search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aam Aadmi Party"

    • ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார்
    • ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்

    முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய், தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் 2 தகவல்களை சுனிதாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அது தொடர்பாக டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் சாசனத்தை காக்கும் தினமாகவும் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

    மேலும், நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் பேசி வருவதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இதனை அறிவித்துள்ளது.

    • நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கருத்து.
    • ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தலைகுனிய வைக்க பாஜக எந்த நிலைக்கும் போகும், ஆனால் நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    எக்ஸ் பக்கத்தில் ஆம் ஆத்மி தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில்," அமலாக்கத்துறை டெல்லியின் மகன் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை அடைந்தது. டெல்லி உள்பட இன்று முழு நாடும் யாருடைய ஆதரவில் நிற்கிறதோ அந்த மலையை பாஜக நகர்த்த முயற்சிக்கிறது. டெல்லி மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள்"

    #IstandWithKejriwal என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, "அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக எந்த மட்டத்திற்கும் கீழே இறங்கும். டெல்லி உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். உங்களின் இந்த சர்வாதிகாரம் நீடிக்காது. ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு கெஜ்ரிவால் வெளிப்படுவார்" என பதிவிடப்பட்டிருந்தது.

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், "கெஜ்ரிவாலின் சித்தாந்தத்தை பாஜகவின் அரசியல் அணியால் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் ஆம் ஆத்மியால் மட்டுமே பாஜகவைத் தடுக்க முடியும். சித்தாந்தத்தை ஒருபோதும் அடக்க முடியாது" என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறது.
    • சில கட்சிகள் பெண்களுக்கு பதவி கொடுத்து விட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக சொல்கின்றன.

    புதுடெல்லி:

    டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று சமீபத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது:-

    டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதுபற்றி பெண்கள் தங்கள் குடும்பத்தாரிடம் எடுத்து சொல்லி ஆம்ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும்.

    பெண்களுக்கு அதிகாரம் தருவதாக நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள். ஆனால் நாங்கள் இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். இலவச பஸ் பயணம் கொடுத்துள்ளோம். இப்போது மாதம் ரூ.1000 கொடுக்க இருக்கிறோம்.


    உங்கள் வீட்டு ஆண்கள் மோடி பெயரை உச்சரித்தால் அதை கண்டியுங்கள். மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்கள் கணவர் தெரிவித்தால் அவருக்கு இரவு சாப்பாடு கொடுக்காதீர்கள். பட்டினி போடுங்கள்.

    அவரிடம் ஆம்ஆத்மி கொண்டுவந்துள்ள பெண்கள் நலத்திட்டங்களை விளக்கமாக எடுத்து சொல்லுங்கள். சில கட்சிகள் பெண்களுக்கு பதவி கொடுத்து விட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக சொல்கின்றன.

    ஆனால் உண்மையான அதிகாரம் ஆம்ஆத்மியிடம் கிடைக்கிறது என்பதை சொல்லுங்கள். மாதம் ரூ.1000 கிடைப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் உயருவதையும் நீங்கள் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    டெல்லி அரசு அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 கொடுக்கும் இந்த திட்டம் உலகில் பெண்களை அதிகாரமாக மாற்றும் மிகப்பெரிய திட்டமாக அமையும்.

    இவ்வாறு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

    • ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ளது.
    • ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    'இந்தியா' கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ளது. அதே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அரவிந்த்ர்சிங் லவ்லி கூறியதாவது:-

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகி வருகிறது. அதே சமயத்தில், ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
    • வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 ஆகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷில் குமார் குப்தா, சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோரின் பதவிக் காலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ளதால் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் வந்து மனு தாக்கல் செ ய்தார்.

    வருகிற 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் என 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே, டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசி வருவதாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி தலைமையிலான பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பேசியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது.
    • ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

    ஆம் ஆத்மி அரசு மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படும் சூழல் ஆகியவற்றால், ஆம் ஆத்மி கட்சி, 'இந்தியா' கூட்டணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழல் வழக்குகள், 'இந்தியா' கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது. பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

    ஆனால், காங்கிரஸ் உட்பட, 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுக்கவில்லை. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக கடுமையாகக் குரல் எழுப்பவில்லை.

    அதாவது, ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அதேசமயம், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியை கூட்டணி யில் இருந்து விலக்கவும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. துப்புரவும் முக்கியம். அதற்கு துடைப்பமும் முக்கியமாச்சே! என்ற கதையில் உள்ளது.

    • ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
    • அந்த கட்சியை ஏன் குற்றவாளியாக குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் உருவாக்கிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

    நேற்று இவ்வழக்கு தொடர்பாக ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் மதுபான கொளகை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி கட்சி பெயரை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுபான கொள்கையால் ஆம்ஆத்மி கட்சி பலன் அடைந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. அந்த கட்சியை ஏன் குற்றவாளியாக குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதைடுத்து டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் ஆம்ஆத்மி கட்சியை குற்றம் சாட்ட முடியுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது.

    • ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
    • யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியல் வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த தரவு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்திருந்தது.

    இதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்குள்ள பிரஸ் காலனியில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் "ஏன்? யார்? எங்கே? 9765 காணவில்லை" என்ற கேள்விகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம், காணாமல் போன பெண்கள் குறித்து பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி ஊடக குழு தலைவர் நவாப் கேட்டுக் கொண்டார்.

    மேலும் அவர்," ஏன் இது நடந்தது, உங்கள் அமைப்பில் உள்ள குறைபாடு என்ன என்று நாங்கள் கேட்கிறோம்? இந்த 9,765 பேர் யார், அவர்கள் காணாமல் போனதற்குக் என்ன காரணம்? காணாமல் போன பெண்கள் எங்கே? காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஏதாவது செய்கிறீர்களா?" என்று கேட்டார்.

    யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீர் பெண்களின் கவுரவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் துறை ஏதேனும் உள்ளதா? இது அரசியல் பிரச்சினை அல்ல, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பற்றியது என்று கூறினார்.

    • எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது.
    • மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

    எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது. இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், பெங்களூருவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என எம்.பி. ராகவ் சாதா அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவசர சட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்க போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
    • ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறிதது கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார். எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது.

    இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதை மறைமுகமாக தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது. நேரடியாகவோ அல்லது கவர்னர்கள் மூலமாகவோ இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ் இதை எதிர்த்துள்ளது. தொடர்ந்து எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்ட முயற்சி மேற்கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
    • காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கும் நிலையில், டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும், பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை அணுகி, அவசரச் சட்டத்திற்கு எதிராக அவர்களின் ஆதரவைத் திரட்டவும், இந்த அவசர சட்டத்தை பாராளுமன்றம் வழியாக சட்டமாக்கப்படுவதை தடுக்கவும் அர்விந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த சட்டம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், 'டெல்லியின் நிர்வாக சேவைகள் குறித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான எங்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்றால், நாளை பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்போம்' என ஆம் ஆத்மி கட்சி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாளைய கூட்டத்தின்போது காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதுவரை காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காததால், ஆம் ஆத்மி கட்சி இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

    ×