search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistant"

    • சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.

    இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் இஸ்வர்லால் ஜெயின். இவர் சரத்பவாரின் உதவியாளர் ஆவார்.

    வங்கியில் ரூ.353 கோடி கடன் வாங்கி விட்டு அதை செலுத்தாமல் மோடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி.யான இஸ்வர்லால் ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஜல்கான், நாசிக், தானே ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 39 கிலோ தங்க வைர நகைகள் மற்றும் ரூ.1.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    • வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.
    • போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த பள்ளியில் உதவியாளராக இருப்பவர் சத்யா ராவ் (வயது 40). சிறுமி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் சத்யா ராவ் வசித்து வருகிறார்.

    இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருவதால் மாணவிக்கு பாடம் கற்றுக் கொடுக்கவும், ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கவும் சத்யா ரா வ் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

    மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை சத்யா ராவ் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.

    வீட்டில் அவரது பெற்றோர் இருக்கும் நேரத்தில் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    மேலும் மாணவியின் நிர்வாண வீடியோவை தனது நண்பர்கள் 3 பேருக்கு அனுப்பி வைத்தார். அவர்களும் வீடியோவை காட்டி மாணவியை பணிய வைத்து கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    கடந்த மாதம் 3-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பலமுறை மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    கடந்த 6-ந் தேதி மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனை கண்ட அவரது தாய் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தாயிடம் மாணவி தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தாய் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாராவ் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு சத்யாராவை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.
    • மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக வெளிமுகமை முறையில் 100 எண்ணிக்கையிலான தொழில்நுட்ப உதவியாளர்கள் முற்றிலும் தற்காலிகமாக ஊக்க ஊதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடத்திற்கான கல்வி தகுதிகள் டிப்ளமோ / பொறியியல் படிப்பில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கட்டுமான பணியில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    5 வருடத்திற்கு மேலான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ள உதவி பொறியாளர்கள் / பணி மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ஊதியமுறைகளானவை பயனாளிகளின் வீட்டின் நிலைகளுக்கு ஏற்ப தவணை தொகைகள் விடுவிப்பதன் அடிப்படையில் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    ஒரு வீட்டிற்கான 4 நிலைகளில், ஊக்க த்தொகையாக பேஸ்மண்ட் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், ஜன்னல் மட்டம் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், கூரை மட்டம் நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம், பணி முடிவுற்ற நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம் ஆக கூடுதலாக ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.

    இப்பணிக்காக ஊதியம் ஏதும் தனியாக வழங்கப்பட மாட்டாது.

    நிபந்தனை களானவை, நிலுவையிலுள்ள வீடுகள் "அனைவருக்கும் வீடு" மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு தொழில்நுட்ப உதவியா ளருக்கும் இணைக்கப்படும். பணியில் சேரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலை யளிக்கும் முகமையின் கீழ் வந்ததாக கருதப்படுவர்.

    தனியார் எந்த வகையிலும் அரசுப்பணியில் உரிமை கோர இயலாது. (PMAY(G)) திட்டம் செயலாக்கம் முடிவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

    உரிய கல்விச்சான்று நகல் மற்றும் அனுபவ சான்று நகல் ஆகிய வற்றுடன் விண்ணப்பத்தை நேரடியாகவோ (அ) அஞ்சல் வழியாகவோ நாளை (05-ந் தேதிக்குள்) மேலாளர், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவாரூர் என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கராபுரம் ஊராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு நடந்தது.
    • அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி மாங்குடி கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

    பின்னர் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவர் பாண்டியராஜன் கவுன்சிலர்கள் சங்கரிபாபு, லட்சுமி, நல்லம்மாள், செல்வராணி, பாபு, வள்ளி, ரஞ்சித்குமார், ஆனந்தம், ராமஜெயம், ரேவதி, பாண்டிச்செல்வம் ஆகியோர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முறைப்படி உறுப்பி னர்களுக்கு தெரியப்படு த்தவில்லை என்றும், இதில் சட்ட விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது என்றும், புதிய வீடுகளுக்கான வரை பட அனுமதியில் முறை கேடுகள் தொடருகிறது.

    சொக்கலிங்கபுரத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து பாதை அமைத்து கொடுத்தது தவறானதாகும். வைரவபுரத்தில் கோவில் அருகே இருந்த நாடக மேடையை கள ஆய்வு மேற்கொள்ளாமலும் மன்ற அனுமதி இல்லாமலும் இடிக்கப்பட்டது என்றும் பல்வேறு காரணங்களை கூறி வெளிநடப்பு செய்தனர்.

    அதை மனுவாக கலெக்டருக்கும் அனுப்பி வைத்தனர்.கலெக்டர் உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், சங்கரா புரம் ஊராட்சி அலுவல கத்தில் ஆய்வு செய்தார்.

    அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோசப் அருள்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    உதவி இயக்குநர் குமார் கூறுகையில், கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்துள்ளேன். புகார் அளித்தவர்களிடம் அதற்கான ஆதாரங்களை கேட்டுள்ளேன்.

    வருவாய் கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டபிறகு எனது அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிப்பேன் என்றார்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடியின் ஆதரவு கவுன்சிலர்கள் கூறுகையில், பொதுமக்களின் வேண்டு கோளின் பேரிலேயே சொக்கலிங்கம் நகரில் பூங்கா இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.

    வைரவபுரம் நாடக மேடை பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து இருந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் ரேசன் கடைகட்டுவதற்காக அப்புறப்படுத்தப்பட்டது.

    கட்டிட வரைபட அனுமதி அவ்வப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அனுமதி வழங்குவது வழக்கம். துணை தலைவர் மீது கடந்த காலங்களில் உள்ள புகாரை உதவி இயக்குநரிடம் மனுவாக அளித்துள்ளோம் என்றனர்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி கூறுகையில், நான் பதவியேற்று சில நாட்கள்தான் ஆகிறது. இன்னும் 1½ வருடங்களே உள்ள நிலையில் துணை தலைவர் மற்றும் சில உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மக்கள் நல பணிகளை செய்ய முடியவில்லை.பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    • கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக கார்த்திகேயன் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    • தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக ஜெயலெட்சுமி பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 22 தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவிடைமருதூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஜானகிராமன், பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றி வந்த தாசில்தார் புண்ணியமூர்த்தி, கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், திருவிடைமருதூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த சித்ரா, கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கார்த்திகேயன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை அரசு கேபிள் டி.வி. நிறுவன தனி தாசில்தார் முருககுமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாபநாசத்தில் பணியாற்றி வந்த சுஜாதா, தஞ்சை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றிய சிவக்குமார், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுமதி, பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ரீட்டா ஜெர்லின், கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த இளமாருதி, ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தமிழ்ஜெயந்தி, தஞ்சை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    நாகை அலகு முத்திரை கட்டண தனிதாசில்தாராக பணிபுரிந்த கஜேந்திரன், தஞ்சை கலால் மேற்பார்வை அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய மலர்குழலி, பட்டுக்கோட்டை அலகு முத்திரை தான் கட்டண தனி தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த மல்லிகா தேவி, தஞ்சை கலால் அலுவலக மேலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த சுரேஷ், ஒரத்தநாடு தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த ஜெயலெட்சுமி, தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக இருந்த சக்திவேல், தஞ்சை தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன், நாகை அலகு முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் தாசில்தார் தங்கபிரபாகரன், தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளராக பணி மாறுதல் பெற்றுளார்.

    பேராவூரணி தாசில்தார் அலுவலக கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சமத்துவராஜ், தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக தலைமை உதவியாளராக பணியிடை மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் பயிர் வகை விதைச்சான்றுகளை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை, பயறுவகை, நெல், சிறுதானியம் போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், ஆகிய கிராமங்களில் நிலக்கடலை டிஎம்வி-14, கதரி பிஎஸ்ஆர்-2, தரணி ஜிஜேஜி-32, போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விதைப்பண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைசான்று உதவி இயக்குநர் சித்திரைசெல்வி ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி விதை அலுவலர் மோகன்ராஜ் உடன் இருந்தார்.

    நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிக்கு திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    சேலம்:

    இந்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில்   முதன்மை ப்ராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் அசோசியேட்ஸ், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    இளங்கலை, முதுகலை பட்டம் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது மருத்துவம் படித்திருக்க வேண்டும்.  8 வருட அனுபவம் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை மற்றும் கல்வியில் வளர்ச்சி நிறுவனங்கள் அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 

    விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்குமாறு நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி கேட்டுக் கொண்டுள்ளது. 
    சேலத்தில் நடைபெற உள்ள உதவி பேராசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
    சேலம்:

    இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

    இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வுகள் இந்திய அரசின்  தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிப்டுகளாக நடைபெறும். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு காகாபாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுவது வழக்கம்.

     
    இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022-ம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ேதர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  20-ம் தேதி என அறிவித்து இருந்தது.

     இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
     
    இந்த நிலையில்  யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி வரை என   நீட்டித்து உள்ளது.  இந்த  தகவலை   யூ.ஜி.சி. சேர்மன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
    மாங்காடு அருகே பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    மாங்காடு:

    மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், பல்லாவரம் மெயின்ரோட்டில் ஒமேகா இண்டர்நே‌ஷனல் பள்ளி உள்ளது. இங்கு மாங்காடு, போரூர், குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளி பஸ்சில் வந்து செல்கின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி பஸ் வந்தது. அதில் உதவியாளராக பாஸ்கர் என்பவர் இருந்தார்.

    அப்போது கொளப்பாக்கத்தை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவி ஒருவர் பள்ளி பஸ்சில் செல்ல மறுத்தார். பெற்றோர் விசாரித்தபோது பஸ்சில் உள்ள உதவியாளர் பாஸ்கர், சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பஸ்சில் இருந்த உதவியாளர் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான மாணவ- மாணவிகளின் பெற்றோர் அங்கு திரண்டனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பஸ்சில் ஏறி, இறங்கும் பல சிறுமிகளிடம் உதவி செய்வதுபோல் நடித்து பாஸ்கர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மற்றொரு உதவியாளர் மீதும் மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. #tamilnews
    ×