என் மலர்
நீங்கள் தேடியது "Enforcement Department"
- ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது.
- மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
பிரபல ஜேபி குழு (Jaypee Group) நிர்வாக இயக்குனர் மனோஜ் கவுர், ஜேபி இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
இந்நிலையில், மனோஜ் கவுர் இன்று அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது, அதன் பிறகு பல சட்ட சிக்கல்களை ஜேபி நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.
மேலும், மனோஜ் கவர் பலரிடம் வீடு வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு வீடு வழங்காமல் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, இந்த கைது நடவடிக்கை ஜேபி நிறுவனத்தின் நிதி மோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் டெல்லி, நொய்டா, காஜியாபாத் உள்பட மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இதில், சுமார் ரூ.1.70 கோடி பணம், ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து ஆணவங்கள் உள்ளிட்டவையை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த நிலையில், நீண்டகாலமாக நடந்து வரும் ஜேபி குழுமத்தின் நிதி மோசடி விசாரணையின் கீழ், மனோஜ் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மற்றுமொரு சாட்சி.
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாட்டையே அதிர செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மற்றுமொரு சாட்சி.
நண்பரை அரிவாளால் வெட்டி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாட்டையே அதிர செய்துள்ளது.
தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்புதர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
அமலாக்கத்துறையிடம் இருந்து அமைச்சர்களை பாதுகாக்கவே இரும்புக்கரம் பயன்படுகிறது.
கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்தால் தமிழ்நாட்டில் காவல் துறை இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.
- முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லியில் ஆம ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரப் பரத்வாஜின் இல்லம் உட்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.
ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவமனை கட்டுமானத் திட்டங்களில் முறைகேடுகள் மற்றும் பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
2018-19 காலகட்டத்தில், 11 புதிய மருத்துவமனைகள் மற்றும் 13 ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளின் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக 2024 இல் அப்போதைய பாஜக எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
- இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"
உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.
இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 10 ஆண்டில் மொத்தம் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- இந்த 193 பேரில் 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் பாராளுமன்றத்தில் அமலாக்கத்துறை பற்றி கேள்வி எழுப்பினார்.
அதில், கடந்த பத்து ஆண்டுகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? சமீப ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் அதிகரித்துள்ளனவா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பாக இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 193 நபர்களில் மொத்தமாக 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
இதில் 01.04.2016 முதல் 31.03.2017 மற்றும் 01.04.2019 முதல் 31.03.2020 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தலா ஒரு நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத்துறை விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஏதேனும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு போதிய தகவல்கள் இல்லை என பதில் அளித்துள்ளார்.
+2
- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
- சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லை:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 45 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை
இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் அமலாக்கப்பிரிவு போலீசார்அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக மொத்தம் 2 குழுக்கள் இன்று அதிகாலை நெல்லை வந்தடைந்த நிலையில், அதில் ஒரு குழு மாநகர போலீஸ் அதிகாரிகளிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டது.
அதன் அடிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அமலாக்கப்பிரிவினருக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த குழு டவுன் கல்லணை தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவர் வீட்டில் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
பண பரிமாற்றம்
இந்த சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சதாம் உசேன் நெல்லையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த குழுவில் சில அதிகாரிகள் பாளை ஆயுதப்படை பின்புறம் உள்ள பெருமாள்புரம் செயின்ட் பால்ஸ் நகரில் ராஜ்குமார் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அமலாக்கத்துறை யின் மற்றொரு குழுவானது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளனர்.
- சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மும்பை அமலாக்கத்துறையினர் விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை, மும்பை, பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் நடந்த சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்றத்தத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 வங்கி கணக்குகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
- வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேவசம் போர்டு மந்திரியாக இருந்த வர் சிவகுமார்.
மந்திரி பதவியில் இருந்தபோது சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிவகுமார் வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அப்போது சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.
இதே குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.
- அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
சென்னை:
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மேலாளர் பி.கே.பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பணியை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு 12.12.2012 அன்று உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.
அதற்குப் பிறகு 12ஏஏ, 80ஜி, சிஎஸ்.ஆர். அங்கீகாரமும் முறையாகப் பெறப்பட்டது. அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள், தானியங்கிக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், அரசு குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், அவசர ஊர்தி சேவை நடமாடும் நூலகம், மக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் புதுப்பித்தல் போன்ற பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறது.
அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும், அறக்கட்டளையின் வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப்பணிகளுக்கான வரவு- செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகின்றோம்.
அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் 27.05.2023 அன்று வெளிவந்த பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்ப டுகிறது. ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளைப் போல், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு, எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.
மேலும் அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணியாற்றுகிறது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் இஸ்வர்லால் ஜெயின். இவர் சரத்பவாரின் உதவியாளர் ஆவார்.
வங்கியில் ரூ.353 கோடி கடன் வாங்கி விட்டு அதை செலுத்தாமல் மோடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி.யான இஸ்வர்லால் ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஜல்கான், நாசிக், தானே ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 39 கிலோ தங்க வைர நகைகள் மற்றும் ரூ.1.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- முறையாக பில்கள் போடவில்லை என புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.
மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
- சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
'அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது, தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் அனுப்பப்பட்ட பணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையும் அவரது கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வும் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன. அவருக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாதேவ் சூதாட்டச் செயலியால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம், பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பகிரப்பட்டதாக அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.15.59 கோடியை சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.






