நெற்குப்பை பேரூராட்சி மன்ற ஆலோசனை கூட்டம்

நெற்குப்பை பேரூராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
நெற்குப்பை  பேரூராட்சி மன்ற ஆலோசனை கூட்டம்
Published on

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

சேர்மன் புசலான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டது. பேரூராட்சியில் நடை பெற்று வரும் பணிகளின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

திட்ட இயக்குநரின் வேண்டு கோளுக்கிணங்க பேரூராட்சிகளில் அன்றாட பணிகள் மேற்கொள்ள உதவியாளர், எழுத்தாளர், மின் மற்றும் குடிநீர் பராமரிப்பு மேற்கொள்ள உதவியாளர், புள்ளிவிவர தொகுப்பாளர், அலுவலக காவலர், டிராக்டர் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் 10 பேரை பணி நியமனம் செய்தல், மலம், ஜலம் கழிப்பில்லா பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி எடுத்தல், குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றி நட்சத்திர அங்கீகாரம் பெற உறுதிமொழி எடுத்தல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

இளநிலை உதவியாளர் சேரலாதன், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com