என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![முறையான வரவு-செலவு கணக்கு காட்டாததால் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு முறையான வரவு-செலவு கணக்கு காட்டாததால் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/28/1842853-tiruvar.webp)
முறையான வரவு-செலவு கணக்கு காட்டாததால் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக பதவியேற்றபோது பேரூராட்சி மன்றத்தின் கடன் ரூபாய் ஒரு கோடி என்று கூறப்பட்டது.
- பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிக்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சிமன்ற கூட்டம் மன்றவளாகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கலாதரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் முருகவேல் வாசித்தார். அப்பொழுது டெங்கு காய்ச்சலுக்காக மருந்து அடித்ததாக சுமார் ரூ.2 லட்சம் செலவு செய்ததாக கணக்கு கூறினார்களாம். மேலும், மழை நீர் கால்வாய்க்கு மூடி அமைப்பதில் பல்வேறு கணக்கு குளறுபடி இருப்பதாக மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும், சுப்ரமணிய நகர் பகுதியில் சாலை அமைக்காமலேயே பில் போட்டதாக பேரூராட்சி மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.
மேலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக பதவியேற்றபோது பேரூராட்சி மன்றத்தின் கடன் ரூபாய் ஒரு கோடி என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது மூன்று கோடி கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிக்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அப்படி இருக்க கடன் ஏன்? கூடியது. என்று காரசாரமாக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு பேரூராட்சி மன்ற தலைவரும், செயல் அலுவலரும் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொன்னரசி, சுஜாதா, சுகன்யா, அருணா, சதீஷ், முனுசாமி, குமார், ரகுமான்கான் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்து மன்றவளாகத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுகுமார் மன்ற பொருட்களை வாசிக்கும் முன்னரே கூட்டத்தை புறக்கணித்து வெளிநாட்டில் ஈடுபட்டார். இதனால் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது குறைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி இயக்குனர் மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)