என் மலர்
நீங்கள் தேடியது "பேரூராட்சி"
- வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது மல்லியங்குப்பம் ஊராட்சி. இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மல்லியங் குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று மதியம் மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி மார்க்கெட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதைத்தொடர்ந்து மல்லியங்குப்பம் கிராமமக்கள் தங்களது கிராமத்தை ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பரணி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது கலெக்டர் பிரபுசங்கர் கூறும்போது, பிப்ரவரி 9-ந் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் துறை கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்ட நடைமுறை விதிகள் மேற்கொள்ளப் படும். உங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை.
- சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளது.
சென்னை:
சட்ட சபையில் கேள்வி நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் புதிய நகராட்சி, பேரூராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறினார்.
மேலும், அதன் மூலம் சில பகுதிகளில் மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும் தேவை ஏற்பட்டால் அவற்றை நகராட்சியாகவோ மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தலாம் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- தி.மு.க. நிர்வாகிகள் பேரா சிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தென்தாமரைகுளம் :
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப் பில் சாலை பணிகள் நடக்கிறது. இந்தப் பணிகளை முகிலன்குடியிருப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த் திகா பிரதாப், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாநில தலைமை செயற்குழு உறுப் பினர் ஆர்.எஸ்.பார்த்த சாரதி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, செயல் அலுவலர் சந்தோஷ் குமார், பேரூ ராட்சி துணை தலைவி மல்லிகா, கவுன்சி லர்கள் எட்வின்ராஜ், பூவியூர் காமராஜ், அமுதா பால்ராஜ், திருமதிபாய், தி.மு.க. நிர்வாகிகள் பேரா சிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை.
- மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சி 15வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
சர்வதேச சுற்றுலா பகுதியின் முக்கியத்துவம் கருதி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவெடுத்து உள்ளது. அதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செய்துவருகிறது.
இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை. இதற்கான அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கினர். மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக மாறுவதால் பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றல், தெரு விளக்கு, சாலை வசதி, சாலை அமைத்தல், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- மழைநீர் ஓடை சீரமைக்கப் படாமல் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு
- சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணியல் :
வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை அடிமடை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் வகுப்பு மாண வன் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி இருந்தது. மறுநாள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பத்மநாப புரம் கோட்டாட்சியர் கவுசிக் மழைநீர் ஓடையை சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டு சென்றி ருந்தார்.
இந்த நிலையில் மாணவன் இழுத்து செல்லப் பட்ட மழைநீர் ஓடை பெயரளவுக்கு மட்டும் சீரமைக்கப்பட்ட தாகவும், எதிரே உள்ள மழைநீர் ஓடை சீரமைக்கப் படாமல் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடைப்பு ஏற்பட்டு சாக் கடை தேங்கி நிற்கும் மழைநீர் ஓடைக்குள் பயணிகள் அவ்வப்போது விழுந்து அடிபட்டு செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தி யாகி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் இந்த மழைநீர் ஓடையை போர்க்கால அடிப்படையில் வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
- அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவட்டார்:
குலசேகரம் அருகே உள்ள ஆனைக்கூட்டுவிளை கிளக்கம்பாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் அஜில் ராஜ் (வயது 38). இவருக்கு அனுஜா (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜில் ராஜ் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுவுடன் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் மனோதங்கராஜிக்கு சால்வை அணிவித்தனர்
- அனைவரும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் தெற்கு ஒன்றியம் பாலப்பள்ளம் பேரூராட் சிக்குட்பட்ட குறும்பனை பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சியினர் பலர் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சால்வை அணிவித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், பாலப்பள்ளம் பேரூர் செயலாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 11 பேர் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
- எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு முன்பு உபகரணங்கள் ஆய்வு
மணவாளக்குறிச்சி :
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்து 20 மாதங்கள் ஆகிறது. 20 மாதங்கள் ஆகியும் மண்டைக்காடு பேரூராட்சி வார்டுகளில் எந்த வேலையும் நடக்க வில்லை என தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்ற னர்.
இந்நிலையில் பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி தலைமையில் துணை தலைவர் சுஜி, கவுன்சி லர்கள் முருகன், கிருஷ்ண ஜெயந்தி, விஜயலெட்சுமி, ரமேஷ், ஜெயந்தி, ஆன்ற லின் ஷோபா, லோபிஸ், உதயகுமார், சோணி ஆகிய 11 பேர் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாலை அலுவலக நேரம் முடிந்தும் அவர்கள் எழுந்து செல்லவில்லை.
இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செயல் அலு வலர் கலாராணி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இரவு 10 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், அலுவலக அதிகாரிகள் தொலைபேசி மூலமாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு முன்பு உபகரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், வார்டுகளில் முக்கிய இடங்களில் நாளை (இன்று) விளக்குப்போடப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
கன்னியாகுமரி :
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சிக் குட்பட்ட பால கிருஷ்ணன்புதூர், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் உதிரப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது.
அப்பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கும் திட்ட பணிக்கு ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மேலும், புத்தளம் பேரூராட்சிக் குட்பட்ட கீழபுத்தளம் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மணவாளபுரம், கீழபுத்தளம், புத்தளம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.35 லட்சமும், அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட தட்டரிப்பு அளம் பகுதியில் உள்ள தகனமேடை பகுதிக்கு செல்வதற்கு புதிய பாலம் அமைப்பதற்கு ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 88 லட்சத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் 2023-2024-ம் ஆண்டிற்கான மூலதன மானிய நிதியின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பேரூ ராட்சி பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட மேம்பாட்டு பணிக்காக நிதி ஒதுக்கி யதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
- வாறுகாலில் உள்ள சாக்கடைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆலங்குளம் தாலுகா அலுவலக வளாகம், அதனை சுற்றியுள்ள மாறுகால் போன்ற பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் வாறுகாலில் உள்ள சாக்கடைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ராஜசேகரன், வரி வசூலர் திருமலை வடிவம்மாள், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
- பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு நன்றி
இரணியல் :
இரணியல் பேரூராட்சியில் நடந்த சாதாரண கூட்டம் தலைவர் ஸ்ரீகலாமுருகன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ராணுவம் மற்றும் துணை ராணுவங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று 15-வது வார்டு கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் கொடுத்த மனு மீது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு 4-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டார்
- முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருவட்டார் :
பொன்மனை பேரூராட்சியும் முஞ்சிறை தனியார் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து பேரூராட்சி அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தின. பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயமாலினி, துணை தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் சாந்தி, கீது அமலாபுஷ்பம், சித்த மருத்துவ டாக்டர்கள் அரவிந்த், சுனிதா, மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இருமல், சளி, தோல் நோய்கள், ரத்த அழுத்தம், கழுத்து, இடுப்பு, எலும்பு தேய்மானம், பெண்களுக்கான உடல் பருமன், தைராய்டு கோளாறு, மாதவிடாய் கோளாறு குழந்தைகளுக்கான கணம், உடல்மெலிவு போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.