாரணை அமைப்பு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில், ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றவாளியாக குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை முக்கிய சதிகாரர் என்று அமலாக்கத்துறை குறிப்பிடும் என்று கூறப்படுகிறது.

    கெஜ்ரிவாலுக்கு இடைக் கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    நாள் முழுவதும் விசாரணை நடந்தால் குற்றப் பத்திரிகை, நாளை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
    • ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    சுமார் 471 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.

    இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜாமின் வழங்கியதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மறுசீராய்வு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அமைச்சர் செந்திநல் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

    இதில், அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், உதவியாளராக இருந்த சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    ×